|
||||||||
ஐந்தாம் திருமுறை-30 |
||||||||
5.030.திருப்பராய்த்துறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருப்பராய்த்துறைநாதர்.
தேவியார் - பசும்பொன்மயிலம்மை.
1365 கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே. 5.030.1
நீர் பரந்துவருகின்ற காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பராய்த்துறையில் விரும்பி எழுந்தருளியிருக்கும் அருட்செல்வர், தம்மடியடைந்த அன்பர்கட்குப் பக்குவகாலம் வருந் துணையும் மறைந்துநின்று அருள்வர்: பின் அக்காலம் வாய்த்தவழி, அவர்வினைகளைச் சுருக்கிக் கெடுக்குமாற்றில் வல்லவர்; செஞ்சடையிற் கங்கையை உடையார், (காலத்தில் வந்தடைந்தவர் வினைகளை மறையும்படிச் செய்பவர்; விரிந்த கங்கையைத் தம் செஞ்சடையில் சுருக்குமாற்றிலும் வல்லவர் என்றும் இணைக்கலாம்.)
1366 மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோ டாறங்கம்
சேட னார்தென்ப ராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே. 5.030.2
தென்பராய்த்துறையுறையும் அருட்செல்வர், செருக்குடைய யானையின் பச்சைத் தோலினால் போர்த்தித் தம் திருமேனியை மூடியவர்; வேதங்கள் நான்கினோடு, அங்கங்கள் ஆறினையும் பாடியவர்; மிக்க பெருமையை உடையவர்; அப்பெருமானைத் தேடிக்கொண்டு சென்று அடியேன் காண்பேன்.
1367 பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்
நட்ட மாடுவர் நள்ளிரு ளேமமும்
சிட்ட னார்தென்ப ராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை யறிவரே. 5.030.3
தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் பட்டமணிந்த நெற்றியினை உடையவர்; பாலனைய நிலவு சொரியும் மதிக்கீற்றினை உடையவர்; நள்ளிருளில் உலகிற்கு இன்பம் செய்யும் பொருட்டு நடனம் ஆடுபவர்; உயர்வுடையவர்; தம்மிடம் விருப்பமாயிருக்கும் அடியார்களைத் தாம் அறியும் இயல்பினர் ஆவர்.
1368 முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிருப் பாரை யறிவரே. 5.030.4
தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர், அறியாமையொடு கூடிய சில சொற்களைப் பலர் முன்னிலையிலும் பேசுவார். எலும்புகள் பலவற்றைப் பூண்டு திரிவார். தம்மீது அன்பராய் இருப்பாரை நன்கு அறியும் இயல்பினர்.
1369 போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே. 5.030.5
உலகில் உள்ளவர்களே! தென்பராய்த்துறையில் உறைகின்ற ஒளி வடிவான பெருமானை மகரந்தத் தொடும் கூடிய போதுகளைக்கொண்டு புனைந்து தாதவிழும் சடையுடைய அச்சங்கரன் திருவடிகளில் துயரங்களைத் தீர்த்தருள்க என்று பரவித் தொழுதெழுந்து உய்வீர்களாக.
1370 நல்ல நான்மறை யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்தென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே. 5.030.6
நெஞ்சே! தென்பராய்த்துறையில் உறைகின்ற அருட்செல்வரும், நல்லனவாகிய நான்கு மறைகளை ஓதிய நம்பரும், பல இல்லங்களிலும் வெள்ளியதலையிற் பலிகொள்ளும் இயல் பினரும், தில்லைத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய பெருமானை விரைந்து வணங்கி மெய்ம்மையாகத் தொழுவாயாக!
1371 நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி யிழிபுனல் போன்றதே. 5.030.7
நெருப்பினைக் குவித்துவைத்தாலொத்த நீண்ட சடை உடையவரும், மலையினையொத்த மதயானையினை உரித்துப் போர்த்தவரும் ஆகிய திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமார்பிற் புரள்கின்ற முந்நூல், மலையினை அரித்துக் கொண்டு இழிகின்ற அருவிப்புனலைப் போன்றுள்ளது.
1372 எட்ட விட்ட விடுமண லெக்கர்மேல்
பட்ட நுண்துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே. 5.030.8
வானை எட்டுமாறு இட்ட மணலிடு குன்றின் மேல் நுண்ணிய நீர்த்துளிகள் பாய்கின்ற பராய்த்துறையில் உறைகின்ற உயர்ந்த இறைவன் சேவடிகளிற் சென்று அடையும் வல்லமை உடையீராயின், நம்வினைகளாய் உள்ளவை நம்மைவிட்டு நீங்கிக் கெடும்.
