LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF

வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்

தோற்றம் - டிசம்பர் 14 - 1939

மறைவு- 30 - மே - 2021

பிறந்த ஊர்- சென்னை 

மாவட்டம் - சென்னை 

 

பெண்கள் பருவம் எய்தியதுமே திருமணம் செய்துவைத்துவிடும் காலத்தில் தன்னுடைய சகோதரர்களின் ஆதரவால் பி.ஏ. அரசியல் அறிவியல் படித்து, அதில் தங்கப் பதக்கமும் பெற்றார். பிறகு டெல்லியில் எம்.ஏ. பொது நிர்வாகம் படித்தார். டெல்லியில் படித்து முடித்த மைதிலிக்கு அமெரிக்கா சென்று படிப்பதற்கான உதவித்தொகை கிடைத்தது.

 

அமெரிக்காவில் படிப்பை முடித்த பிறகு, ஐ.நா. சபையில் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் குறித்த குழுவில் ஆராய்ச்சியாளராக இணைந்தார். அன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவில் உரிமையியல் உரிமைக்கான போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தன. அங்கு நடந்த அரசியல் மாற்றங்கள், போராட்டங்கள், படுகொலைகள் போன்றவை மைதிலியை மிகவும் பாதித்தன. 

மக்கள் பணியில் லட்சியத்துடன் பயணித்தார்

அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் கியூபாவுக்குச் சென்றார். நிலச் சீர்திருத்த நடவடிக்கை, அனைவருக்கும் சமமான கல்வி முறை போன்றவற்றைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஒரு பொதுவுடைமை அரசாங்கத்தால் மட்டுமே மக்களுக்காகச் செயல்பட முடியும் என்பதை அறிந்துகொண்டார்.

இந்தியா திரும்பிய மைதிலி சிவராமனுக்குப் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி கிடைத்தது. லண்டன் பள்ளி ஆஃப் எகனாமிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புக்கான வாய்ப்பும் கிடைத்தது. இரு வாய்ப்புகளையும் நிராகரித்த மைதிலி, மக்கள் பணியில் லட்சியத்துடன் பயணித்தார்.

 

சென்னையில் நண்பர்களான என்.ராம், ப.சிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து ‘ராடிகல் ரெவ்யூ’ என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கி, ஆசிரியராகச் செயல்பட்டார். 

தொழிற்சங்கப் போராட்டங்களில் 

கீழவெண்மணிப் படுகொலைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்ததில் மைதிலியின் பங்கு முக்கியமானது. ‘வாச்சாத்தி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார்.

 

1970-களில் தொழிற்சங்கப் போராட்டங்களில் மைதிலியின் பங்கு முக்கியமானது. உழைக்கும் பெண்களுக்கான உரிமைகளுக்காகவும் போராடியிருக்கிறார். 

 

தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்கான போராட்டங்களில் செலவிட்டார் மைதிலி சிவராமன்.

by Kumar   on 19 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
முத்துராமலிங்க தேவர் முத்துராமலிங்க தேவர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.