LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

எட்டாம் திருமுறை-திருச்சிற்றம்பலக் கோவையார்-18

பதினெட்டாம் அதிகாரம்


18. வரை பொருட் பிரிதல்


பேரின்பக் கிளவி

வரைபொருட் பிரிதல் துறைமுப் பத்து
மூன்றுங் கருணை தோன்ற அருளே
உணர்த்தலும் உணர்தலும் திரோதையும் பரையும்
தெரிசன மாகித் திவ்விய இன்பம்
கூடும் குறியும் குலவி யுணர்தல்.


1. முலை விலை கூறல்

குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின்குலத் திற்கும் வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநர்க்கே.     266
கொளு
கொலைவேற் கண்ணிக்கு விலையிலை என்றது.


2. வருமது கூறி வரைவுடம்படுத்தல்

வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் நித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத் துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழல் ஈசர்சிற் றம்பலம் தாம்பணியார்க்(கு)
அடுத்தன தாம்வரின் பொல்லா(து) இரவின்நின் ஆரருளே.     267
கொளு
தொடுத்தன விடுத்துத் தோகை தோளெய்(து)
இடுக்கண் பெரிது இரவரின் என்றது.


3. வரைபொருட் பிரிவை உரையெனக் கூறல்

குன்றங் கிடையும் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து
மின்தங் கிடைநும் மையும் வந்து மேவுவன் அம்பலம்சேர்
மன்தங்(கு) இடைமரு(து) ஏகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னச்
சென்(று)அங்(கு) இடைகொண்டு வாடா வகைசெப்பு தேமொழியே.     268
கொளு
ஆங்க வள்வயின் நீங்கல் உற்றவன்
இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது.


4. நீயே கூறு என்றல்

கேழ்ஏ வரையும்இல் லோன்புலி யூர்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியாள் இரவரி னும்பகற் சேறியென்று
வாழேன் எனஇருக் கும்வரிக் கண்ணியை நீவருட்டித்
தாழேன் எனஇடைக் கண்சொல்லி ஏகு தனிவள்ளலே.     269
கொளு
காய்கதிர் வேலோய் கனங்குழை அவட்கு
நீயே உரை நின்செலவு என்றது.


5. சொல்லாது ஏகல்

வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன்
குருட்டின் புகச்செற்ற கோன்புலி யூர்குரு கார்மனம் போன்(று)
இருட்டிற் புரிகுழ லாட்(கு)எங்ங னேசொல்லி ஏகுவனே.     270
கொளு
நிரைவளை வாட உரையா(து) அகன்றது.


6. பிரிந்தமை கூறல்

நல்லாய் நமக்குற்ற(து) என்னென்(று) உரைக்கேன் நமர்தொடுத்த
எல்லா நிதியும் உடன்விடுப் பான்இமை யோர் இறைஞ்சும்
மல்லார் கழல்அழல் வண்ணர்வண் தில்லை தொழார்கள் அல்லால்
சொல்லா அழற்கடம் இன்றுசென் றார் சிறந்தவரே.     271
கொளு
தேங்கமழ் குழலிக்குப் பாங்கி பகர்ந்தது.


7. நெஞ்சொடு கூறல்

அருந்தும் விடம்அணி யாம்மணிகண்டன்மற்(று) அண்டர்க்கெல்லாம்
மருந்தும் அமிர்தமும் ஆகும்முன் னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்தும் கடன்நெறி செல்லும்இவ் வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாம்இனி வாழ்வகையே.     272
கொளு
கல்வரை நாடன் சொல்லா(து) அகல
மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்து.


8. நெஞ்சொடு வருந்தல்

ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழும்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த மணலிற் கலந்தகன்றார்
தேர்ப் பின்னைச் சென்றஎன்
நெஞ்(சு)என் கொலாம்இன்று செய்கின்றதே.     273
கொளு
வெற்பன் நீங்கப் பொற்பு வாடியது.


9. வருத்தம் கண்டு உரைத்தல்

கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும்
வானவர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே.     274
கொளு
அழலுறு கோதையின் விழுமுறு பேதையை
நீங்கலரெனப் பாங்கி பகர்ந்தது.


10. வழியழுகி வற்புறுத்தல்

மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்(கு)என் னோவந்த வாறென்பர் ஏந்திழையே.     275
கொளு
சூழிருங் கூந்தலைத் தோழி தெருட்டியது.


