இலாவணி என்பது இசைப்பாடல்கள் வழி நிகழும் கவிதைப் பட்டிமன்றமாகும். மராட்டியர்கள் ஹோலிப் பண்டிகையின்போதும் , குழந்தை பிறந்த எட்டு நாட்கள் வரை பேய் பிசாசு அண்டாதிருக்க இதனைப் பாடுவர். மேலும் இலாவணி என்பதற்கு அழகு என்ற பொருளும் உண்டு. எங்கெல்லாம் அழகு இருக்கின்றதோ அதனைப் பாடுவது இலாவணி எனப்படும். மராட்டியத்தில் உருவாக்கப்பட்டு தஞ்சை சரபோஜி மன்னர் ஆட்சியில் விரிவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது தஞ்சை, திருச்சி, மதுரை,தென் ஆற்காடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பாடப்படும் ஒன்றாகும். காமன் கதையே பாடுபொருளாக அமையும் இந்நிகழ்ச்சி பெரும்பாலும் வினா விடை நிகழ்ச்சியாகவே பாடப்படுகிறது.
|