LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டூரிங் டாக்கீஸ் தான் எனது கடைசி படம் எஸ்.ஏ. சந்திரசேகரன் !!

கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஏ. சந்திரசேகரன். 


தற்போது இவரது மகனான விஜய், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


எஸ்.ஏ. சந்திரசேகரன் இதுவரை 68 திரைப்படங்களை இயக்கி உள்ளார். தற்போது இவர் தனது 69ஆவது படமாக "டூரிங் டாக்கீஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 


இந்த படம் குறித்து செய்தியாளர்களிடையே எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசியதாவது, 


இந்த படம் எனது 69ஆவது படமாகவும், கனவுப் படமாகவும் "டூரிங் டாக்கீஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது. 3 சிறிய கதைத் தொடர்களை ஒருங்கிணைத்து, இந்தப் படத்தின் கதையை அமைத்துள்ளேன்.


இந்த படத்தில் ஒரு முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். வயதானாதால், எனக்கு ஓய்வு தேவைப்படும் என்பதற்காக, இனிமேல் திரைப்படங்களை இயக்க வேண்டாம் என்று என்னுடைய மகன் விஜய் அன்புக் கட்டளையிட்டுள்ளார். அந்த வகையில், "டூரிங் டாக்கீஸ்' எனது இறுதித் திரைப்படமாக அமையும். ஆனால், உழைப்புக்கு ஏது ஓய்வு என்பது எனது கருத்து.


மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "கத்தி' திரைப்படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, சிலர் பிரச்னையாக்கி வருகின்றனர் என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

by Swathi   on 30 Aug 2014  0 Comments
Tags: Dooring Talkies   SA Chandrasekhar   டூரிங் டாக்கீஸ்              
 தொடர்புடையவை-Related Articles
டூரிங் டாக்கீஸ் படத்தை தொடர்ந்து, இரண்டு படங்களில் ஹீரோவாகும் எஸ்.ஏ.சி !! டூரிங் டாக்கீஸ் படத்தை தொடர்ந்து, இரண்டு படங்களில் ஹீரோவாகும் எஸ்.ஏ.சி !!
டூரிங் டாக்கீஸ் - திரை விமர்சனம் !! டூரிங் டாக்கீஸ் - திரை விமர்சனம் !!
டூரிங் டாக்கீஸ் தான் எனது கடைசி படம் எஸ்.ஏ. சந்திரசேகரன் !! டூரிங் டாக்கீஸ் தான் எனது கடைசி படம் எஸ்.ஏ. சந்திரசேகரன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.