LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

எட்டாம் திருமுறை-42

 

42.சென்னிப்பத்து - சிவவிளைவு
(திருப்பெருந்துறையில் அருளியது) 
ஆசிரிய விருத்தம்
தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் 
மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான் 
யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான் 
தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே. 579
அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் 
சிட்டன் மேயச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் 
மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன் 
வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே. 580
நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன் 
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன் 
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான் 
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே. 581
பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச் 
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான் 
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் 
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 582
மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கியான் 
வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான் 
காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய 
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 583
சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுந் துய்யலாம் 
பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும் 
முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும் 
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 584
பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேரருள்தந் தருளினான் 
அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல் 
உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம் 
திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 585
புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும் 
எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று 
தொழுத கையின ராகித் துய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு 
வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 586
வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும் 
உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்தனாய் நின்ற எம்பிரான் 
அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ் 
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 587
முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தனைச் 
சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடித் திரிதரும் 
பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணியினோ 
சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 588
திருச்சிற்றம்பலம்

 

42.சென்னிப்பத்து - சிவவிளைவு

(திருப்பெருந்துறையில் அருளியது) 

ஆசிரிய விருத்தம்

 

 

தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் 

மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான் 

யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான் 

தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே. 579

 

அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் 

சிட்டன் மேயச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் 

மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன் 

வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே. 580

 

நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன் 

தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன் 

மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான் 

பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே. 581

 

பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச் 

சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான் 

எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் 

வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 582

 

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கியான் 

வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான் 

காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய 

சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 583

 

சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுந் துய்யலாம் 

பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும் 

முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும் 

அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 584

 

பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேரருள்தந் தருளினான் 

அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல் 

உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம் 

திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 585

 

புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும் 

எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று 

தொழுத கையின ராகித் துய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு 

வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 586

 

வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும் 

உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்தனாய் நின்ற எம்பிரான் 

அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ் 

செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 587

 

முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தனைச் 

சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடித் திரிதரும் 

பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணியினோ 

சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 588

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 25 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.