LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்க வெங்கையா நாயுடு வலியுறுத்தல்!

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னையில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: 
தமிழகம் ஒரு துடிப்பான மாநிலம்; எல்லா துறைகளிலும் தடம் பதிப்பதில், முன்னிலையிலும், முன்னோடியாகவும் திகழ்கிறது. இந்தியா வலிமை மிக்க நாடாக வேண்டும்; ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். தற்போது, உலக நாடுகளின் பார்வை, இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.


சீர்திருத்தம், நடைமுறைப் படுத்துதல், மறுசீரமைத்தல் போன்றவற்றை, பிரதமர் மோடி, தாரக மந்திராமாக வைத்துள்ளர். இந்தியா, 135 கோடி மக்களுக்கானது.இதில், 18 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழும், 20 சதவீத பேர், கல்வியறிவு இன்றியும் உள்ளனர். இவர்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அரசின் திட்டங்கள், அனைவரையும் சென்றடைய வேண்டும்.வரும், 15-ந் தேதி, நாட்டின், 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், என் சிந்தனைகளை பகிர விரும்புகிறேன்.

நான் ஒரு அரசியல்வாதியாக சொல்லவில்லை. நான் இனி, தேர்தலில் போட்டியிட போவதும் இல்லை; அரசியலுக்கு வரப்போவதும் இல்லை. நான், சமூக விழிப்புணர்வுக்கான பணிகளில் ஈடுபட உள்ளேன்.சட்டசபை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய மூன்றையும் பலப்படுத்த வேண்டும்.

சட்டத்தை இயற்றுவது மட்டுமின்றி, அதை நடைமுறைப்படுத்துவதும், பின்பற்றுவதும் அவசியம். நீதிமன்றங்கள் மிகவும் பொறுப்புடையவை. சட்ட நடைமுறைகள், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில், 60 ஆயிரம் வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில், 44 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சமீபத்தில் தெரிவித்துள்ளார். வழக்கின் தன்மையை பொறுத்து, அவற்றை உடனடியாக விசாரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், ஒரு தேர்தல் வழக்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது. இதற்காக, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.

மேலும், உச்ச நீதிமன்ற கிளைகளை விரிவுபடுத்த வேண்டும். முதற்கட்டமாக, உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்கலாம்.

அதன்பின், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியிலும் அமைக்க வேண்டும். நீதியை பெறுவதற்காக, மக்கள் நீண்ட துாரம் பயணம் செய்து, அதிக பணம் செலவிடுவதை இதன் வாயிலாக தவிர்க்கலாம்.

மாநில உயர் நீதிமன்றங்களில், அந்தந்த மாநில மொழிகளிலேயே வாதாட அனுமதிக்க வேண்டும். நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதுடன், அரசியல் சாசன வழக்குகளை விசாரிக்கவும், மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கவும், தனித் தனி பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் தேர்வு முறையில் மாற்றங்கள் வேண்டும், 'கொலீஜியம் முறையில், குறைகள் உள்ளன. இதனால், நீதிபதிகளை நியமிக்க, தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனை அமைக்க வேண்டும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

by Mani Bharathi   on 13 Aug 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.