1373 நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராய்வளைந் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை யறிவரே. 5.030.9
நெருப்பு அராவி நிமிர்ந்ததனையொத்த நீண்ட சடையையும், தந்தத்தை அராவி வளைத்தது போன்ற பிறைமதியையும் உடையராய்த் திருப்பராய்த்துறையில் விரும்பியெழுந்தருளி இருக்கும் அருட்செல்வர் தம்மிடம் விருப்பமாக உள்ளவர்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவர்.
1374 தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்
இண்டை கட்டி யிணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே. 5.030.10
திருப்பராய்த்துறைத் தலத்து எழுந்தருளியிருப்பவரும், பாண்டரங்கக் கூத்துடையவரும் ஆகிய இறைவர்க்குற்ற தொண்டுகளைப்பற்றிப் பாடியும், அப்பெருமான் இணையடிகளில் இண்டைமாலை சாத்தியும், தூமலர்கள் தூவியும், கண்டும், உள்ளத்திற் கொண்டும் அடியேன் உய்ந்து போவன்.
1375 அரக்க னாற்ற லழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே. 5.030.11
இராவணனது ஆற்றலை அழித்த அழகனும், நீர் பரக்கின்ற பொன்னி மன்னுகின்ற பராய்த்துறையில் இருக்கை பொருந்திய ஈசனுமாகிய பெருமானை ஏத்துவீர்களாக! நும்வினைகள் விரைந்து போய்த் தொலையும்; காண்பீர்களாக.
திருச்சிற்றம்பலம்
5.030.திருப்பராய்த்துறை திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - திருப்பராய்த்துறைநாதர். தேவியார் - பசும்பொன்மயிலம்மை.
1365 கரப்பர் கால மடைந்தவர் தம்வினை சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப் பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத் திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே. 5.030.1
நீர் பரந்துவருகின்ற காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பராய்த்துறையில் விரும்பி எழுந்தருளியிருக்கும் அருட்செல்வர், தம்மடியடைந்த அன்பர்கட்குப் பக்குவகாலம் வருந் துணையும் மறைந்துநின்று அருள்வர்: பின் அக்காலம் வாய்த்தவழி, அவர்வினைகளைச் சுருக்கிக் கெடுக்குமாற்றில் வல்லவர்; செஞ்சடையிற் கங்கையை உடையார், (காலத்தில் வந்தடைந்தவர் வினைகளை மறையும்படிச் செய்பவர்; விரிந்த கங்கையைத் தம் செஞ்சடையில் சுருக்குமாற்றிலும் வல்லவர் என்றும் இணைக்கலாம்.)
1366 மூடி னார்களி யானையின் ஈருரி பாடி னார்மறை நான்கினோ டாறங்கம் சேட னார்தென்ப ராய்த்துறைச் செல்வரைத் தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே. 5.030.2
தென்பராய்த்துறையுறையும் அருட்செல்வர், செருக்குடைய யானையின் பச்சைத் தோலினால் போர்த்தித் தம் திருமேனியை மூடியவர்; வேதங்கள் நான்கினோடு, அங்கங்கள் ஆறினையும் பாடியவர்; மிக்க பெருமையை உடையவர்; அப்பெருமானைத் தேடிக்கொண்டு சென்று அடியேன் காண்பேன்.
1367 பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர் நட்ட மாடுவர் நள்ளிரு ளேமமும் சிட்ட னார்தென்ப ராய்த்துறைச் செல்வனார் இட்ட மாயிருப் பாரை யறிவரே. 5.030.3
தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் பட்டமணிந்த நெற்றியினை உடையவர்; பாலனைய நிலவு சொரியும் மதிக்கீற்றினை உடையவர்; நள்ளிருளில் உலகிற்கு இன்பம் செய்யும் பொருட்டு நடனம் ஆடுபவர்; உயர்வுடையவர்; தம்மிடம் விருப்பமாயிருக்கும் அடியார்களைத் தாம் அறியும் இயல்பினர் ஆவர்.
1368 முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர் என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர் தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார் அன்ப ராயிருப் பாரை யறிவரே. 5.030.4
தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர், அறியாமையொடு கூடிய சில சொற்களைப் பலர் முன்னிலையிலும் பேசுவார். எலும்புகள் பலவற்றைப் பூண்டு திரிவார். தம்மீது அன்பராய் இருப்பாரை நன்கு அறியும் இயல்பினர்.
