|
||||||||
ஐந்தாம் திருமுறை-92 |
||||||||
5.092.காலபாராயணம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1973 கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே. 5.092.1
காலதூதர்களே! கண்டுகொள்ள அரியவன். உள்ளத்தைக் கனியச்செய்து முன்பு நான் செய்த அடிமைத் திறத்தைக் கேட்பீரேயானால் தொண்டரைச் சூழாதீர்கள்.
1974 நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பர்க்குக்
கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே. 5.092.2
அஞ்சியும் அன்புசெய்தும் இறைவனிடத்து அன்புடையவராய் ஈகை செய்யும் அடியவரைத் துன்புறுத்தாது அகலுங்கள்.
1975 கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
ஆர்க ளாகிலு மாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே. 5.092.3
கார்காலத்திலே மலர்தலைக்கொண்ட கொன்றையின் மணமிக்க மலர்களைக் கண்ணியாக அணிந்தவனது பெருமை கொண்ட திருநாமமாகிய சிவன் என்று அரற்றுவார் ஆராயினும் ஆக; அவர்களை நீர் சாரப்பெறாதீர்; நீங்குவீராக.
1976 சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்ற வுங்களிப் பட்ட மனத்தராய்ப்
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே. 5.092.4
சடையோடு கூடிய நீள்முடியுடைய சங்கரனும், காமனைச் சினந்து எரிசெய்தவனுமாகிய பெருமான் சேவடியைப் போற்றி என்று மிகவும் களிப்புடைய உள்ளத்தவராய் உரைப்பார் பக்கம் நீவிர் செல்லேல்.
1977 இறையென் சொல்மற வேல்நமன் தூதுவீர்
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்தமர்
நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே. 5.092.5
நமன் தூதுவர்களே! என்சொல்லைச் சிறிதும் மறவாதீர்; பிறையும் பாம்பும் உடையான் தமர்களாகிய தேன் நறுமணம் வீசும் நல்ல நறுவிய சாந்தினைவிட நிறையத் திருநீறு பூசும் அடியவர் எதிர் நீவிர் செல்லேல்.
1978 வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே. 5.092.6
வாமதேவனாகிய சிவபெருமான் வளநகராந்திருக்கோயிலில் நாள்தோறும் மனத்தின்கண் வேறொரு விருப்பமும் இல்லாதவராய்க் கைவிளக்கும், தூபமும், மாலையும், தண்ணிய நறுவிய சாந்தமும், பிற வாசனைப் பொருள்களும் புனைவார் எதிர் நீவிர் செல்லேல்.
1979 படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்நம தீச னடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே. 5.092.7
படைக்கலமும் பாசக்கயிறும் பற்றியகையை உடைய தூதுவர்களே! நமது ஈசன் அடியரை அடையாதீர்; இடபத்தை ஊர்தியாகக்கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் புடை நீர் போகாமல் அவர்களை வழிபட்டுப் போவீராக.
1980 விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்ச மெய்தி யருகணை யாதுநீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே. 5.092.8
வித்தையாவதும், விருப்பத்துக்குரிய தன்மையும் ஆவதும் நாள்தோறும் திருநீறணியும் மெய்யடியாரை நினைப்பதே; அச்சம் கொண்டு, பிச்சை புகும் பெருமானின் அன்பர்களை நீர் பேணுவீராக.
1981 இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம்
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே. 5.092.9
இன்னும் கேட்பீராக; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா.
1982 மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை யேறுடை யானடி யேயலால்
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே. 5.092.10
மற்றும் கேட்பீராக; மனத்திலே வேறொன்றும் தாங்குதலின்றி மேனிமுழுதும் பூசிய திருநீற்றொடு கோவணமும் கொண்டு ஒப்பற்ற தனி இடபத்தை உடைய இறைவன் திருவடிகளே அல்லால் வேறு பற்று ஒன்றும் இல்லாதவர்களாகிய அடியார்கள்மேல் படைகொண்டு போகவேண்டா.
1983 அரக்க னீரைந் தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலும்
சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே. 5.092.11
இராவணனை நெரித்த பெருமானது அடியவர்களைவிட்டு அகலுங்கள்: நீங்கள் ஏதேனும் இடையூறு செய்யமுயன்றால் அவன் திருவடி சுடும்.
திருச்சிற்றம்பலம்
5.092.காலபாராயணம் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
1973 கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல் கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே. 5.092.1
காலதூதர்களே! கண்டுகொள்ள அரியவன். உள்ளத்தைக் கனியச்செய்து முன்பு நான் செய்த அடிமைத் திறத்தைக் கேட்பீரேயானால் தொண்டரைச் சூழாதீர்கள்.
