இக்கால இசைக்கு பழந்தமிழ் இசையே அடிப்படை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகரன்
சென்னையில் அமைந்துள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'தமிழர் மரபில் இசைக்கருவிகள்' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் திரு. சந்திரசேகரன் அவர்கள் உலகத்திலேயே தமிழர்கள் மட்டுமே இயல்,இசை,நாடகம் என மொழியினை மூன்று வகைப்படுத்தினர். இக்காலத்தின் இசைக்கு பழமையான தமிழர் இசையே அடிப்படை என்று கூறினார். மேலும் அவர் இயற்கையிடம் இருந்து இசையையும், இசைக் கருவிகளையும் தமிழர்கள் பெற்றனர். இசைக்கருவிகளை தமிழர் நான்கு வகையாக பிரித்துள்ளனர். பேரியாழ்,மகரயாழ்,சகோடயாழ், செங்கோட்டு யாழ் போன்ற நரம்பிசைக் கருவிகள், ஒருமுகம், இருமுகம், மூன்று முகம் மற்றும் பன்முகம் கொண்ட தோல்க்கருவிகள் பழந்தமிழர்களால் இசைக்கப்பட்டதை சிலப்பதிகாரம், தொல்காப்பியம், கம்பராமாயணம் ஆகியவற்றின் மூலம் அறியலாம் எனக் கூறினார்.
தமிழ் இலக்கியத்தில் இசையோடு பாடுபவர்கள் பாணர் என்று அழைக்கப்பட்டதை குறிப்பிட்ட அவர் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்து பாரம்பரியமாக தொடரும் மரபிசையை மீட்பதற்கு இது போன்ற கருத்தரங்குகள் வேண்டும் என்று கூறினார். மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகரன்
|