11. வன்புறை எதிர் அழிந்து இரங்கல்

வந்(து)ஆய் பவரைஇல்லாமயில் முட்டை இளையமந்தி
பந்தா(டு) இரும்பொழில் பல்வரை நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென் தில்லை தொழார்குழுப்போல்
சிந்தா குலமுற்றப் பற்றின்றி நையும் திருவினர்க்கே.     276
கொளு
வன்கறை வேலோன் வரைவு நீட
வன்புறை அழிந்தவள் மனம்அழுங் கியது.


12. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்

மொய்யென் பதேஇழை கொண்டவன் என்னைத்தன் மொய்கழற்(கு)ஆட்
செய்என் பதேசெய் தவன்தில்லைச் சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்என்ப தேகருத்தாயின் புரிகுழற் பொற்றொடியாய்
மெய்என்ப(து) ஏதுமற்(று) இல்லைகொலாம்இவ் வியவிடத்தே.     277
கொளு
வேற்றடங் கண்ணியை ஆற்று வித்தது.


13. தேறாது புலம்பல்

மன்செய்த முன்னாள் மொழிவழி யேஅன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில் லாஎன(து) இன்னுயிரும்
பொன்செய்த மேனியன் தில்லை யுறாரின் பொறைஅரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல் மொய்குழலே.     278
கொளு
தீதறு குழலி தேற்றத் தேறாது
போதுறு குழலி புலம்பியது.


14. காலம் மறைத்துரைத்தல்

கருந்தினை ஓம்பக் கடவுள் பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றில்துன்றி
விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே.     279
கொளு
காந்தள் கருவுறக் கடவுள் மழைக்கென்(று)
ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது.


15. தூது வர உரைத்தல்

வென்றவர் முப்புரம் சிற்றம் பலத்திற்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக் கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந் தேமையும் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே.     280
கொளு
ஆங்கொரு தூதுவரப் பாங்கிகண் டுரைத்தது.


16. தூது கண்டழுங்கல்

வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்
ஒருவனது அன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தன(து) ஆவிகொண்(டு) ஏகிஎன் நெஞ்சில்தம்மை
இருவின காதலர் ஏதுசெய் வான்இன்(று) இருக்கின்றதே.     281
கொளு
அயலுற்ற தூதுவரக் கயலுற்றகண்ணி மயலுற்றது.


17. மெலிவு கண்டு செவிலி கூறல்

வேயின மென்தோள் மெலிந்தோளி வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்(கு) அமரன்சிற் றம்பலத்தான்
சேயின(து) ஆட்சியில் பட்டன ளாம்இத் திருந்திழையே.     282
கொளு
வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மேவிய
வாடா நின்ற கோடாய் கூறியது.


18. கட்டு வைப்பித்தல்

கணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றம் கொள்ளும் பருவமு றாள்குறு காஅசுரர்
நிணங்குற்ற வேல்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோய்அறி வுற்றுரை யாடுமின் அன்னையரே.     283
கொளு
மால்கொண்ட கட்டுக் கால்கொண்டது.


19. கலக்கமுற்று நிறுத்தல்

மாட்டியன் றேஎம் வயின்பெரு நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப(து) ஓடிய வா(று)இவள் உள்ளமெல்லாம்
காட்டியன் றேநின்ற தில்லைச்தொல் லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன்(று) ஏர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே.     284
கொளு
தெய்வத்தில் தெரியுமென
எவ்வத்தின் மெலிவுற்றது.


20. கட்டுவித்திக் கூறல்

குயிலிதன் றேயென்ன லாம்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணம் காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லில் தோன்றும் அவன்வடிவே.     285
கொளு
கட்டு வித்தி விட்டு ரைத்தது.


21. வேலனை அழைத்தல்

வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்(து)அவி யக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றான் இருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே.     286
கொளு
வெறியாடிய வேலனைக் கூஉய்
நெறியார் குழலி தாயர் நின்றது.


22. இன்னல் எய்தல்

அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்(பு)அயலார்
பெயர்ந்தும் ஒழியா விடின்என்னை பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான(து) அம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதின் ஒழியினென் ஆதும் துறைவனுக்கே.     287
கொளு
ஆடிய வெறியிற் கூடுவ(து) அறியாது
நன்னறுங் கோதை இன்னல் எய்தியது.


