LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-89

 

3.089.திருக்கொச்சைவயம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
3756 திருந்துமா களிற்றிள மருப்பொடு
திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும்
பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட்
டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ்
நெஞ்சமே புகலதாமே
3.089.1
நெஞ்சமே! அழகான இளயானைத் தந்தங்களோடு, திரட்சியான இரத்தினங்களையும், சந்தன மரங்களையும் அடித்துக் கொண்டு, குருந்து, மா, குரவம், குடசம் முதலிய மரவகைகளையும், மயிலின் தோகைகளையும் சுமந்து கொண்டு பரவி, பெரிய வயல்களில் பாய்கின்ற நெடிய கரைகளையுடைய காவிரி நதி சூழும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி வாழ்வாயாக! அத்திருவடியே நமக்குச் சரண்புகும் இடமாகும். 
3757 ஏலமா ரிலவமோ டினமலர்த்
தொகுதியா யெங்குநுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி
கொன்றையுங் கொண்டுகோட்டா
றாலியா வயல்புகு மணிதரு
கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினைமட
நெஞ்சமே யஞ்சனீயே
3.089.2
மடநெஞ்சமே! மணம் கமழும் ஏலம், இலவங்கம் இவைகளோடு நறுமணம் கமழும் மலர்களையும் தள்ளிக் கொண்டு, அழகிய மிளகுக் கொடிகளோடு, நன்கு பழுத்த கனிகள், கொன்றை மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் நீர் வயல்களில் புகுகின்ற அழகிய திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் நீலகண்டரான சிவபெருமானை நினைப்பாயாக! நீ அஞ்சாதே. 
3758 பொன்னுமா மணிகொழித்தெறிபுனற்
கரைகள்வாய் நுரைகளுந்திக
கன்னிமார் முலைநலங் கவரவந்
தேறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடங்
கொச்சையே மருவினாளும்
முன்னைநோய் தொடருமா றில்லைகா
ணெஞ்சமே யஞ்சனீயே
3.089.3
நெஞ்சமே! பொன்னையும், பெரிய மணிகளையும் ஒதுக்கிக் கரையில் எறிகின்ற ஆற்றுநீர் நுரைகளைத் தள்ளிக் கொண்டு, கன்னிப்பெண்களின் மார்பில் பூசியிருந்த சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்கள் அகற்றிக் கரைசேர்க்கின்ற காவிரி சூழ்ந்திருக்க, உமாதேவியாரோடு நிலைபெற்று இருப்பவராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தையே எக்காலத்தும் பொருந்தி வாழ்வாயாக! அவ்வாறு வாழ்ந்தால் தொன்றுதொட்ட வரும் மலநோயானது இனி உன்னைத் தொடராது.நீ அஞ்சல் வேண்டா. 
3759 கந்தமார் கேதகைச் சந்தனக்
காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக்
குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட்
டாறுசூழ் கொச்சைமேய
எந்தையா ரடிநினைந் துய்யலாம்
நெஞ்சமே யஞ்சனீயே
3.089.4
நெஞ்சமே! மணம் பொருந்திய தாழை, சந்தனக் காடு என்பவற்றைச் சூழ்ந்து, வாழைத் தோட்டங்களின் பக்கமாக வந்து, மா மரத்தையும், வள்ளிக் கொடியின் திரளையும், மொய்க்கும் வண்டுகளையும் குவளையையும் மோதி ஓட, பூங்கொத்துக்கள் அணிந்த நீண்ட கூந்தலையுடைய பெண்கள் குதித்துக் கொண்ட நீராடும் காவிரி நதி சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளிய எந்தையாரான சிவபெருமானின் திருவடிகளைத் தியானித்து நாம் உய்தி பெறலாம். நீ அஞ்சவேண்டா. 
3760 மறைகொளும் திறலினா ராகுதிப்
புகைகள்வா னண்டமிண்டிச்
சிறைகொளும் புனலணிசெழும்பதி
திகழ்மதிற் கொச்சை தன்பால்
உறைவிட மெனமன மதுகொளும்
பிரமனார் சிரமறுத்த
இறைவன தடியிணை யிறைஞ்சிவாழ்
நெஞ்சமே யஞ்சனீயே
3.089.5
நெஞ்சமே! வேதங்களை அவற்றின் பொருள் உணர்ந்து ஓதும் வன்மை படைத்த அந்தணர்கள் இயற்றுகின்ற வேள்விப் புகை ஆகாயத்தை அளாவி நெருங்குதலால் மழை பொழிய,அந்நீர் தங்கிய கரைகளையுடைய நீர்நிலைகளால் அழகுடன் விளங்கும் செழும்பதியாகிய, மதில்கள் விளங்குகின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை, தாம் எழுந்தருளும் இடமாகக் கொண்ட மனமுடையவரும், பிரமனின் சிரமறுத்தவருமான சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் வணங்கி வாழ்வாயாக! நீ அஞ்சவேண்டா. 
3761 சுற்றமு மக்களுந் தொக்கவத்
தக்கனைச் சாடியன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப் 
பங்கமா வுள்கினானோர்
குற்றமில்லடியவர் குழுமிய
வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவ மருள்புரி நம்பனை
நம்பிடாய் நாளுநெஞ்சே
3.089.6
நெஞ்சமே! சிவனை நினையாது செய்த தக்கன் வேள்வியைத் தகர்த்து, அதற்குத் துணையாக நின்ற சுற்றத்தார்களையும், மற்றவர்களையும் தண்டித்து, தன் மனைவி தாட்சாயனி தக்கன் மகளான தோடம் நீங்க இமயமலை அரையன் மகளாதற்கும், தன் திருமேனியில் ஒரு பாகமாதற்கும் நினைத்தருளியவனும், ஒரு குற்றமில்லாத அடியவர்கள் குழுமிய வீதிகள் சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து, திரிகரணங்களும் ஒன்றிச் சிவவழிபாடு செய்பவர்கட்கு அதன் பயனை அளித்து அருள்புரிகின்றவனுமாகிய சிவபெருமானை எந்நாளும் நீ விரும்பி வாழ்வாயாக! 