1369 போது தாதொடு கொண்டு புனைந்துடன் தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள் வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச் சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே. 5.030.5
உலகில் உள்ளவர்களே! தென்பராய்த்துறையில் உறைகின்ற ஒளி வடிவான பெருமானை மகரந்தத் தொடும் கூடிய போதுகளைக்கொண்டு புனைந்து தாதவிழும் சடையுடைய அச்சங்கரன் திருவடிகளில் துயரங்களைத் தீர்த்தருள்க என்று பரவித் தொழுதெழுந்து உய்வீர்களாக.
1370 நல்ல நான்மறை யோதிய நம்பனைப் பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத் தில்லை யான்தென் பராய்த்துறைச் செல்வனை வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே. 5.030.6
நெஞ்சே! தென்பராய்த்துறையில் உறைகின்ற அருட்செல்வரும், நல்லனவாகிய நான்கு மறைகளை ஓதிய நம்பரும், பல இல்லங்களிலும் வெள்ளியதலையிற் பலிகொள்ளும் இயல் பினரும், தில்லைத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய பெருமானை விரைந்து வணங்கி மெய்ம்மையாகத் தொழுவாயாக!
1371 நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப் பருப்ப தம்மத யானை யுரித்தவன் திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல் பொருப்ப ராவி யிழிபுனல் போன்றதே. 5.030.7
நெருப்பினைக் குவித்துவைத்தாலொத்த நீண்ட சடை உடையவரும், மலையினையொத்த மதயானையினை உரித்துப் போர்த்தவரும் ஆகிய திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமார்பிற் புரள்கின்ற முந்நூல், மலையினை அரித்துக் கொண்டு இழிகின்ற அருவிப்புனலைப் போன்றுள்ளது.
1372 எட்ட விட்ட விடுமண லெக்கர்மேல் பட்ட நுண்துளி பாயும் பராய்த்துறைச் சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல் விட்டு நம்வினை யுள்ளன வீடுமே. 5.030.8
வானை எட்டுமாறு இட்ட மணலிடு குன்றின் மேல் நுண்ணிய நீர்த்துளிகள் பாய்கின்ற பராய்த்துறையில் உறைகின்ற உயர்ந்த இறைவன் சேவடிகளிற் சென்று அடையும் வல்லமை உடையீராயின், நம்வினைகளாய் உள்ளவை நம்மைவிட்டு நீங்கிக் கெடும்.
1373 நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை மருப்ப ராய்வளைந் தாலொக்கும் வாண்மதி திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார் விருப்ப ராயிருப் பாரை யறிவரே. 5.030.9
நெருப்பு அராவி நிமிர்ந்ததனையொத்த நீண்ட சடையையும், தந்தத்தை அராவி வளைத்தது போன்ற பிறைமதியையும் உடையராய்த் திருப்பராய்த்துறையில் விரும்பியெழுந்தருளி இருக்கும் அருட்செல்வர் தம்மிடம் விருப்பமாக உள்ளவர்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவர்.
1374 தொண்டு பாடியுந் தூமலர் தூவியும் இண்டை கட்டி யிணையடி யேத்தியும் பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே. 5.030.10
திருப்பராய்த்துறைத் தலத்து எழுந்தருளியிருப்பவரும், பாண்டரங்கக் கூத்துடையவரும் ஆகிய இறைவர்க்குற்ற தொண்டுகளைப்பற்றிப் பாடியும், அப்பெருமான் இணையடிகளில் இண்டைமாலை சாத்தியும், தூமலர்கள் தூவியும், கண்டும், உள்ளத்திற் கொண்டும் அடியேன் உய்ந்து போவன்.
1375 அரக்க னாற்ற லழித்த அழகனைப் பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை இருக்கை மேவிய ஈசனை யேத்துமின் பொருக்க நும்வினை போயறுங் காண்மினே. 5.030.11
இராவணனது ஆற்றலை அழித்த அழகனும், நீர் பரக்கின்ற பொன்னி மன்னுகின்ற பராய்த்துறையில் இருக்கை பொருந்திய ஈசனுமாகிய பெருமானை ஏத்துவீர்களாக! நும்வினைகள் விரைந்து போய்த் தொலையும்; காண்பீர்களாக.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|