ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா நடிப்பில், கடந்த 1 ம் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்துவரும் படம்தான் க்ரிஷ் 3 . இந்த திரைப்படம் வெளியாகி நான்கே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த படம் ரிலீஸான முதல் நாள் அன்று ரூ. 25.20 கோடியும், மறுநாள் ரூ.23.20 கோடியும் மற்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ.24.30 கோடியும் வசூல் செய்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் க்ரிஷ் 3 ரூ.35.9 கோடி வசூல் செய்துள்ளது. சுமார் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விரைவில் ரூ.200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் ஒரே நாளில் ரூ. 33.1 கோடி வசூல் செய்தது தான் ஒரு நாள் வசூலில் அதிகபட்ச தொகையாக இருந்தது. தற்போது ரூ.35.9 கோடி வசூல் செய்து பாலிவுட் வரலாற்றிலேயே எந்த ஒரு படமும் செய்யாத அளவுக்கு ஒரு நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது க்ரிஷ் 3.
|