1974 நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பர்க்குக் கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக் கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே. 5.092.2
அஞ்சியும் அன்புசெய்தும் இறைவனிடத்து அன்புடையவராய் ஈகை செய்யும் அடியவரைத் துன்புறுத்தாது அகலுங்கள்.
1975 கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார் ஆர்க ளாகிலு மாக அவர்களை நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே. 5.092.3
கார்காலத்திலே மலர்தலைக்கொண்ட கொன்றையின் மணமிக்க மலர்களைக் கண்ணியாக அணிந்தவனது பெருமை கொண்ட திருநாமமாகிய சிவன் என்று அரற்றுவார் ஆராயினும் ஆக; அவர்களை நீர் சாரப்பெறாதீர்; நீங்குவீராக.
1976 சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன் சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி ஆற்ற வுங்களிப் பட்ட மனத்தராய்ப் போற்றி யென்றுரைப் பார்புடை போகலே. 5.092.4
சடையோடு கூடிய நீள்முடியுடைய சங்கரனும், காமனைச் சினந்து எரிசெய்தவனுமாகிய பெருமான் சேவடியைப் போற்றி என்று மிகவும் களிப்புடைய உள்ளத்தவராய் உரைப்பார் பக்கம் நீவிர் செல்லேல்.
1977 இறையென் சொல்மற வேல்நமன் தூதுவீர் பிறையும் பாம்பு முடைப்பெரு மான்தமர் நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும் நிறைய நீறணி வாரெதிர் செல்லலே. 5.092.5
நமன் தூதுவர்களே! என்சொல்லைச் சிறிதும் மறவாதீர்; பிறையும் பாம்பும் உடையான் தமர்களாகிய தேன் நறுமணம் வீசும் நல்ல நறுவிய சாந்தினைவிட நிறையத் திருநீறு பூசும் அடியவர் எதிர் நீவிர் செல்லேல்.
1978 வாம தேவன் வளநகர் வைகலும் காம மொன்றில ராய்க்கை விளக்கொடு தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும் ஏம மும்புனை வாரெதிர் செல்லலே. 5.092.6
வாமதேவனாகிய சிவபெருமான் வளநகராந்திருக்கோயிலில் நாள்தோறும் மனத்தின்கண் வேறொரு விருப்பமும் இல்லாதவராய்க் கைவிளக்கும், தூபமும், மாலையும், தண்ணிய நறுவிய சாந்தமும், பிற வாசனைப் பொருள்களும் புனைவார் எதிர் நீவிர் செல்லேல்.
1979 படையும் பாசமும் பற்றிய கையினீர் அடையன் மின்நம தீச னடியரை விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம் புடைபு காதுநீர் போற்றியே போமினே. 5.092.7
படைக்கலமும் பாசக்கயிறும் பற்றியகையை உடைய தூதுவர்களே! நமது ஈசன் அடியரை அடையாதீர்; இடபத்தை ஊர்தியாகக்கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் புடை நீர் போகாமல் அவர்களை வழிபட்டுப் போவீராக.
1980 விச்சை யாவதும் வேட்கைமை யாவதும் நிச்சல் நீறணி வாரை நினைப்பதே அச்ச மெய்தி யருகணை யாதுநீர் பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே. 5.092.8
வித்தையாவதும், விருப்பத்துக்குரிய தன்மையும் ஆவதும் நாள்தோறும் திருநீறணியும் மெய்யடியாரை நினைப்பதே; அச்சம் கொண்டு, பிச்சை புகும் பெருமானின் அன்பர்களை நீர் பேணுவீராக.
1981 இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய மன்னன் பாதம் மனத்துட னேத்துவார் மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம் தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே. 5.092.9
இன்னும் கேட்பீராக; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா.
1982 மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச் சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் ஒற்றை யேறுடை யானடி யேயலால் பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே. 5.092.10
மற்றும் கேட்பீராக; மனத்திலே வேறொன்றும் தாங்குதலின்றி மேனிமுழுதும் பூசிய திருநீற்றொடு கோவணமும் கொண்டு ஒப்பற்ற தனி இடபத்தை உடைய இறைவன் திருவடிகளே அல்லால் வேறு பற்று ஒன்றும் இல்லாதவர்களாகிய அடியார்கள்மேல் படைகொண்டு போகவேண்டா.
1983 அரக்க னீரைந் தலையுமோர் தாளினால் நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலும் சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர் சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே. 5.092.11
இராவணனை நெரித்த பெருமானது அடியவர்களைவிட்டு அகலுங்கள்: நீங்கள் ஏதேனும் இடையூறு செய்யமுயன்றால் அவன் திருவடி சுடும்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|