23. வெறி விலக்குவிக்க நினைதல்

சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா அழகிதன் றேஇறை தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றாம் இவட்கும் மொழிதல்இல் லேன்மொழி யாதும்உய்யேன்
குன்றார் துறைவர்க்(கு) உறுவேன் உரைப்பன் இக் கூர்மறையே.     288
கொளு
அயல்திரு வெறியின் மயல்தரு மென
விலக்கல் உற்ற குலக்கொடி நினைந்தது.


24. அறத்தொடு நிற்றலை உரைத்தல்

யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய
வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே.     289
கொளு
வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்(கு)
அறத்தொடு நின்ற ஆயிழை உரைத்தது.


25. அறத்தொடு நிற்றல்

வண்டலுற் றேம்எங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதோர் போழ்(து)உடை யான்புலியூர்க்
கொண்டலுற்(று) ஏறும் கடல்வர எம்உயிர் கொண்டுதந்து
கண்டலுற்(று) ஏர்நின்ற சேரிச்சென் றான்ஓர் கழலவனே.     290
கொளு
செய்த வெறியின் எய்துவது அறியாது
நிறத்தொடித் தோழிக்(கு) அறத்தொடு நின்றது.


26. ஐயந்தீரக் கூறல்

குடிக்கலர் கூறினும் கூறா வியன்தில்லைக் கூத்தன்தாள்
முடிக்(கு)அல ராக்கும்மொய் பூந்துறை வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாய்அறியும்
படிக்கல ராம்இவை என்நாம் மறைக்கும் பரிசுகளே.     291
கொளு
விலங்குதல் விரும்பு மேதரு தோழி
அலங்கற் குழலிக்(கு) அறிய உரைத்தது.


27. வெறி விலக்கல்

விதியுடை யார்உண்க வேரி விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினில் பாய்புனல் யாம் ஒழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின்
மதியுண்டை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே.     292
கொளு
அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி
வெறி விலக்கப் பிறிதுரைத்தது.


28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல்

மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தார் ஒருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே.     293
கொளு
சிறப்புடைச் செவிலிக்(கு) அறத்தொடு நின்றது.


29. நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல்

இளையாள் இவளைஎன் சொல்லிப் பரவுதும் ஈர்எயிறு
முளையா அளவின் முதுக்குறைந் தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச் சிற்றம் பலத்துமன்னன்
திளையா வரும்அரு விக்கயி லைப்பயில் செல்வியையே.     294
கொளு
கற்பினின் வழாமை நிற்பித்து எடுத்தோள்
குலக்கொடி தாயர்க்(கு) அறத்தொடு நின்றது.


30. தேர் வரவு கூறல்

கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளினம் ஆர்ப்பப் பொருதிரை யார்ப்பப் புலவர்கள்தம்
வள்ளினம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின்
வெள்ளினம் ஆர்ப்ப வரும்பெரும் தேரின்று மெல்லியலே.     295
கொளு
மணிநெடுந் தேரோன் அணிதிணின் வருமென
யாழியல் மொழிக்குத் தோழி சொல்லியது.


31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்

பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மால்அயற்கும்
காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் திலலையன்ன
வாரண வும்முலை மன்றலென்(று) ஏங்கும் மணமுரசே.     296
கொளு
நிலங்காவலர் நீண்மணத்தின்
நலங்கண்டவர் நயந்துரைத்தது.


32. ஐயுற்றுக் கலங்கல்

அடற்களி யாவர்க்கும் அன்பர்க்(கு) அளிப்பவன் துன்பஇன்பம்
படக்களி யாவண் டறைபொழில் தில்லைப் பரமன்வெற்பில்
கடக்களி யானை கடிந்தவர்க் கோஅன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநகர் ஆர்க்கும் வியன்முரசே.     297
கொளு
நல்லவர் முரசுமற்(று) அல்லவர் முரசெனத்
தெரிவ ரிதென அரிவை கலங்கியது.


33. நிதி வரவு கூறா நிற்றல்

என்கடைக் கண்ணினும் யான்பிற ஏத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே.     298
கொளு
மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி
திகழ் நிதி மடந்தைக்குத் தெரிய உரைத்தது.


வரை பொருட் பிரிதல் முற்றிற்று.



திருச்சிற்றம்பலம்

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.