கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படும் என்ற சூழல் இருந்தபோது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல முக்கிய முயற்சிகளை எடுத்தது. தற்போது மாணவர்களின் கொரோனா கால இடைவெளியை சரி செய்ய 'எண்ணும், எழுத்தும்' போன்ற அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இவ்வாறு கொரோனா காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கென்று தொடங்கப்பட்டது தான் ஏவூர்தி அறிவியல் (Rocket Science) பற்றிய இணையவழி வகுப்புகள்,அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமமத்தின் மூலம் வார இறுதி நாட்களில் அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடைபெற்றன. Brahmos Aerospace அமைப்பின் தந்தையாக அறியப்படும் சிவதாணுப்பிள்ளை அவர்கள் பயிற்சி வழங்கினார். 56 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளில் பங்கு பெற்றனர். அவர்களுக்கு பல கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகளில் வெற்றி பெற்று, 75 மாணவர்கள் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் அங்குள்ள யூரிகாகரின் விண்வெளி மையத்திற்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு அவர்கள் அங்கு பயணிக்க தேவையான பணிகளைச் செய்து வருகிறது.
|