LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 14 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெம்மேலி பஞ்சாயத்து குச்சிபாளையம்  கிராமத்தில் பெருமாள் கோயில் அருகே குடிநீர்குழாய்க்காக  பள்ளம் தோண்டியபோது பழங்காலத்து 14  சிலைகள் கண்டுடெடுக்கப்பட்டன.
&&&&&&&&&&&&&&&&&&&
15-09-2023 காலை பொக்லைன்  மூலம் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது மண்ணுக்கடியில்  இரண்டு அடி ஆழத்தில் நடராஜர் சிலை இருப்பதை கண்டவர்கள் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
&&&&&&&&&&&&&&&&&&
 இதையடுத்து அதிகாரிகளின் முன்னிலையில் தொடர்ந்து பள்ளம் தோண்டியபோது,தோண்ட தோண்ட சுமார் 14 சிலைகள், துருவாச்சி போன்றவை கிடைத்தன. இயந்திரத்தால் நடராஜர் சிலை சேதமடைந்தது. 2 அடி உயரமுள்ள நடராஜர், சிவகாமசுந்தரி, வினாயகர், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் மற்றும் சில சுவாமி சிலைகள், திருவாச்சி  என 14 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
&&&&&&&&&&&&&&&&&&&&
மேலும், கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பாதுகாப்பாக பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன் பார்வையிட்டு அய்வு செய்து அவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம்  கொண்டுசென்றார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அதன் மதிப்பு பலகோடி இருக்கும்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த சிலைகள் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என கூறப்படுகிறது. இவைகள் எந்த காலத்தை சேர்ந்தது என ஆராய்சி செய்தபிறகே அதன் காலகட்டம் தெரியவரும் என்றும் ஒருவேளை அது ஐம்பொன் சிலைகளாக இருந்தால் அதன் மதிப்பு பலகோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "இந்த சிலைகள் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என தெரியவருகிறது. இதே நன்னிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டியபோது இதேபோல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தற்போதும் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இந்த கிராமத்துக்கும் தமிழர் வரலாற்றுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. இந்த பகுதியில் அகழாய்வு நடைபெற்றால் தமிழர்களின் வரலாறு வெளிச்சத்துக்கு வரும்" என தெரிவித்துள்ளனர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆதி வரலாறு இங்கு தமிழ் வரலாறு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "எங்கள் கிராமத்தில் இதுபோல பழங்கால சிலைகள் கண்டெடுக்கும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் தமிழரின் ஏதோ ஒரு மிக அசைக்கமுடியாத தொடர்புடன் வரலாற்றை சுமந்து வாழ்ந்துவருகிறோம் என்பது பெருமையாக உள்ளது. ஆதி வரலாறு இங்கு தமிழ் வரலாறு என்பது தெரியவந்துள்ளது. எங்கள் கிராமத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர் இதன் மூலம் அறியப்படும்போது நமது பெருமையை உலகறிய வேண்டி ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் நலமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெம்மேலி பஞ்சாயத்து குச்சிபாளையம்  கிராமத்தில் பெருமாள் கோயில் அருகே குடிநீர்குழாய்க்காக  பள்ளம் தோண்டியபோது பழங்காலத்து 14  சிலைகள் கண்டுடெடுக்கப்பட்டன.

15-09-2023 அன்று காலை பொக்லைன்  மூலம் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது மண்ணுக்கடியில்  இரண்டு அடி ஆழத்தில் நடராஜர் சிலை இருப்பதை கண்டவர்கள் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரிகளின் முன்னிலையில் தொடர்ந்து பள்ளம் தோண்டியபோது,தோண்ட தோண்ட சுமார் 14 சிலைகள், துருவாச்சி போன்றவை கிடைத்தன. இயந்திரத்தால் நடராஜர் சிலை சேதமடைந்தது. 2 அடி உயரமுள்ள நடராஜர், சிவகாமசுந்தரி, வினாயகர், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் மற்றும் சில சுவாமி சிலைகள், திருவாச்சி  என 14 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பாதுகாப்பாக பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன் பார்வையிட்டு அய்வு செய்து அவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம்  கொண்டுசென்றார்.

அதன் மதிப்பு பலகோடி இருக்கும்

இந்த சிலைகள் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என கூறப்படுகிறது. இவைகள் எந்த காலத்தை சேர்ந்தது என ஆராய்சி செய்தபிறகே அதன் காலகட்டம் தெரியவரும் என்றும் ஒருவேளை அது ஐம்பொன் சிலைகளாக இருந்தால் அதன் மதிப்பு பலகோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "இந்த சிலைகள் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என தெரியவருகிறது. இதே நன்னிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டியபோது இதேபோல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தற்போதும் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இந்த கிராமத்துக்கும் தமிழர் வரலாற்றுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. இந்த பகுதியில் அகழாய்வு நடைபெற்றால் தமிழர்களின் வரலாறு வெளிச்சத்துக்கு வரும்" என தெரிவித்துள்ளனர்.

ஆதி வரலாறு இங்கு தமிழ் வரலாறு

துகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "எங்கள் கிராமத்தில் இதுபோல பழங்கால சிலைகள் கண்டெடுக்கும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் தமிழரின் ஏதோ ஒரு மிக அசைக்கமுடியாத தொடர்புடன் வரலாற்றை சுமந்து வாழ்ந்துவருகிறோம் என்பது பெருமையாக உள்ளது. ஆதி வரலாறு இங்கு தமிழ் வரலாறு என்பது தெரியவந்துள்ளது. எங்கள் கிராமத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர் இதன் மூலம் அறியப்படும்போது நமது பெருமையை உலகறிய வேண்டி ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் நலமாக இருக்கும்" என தெரிவித்துள்ளனர்.

by Kumar   on 15 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.