விருதுநகர், வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடு மண்ணாலான பதக்கம் மற்றும் சங்கு வளையல் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 2022, மார்ச் மாதம் தொடங்கப்பட்ட முதற்கட்ட அகழாய்வுகள் முடிவு பெற்றுள்ளன. இந்த முதற்கட்ட அகழாய்வில் மூவாயிரத்திற்கும் அதிகமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரச் சான்றுகள் பல இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன. சென்ற மாதத்தில் (ஜூன்) இப்பழங்கால பொருட்களைப் பார்வையிட கண்காட்சி அரங்கம் அமைச்சர்கள், திரு. தங்கம் தென்னரசு, திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில் பழங்கால பொருட்கள் பல கிடைத்த வண்ணம் உள்ளன. தற்போது சுடு மண்ணால் செய்யப்பட்ட பதக்கமும், அழகிய வேலைப்பாடு உள்ள சங்கு வளையலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கீழடிக்குச் சமமாக இங்கும் பழம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
|