3762 கொண்டலார் வந்திடக் கோலவார்
பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித் தேறிமா
முகிறனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களு மமரரு
முனிவரும் பணியவாலம்
உண்டமா கண்டனார் தம்மையே
யுள்குநீ யஞ்சனெஞ்சே
3.089.7
நெஞ்சமே! மேகங்கள் வந்தவுடன், அழகிய நீண்ட சோலைகளிலுள்ள குரங்குகள் கூடி, தங்கட்கு முன்னே காணப்படுகின்ற மூங்கில்களைப் பற்றி ஏறி, அந்தக் கரிய மேகங்களைக் கையால் பிடிக்கின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, அண்ட வானவர்களும், தேவர்களும், முனிவர்களும் வந்து பணிய, ஆலகால விடத்தினை உண்டு அவர்களைக் காத்த பெருமையையுடைய கழுத்தினையுடைய சிவபெருமானையே எப்பொழுதும் நீ நினைத்துத் தியானிப்பாயாக! நீ அஞ்சல் வேண்டா. 
3763 அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா
மலையெடுத் தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிர லூன்றினா
ருறைவிட மொளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமு முத்தமுந்
தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண்
கொச்சையே பேணுநெஞ்சே
3.089.8
நெஞ்சமே! வலிமை வாய்ந்த பற்களையுடைய அரக்கனான இராவணன் பெரிய திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க, ஆரவாரித்த அவனது வாய்களுடன் உடலும் நெரியும்படி தன் காற்பெருவிரலை ஊன்றினவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற, ஒளிபொருந்திய வெள்ளியைப் போன்ற இதழ்களையுடைய பூக்களின் இடையிடையே பவளம் போன்ற செந்நிறப் பூக்களும், முத்துக்களைப் போன்ற அரும்புகளும், அமைந்த பூங்கொத்துக்களையுடைய செழித்த புன்னைமரங்களின் பக்கத்தில் பறவை இனங்கள் தங்கள் பெடைகளோடு வளர்தலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை நீ போற்றி வழிபடுவாயாக! 
3764 அரவினிற் றுயிறரு மரியுநற்
பிரமனு மன்றயர்ந்து
குரைகழ றிருமுடி யளவிட
வரியவர் கொங்குசெம்பொன்
விரிபொழி லிடைமிகு மலைமகண்
மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார்
கொச்சையே கருதுநெஞ்சே
3.089.9
நெஞ்சமே! பாம்புப் படுக்கையில் துயிலும் திருமாலும், நல்ல பிரமதேவனும் சோர்வடையும்படி, ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும், திருமுடியையும் அளவிடுதற்கு அரியவராய், பூக்களிலுள்ள மகரந்தமானது செம்பொன்துகளைப்போல உதிர்கின்ற சோலைகளுக்கு இடையில், மலைமகளான உமாதேவியார் மகிழும்படி, கரிய, அழகிய கழுத்தினை யுடையவராய்ச் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக் கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை நீ எப்பொழுதும் தியானிப்பாயாக! 
3765 கடுமலி யுடலுடை யமணருங்
கஞ்சியுண் சாக்கியரும்
இடுமற வுரைதனை யிகழ்பவர்
கருதுநம் மீசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை
யவர்பணிந் தேத்தஞாலம்
உடையவன் கொச்சையே யுள்கிவாழ்
நெஞ்சமே யஞ்சனீயே
3.089.10
நெஞ்சமே! கடுக்காய்களைத் தின்னும் சமணர்களும், கஞ்சி உணவை உண்கின்ற புத்தர்களும், சொல்லுகின்ற சமயபோதனைகளை இகழ்பவர்களாகிய அடியவர்கள் நினைந்து போற்றும் நம் இறைவனும், தேவர்கள் தன்னைச் சுற்றி நின்று தொழ அவர்கள் நடுவுள் வீற்றிருந்தருளும் நண்பனும், நான்கு வேதங்களையும் நன்கு கற்ற அந்தணர்கள் பணிந்து போற்ற இந்த உலகம் முழுவதையும் தனக்கு உடைமைப் பொருளாக உடையவனுமாகிய சிவபெருமானது திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தைத் தியானித்து நல்வாழ்வு வாழ்வாயாக! நீ அஞ்ச வேண்டா. 
3766 காய்ந்துதங் காலினாற் காலனைச்
செற்றவர் கடிகொள்கொச்சை
ஆய்ந்துகொண் டிடமென விருந்தநல்
லடிகளை யாதரித்தே
ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழின்மறை
ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தவிம் மாலைகள் வல்லவர்
நல்லர்வா னுலகின்மேலே
3.089.11
தம் அடியவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் கோபித்துக் காலால் உதைத்து மாய்த்தவரும், காவலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தினைத் தாம் வீற்றிருந்தருளுதற்கு ஏற்ற இடமென ஆராய்ந்து எழுந்தருளியுள்ள நம் தலைவருமான சிவபெருமானிடம் பக்தி கொண்டு, பொருந்திய தொன்மையான புகழ்மிகுந்த, அழகிய, மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய சிறப்புடைய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள் நன்மைதரும் வானுலகில் மேன்மையுடன் வீற்றிருப்பர். 
திருச்சிற்றம்பலம்

