கடந்த 2011ம் ஆண்டு, ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தாலும், சுனாமியாலும் அங்கிருந்த புகுஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. இதன் காரணமாக நாட்டு மக்களின் நலன் கருதி அணுமின் உலைகளை ஜப்பான் அரசு மூடியது. இதனை அடுத்து அந்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் மின்தேவைக்கு மாற்று வழி உருவாக்கும் முயற்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இயற்கையிலிருந்து, அதாவது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.
அதன் படி, ஷிமிஷூ கார்ப்பரேசன் என்ற ஜப்பான் நிறுவனம் சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் சோலார் தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட்டு அதற்கு ‘ஜனா ரிங்' என பெயரிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 13 ஆயிரம் டெராவாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியுமாம். (1 டேராவாட் = 1 லட்சம் கோடி வாட்).
வரும் 2015ல் தொடங்கப் பட உள்ள இதன் கட்டுமானப் பணிகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. அவை சந்திரனில், சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின்கலன்களை அமைக்கும்.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலையங்களில் இணைக்கப்பட்டு, பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும் என இத்திட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|