சிவனடியாரான சிறுத்தொண்டரின் கதையைப் பக்தி உணர்வுடன் நிகழ்த்தும் கூத்து வடிவிலான கலை அன்னக்கொடி விழாக் கூத்தாகும். அன்னம் என்றால் உணவு என்று பொருள் . எனவே, இவ்விழாவினை உணவு படையல் விழா என்றும் கொள்ளலாம் . சிறுத்தொண்டர் முக்தியடைந்த நாளான சித்திரைத் திங்கள் பரணி நட்சத்திர நாள் இதற்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இவ்விழா பெரும்பாலும் ஆற்றங்கரை, ஏரி, குளம், பொது நீர்நிலை போன்ற இடங்களிலிருந்தே தொடங்கும். இவ்விழாவினில் பங்கேற்பதன் மூலம் மகப்பேறு கிட்டும் , கெட்ட ஆவியோ அல்லது நோயோ அண்டாது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களின் மனதில் உள்ளது.
|