3.089.திருக்கொச்சைவயம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 



3756 திருந்துமா களிற்றிள மருப்பொடுதிரண்மணிச் சந்தமுந்திக்குருந்துமா குரவமுங் குடசமும்பீலியுஞ் சுமந்துகொண்டுநிரந்துமா வயல்புகு நீடுகோட்டாறுசூழ் கொச்சைமேவிப்பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ்நெஞ்சமே புகலதாமே3.089.1
நெஞ்சமே! அழகான இளயானைத் தந்தங்களோடு, திரட்சியான இரத்தினங்களையும், சந்தன மரங்களையும் அடித்துக் கொண்டு, குருந்து, மா, குரவம், குடசம் முதலிய மரவகைகளையும், மயிலின் தோகைகளையும் சுமந்து கொண்டு பரவி, பெரிய வயல்களில் பாய்கின்ற நெடிய கரைகளையுடைய காவிரி நதி சூழும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி வாழ்வாயாக! அத்திருவடியே நமக்குச் சரண்புகும் இடமாகும். 

3757 ஏலமா ரிலவமோ டினமலர்த்தொகுதியா யெங்குநுந்திக்கோலமா மிளகொடு கொழுங்கனிகொன்றையுங் கொண்டுகோட்டாறாலியா வயல்புகு மணிதருகொச்சையே நச்சிமேவும்நீலமார் கண்டனை நினைமடநெஞ்சமே யஞ்சனீயே3.089.2
மடநெஞ்சமே! மணம் கமழும் ஏலம், இலவங்கம் இவைகளோடு நறுமணம் கமழும் மலர்களையும் தள்ளிக் கொண்டு, அழகிய மிளகுக் கொடிகளோடு, நன்கு பழுத்த கனிகள், கொன்றை மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் நீர் வயல்களில் புகுகின்ற அழகிய திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் நீலகண்டரான சிவபெருமானை நினைப்பாயாக! நீ அஞ்சாதே. 

