குங்குமக் கோட்டுஅலர் உணங்கல் கடுக்கும் பங்குடைச் செங்கால் பாட்டளி அரிபிடர்க் குருவில் தோய்ந்த அரிகெழு மரகதக் கல்எனக் கிடப்பச் சொல்லிய மேனித் திருநெடு மா க்கு ஒருவிசை புரிந்து (5)
சோதிவளர் பாகம் ஈந்தருள் நித்தன் முனிவர் ஏமுற வெள்ளிஅம் பொதுவில் மனமும் கண்ணும் கனியக் குனிக்கும் புதிய நாயகன் பழமறைத் தலையோன் கைஞ்ஞின்றவன் செங்கால் கண்டவர் போல (10)
விளக்கமும் புதுமையும் அளப்பில் காட்சியும் வேறொப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும் அறிவோர் காணும் குறியாய இருந்தன இருந்திண் போர்வைப் பிணிவிசி முரசம் முன்னம் எள்ளினர் நெஞ்சுகெடத் துவைப்ப (15)
மணம்கொள் பேரணி பெருங்கவின் மறைத்தது என்று எழுமதி குறைத்த முழுமதிக் கருங்கயல் வண்டு மருவி உண்டு களியாது மற்றது பூத்த பொன்திகழ் தாமரை இரண்டு முகிழ்செய்து நெஞ்சுறப் பெருகும் (20)
வற்றா மேனி வெள்ளத்துள் மறிய நுனித்தலை அந்தணர் கதழ்எரி வளர்த்துச் சிவந்த வாய்தொறும் வெண்பொரி சிதறிச் செம்மாந்து மணத்த வளரிய கூர்எரி மும்முறை சுழன்று தாயார் உள்மகிழ (25)
இல்லுறை கல்லின் வெண்மலர் பரப்பி இலவலர் வாட்டிய செங்கால் பிடித்து களிதூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி இரண்டுபெயர் காத்த தோலாக் கற்பு முகனுறக் காணும் கரியோர் போல (30)
இடப்பால் நிறுத்தி பக்கம் சூழ வடமீன் காட்டி விளக்கணி எடுத்துக் குலவாழ்த்து விம்ம மணஅணிப் பக்கம் கட்புலம் கொண்ட இப்பணி அளவும் வாடி நிலைநின்றும் ஊடி ஏமாந்தும் (35)
என்முகம் அளக்கும் காலக் குறியைத் தாமரைக் கண்ணால் உட்புக அறிந்தும் உலகம் மூன்றும் பெறுதற்கு அரியதென்று எண்ணா வாய்மை எண்ணிக் கூறியும் கல்லுயர் நெடுந்தோள் அண்ணல், மல்லுறத் தந்த ஈர்ந்தழை தானே. (41)
|