|
||||||||
ஞானக்குறள்-வீட்டுனெறிப்பால்-உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை |
||||||||
கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா
முற்றுடம்பா லாய வுணர்வு. 21
வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
வுள்ளுடம்பி னாய வொளி. 22
சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு
என்றுங் கெடாத திது. 23
வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு
மொருபயனைக் காட்டு முடம்பு. 24
அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு. 25
நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு. 26
உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ள வுடம்பாகி விடும். 27
பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற் கோர்வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு. 28
வாயுவினா லாய வுடம்பின் பயனே
யாயுவி னெல்லை யது. 29
ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா
லன்பதி லொன்றா மரன். 30
|
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|