3758 பொன்னுமா மணிகொழித்தெறிபுனற்கரைகள்வாய் நுரைகளுந்திககன்னிமார் முலைநலங் கவரவந்தேறுகோட் டாறுசூழமன்னினார் மாதொடும் மருவிடங்கொச்சையே மருவினாளும்முன்னைநோய் தொடருமா றில்லைகாணெஞ்சமே யஞ்சனீயே3.089.3
நெஞ்சமே! பொன்னையும், பெரிய மணிகளையும் ஒதுக்கிக் கரையில் எறிகின்ற ஆற்றுநீர் நுரைகளைத் தள்ளிக் கொண்டு, கன்னிப்பெண்களின் மார்பில் பூசியிருந்த சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்கள் அகற்றிக் கரைசேர்க்கின்ற காவிரி சூழ்ந்திருக்க, உமாதேவியாரோடு நிலைபெற்று இருப்பவராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தையே எக்காலத்தும் பொருந்தி வாழ்வாயாக! அவ்வாறு வாழ்ந்தால் தொன்றுதொட்ட வரும் மலநோயானது இனி உன்னைத் தொடராது.நீ அஞ்சல் வேண்டா. 

3759 கந்தமார் கேதகைச் சந்தனக்காடுசூழ் கதலிமாடேவந்துமா வள்ளையின் பவரளிக்குவளையைச் சாடியோடக்கொந்துவார் குழலினார் குதிகொள்கோட்டாறுசூழ் கொச்சைமேயஎந்தையா ரடிநினைந் துய்யலாம்நெஞ்சமே யஞ்சனீயே3.089.4
நெஞ்சமே! மணம் பொருந்திய தாழை, சந்தனக் காடு என்பவற்றைச் சூழ்ந்து, வாழைத் தோட்டங்களின் பக்கமாக வந்து, மா மரத்தையும், வள்ளிக் கொடியின் திரளையும், மொய்க்கும் வண்டுகளையும் குவளையையும் மோதி ஓட, பூங்கொத்துக்கள் அணிந்த நீண்ட கூந்தலையுடைய பெண்கள் குதித்துக் கொண்ட நீராடும் காவிரி நதி சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளிய எந்தையாரான சிவபெருமானின் திருவடிகளைத் தியானித்து நாம் உய்தி பெறலாம். நீ அஞ்சவேண்டா. 

3760 மறைகொளும் திறலினா ராகுதிப்புகைகள்வா னண்டமிண்டிச்சிறைகொளும் புனலணிசெழும்பதிதிகழ்மதிற் கொச்சை தன்பால்உறைவிட மெனமன மதுகொளும்பிரமனார் சிரமறுத்தஇறைவன தடியிணை யிறைஞ்சிவாழ்நெஞ்சமே யஞ்சனீயே3.089.5
நெஞ்சமே! வேதங்களை அவற்றின் பொருள் உணர்ந்து ஓதும் வன்மை படைத்த அந்தணர்கள் இயற்றுகின்ற வேள்விப் புகை ஆகாயத்தை அளாவி நெருங்குதலால் மழை பொழிய,அந்நீர் தங்கிய கரைகளையுடைய நீர்நிலைகளால் அழகுடன் விளங்கும் செழும்பதியாகிய, மதில்கள் விளங்குகின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை, தாம் எழுந்தருளும் இடமாகக் கொண்ட மனமுடையவரும், பிரமனின் சிரமறுத்தவருமான சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் வணங்கி வாழ்வாயாக! நீ அஞ்சவேண்டா. 

3761 சுற்றமு மக்களுந் தொக்கவத்தக்கனைச் சாடியன்றேஉற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா வுள்கினானோர்குற்றமில்லடியவர் குழுமியவீதிசூழ் கொச்சைமேவிநற்றவ மருள்புரி நம்பனைநம்பிடாய் நாளுநெஞ்சே3.089.6
நெஞ்சமே! சிவனை நினையாது செய்த தக்கன் வேள்வியைத் தகர்த்து, அதற்குத் துணையாக நின்ற சுற்றத்தார்களையும், மற்றவர்களையும் தண்டித்து, தன் மனைவி தாட்சாயனி தக்கன் மகளான தோடம் நீங்க இமயமலை அரையன் மகளாதற்கும், தன் திருமேனியில் ஒரு பாகமாதற்கும் நினைத்தருளியவனும், ஒரு குற்றமில்லாத அடியவர்கள் குழுமிய வீதிகள் சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து, திரிகரணங்களும் ஒன்றிச் சிவவழிபாடு செய்பவர்கட்கு அதன் பயனை அளித்து அருள்புரிகின்றவனுமாகிய சிவபெருமானை எந்நாளும் நீ விரும்பி வாழ்வாயாக! 

3762 கொண்டலார் வந்திடக் கோலவார்பொழில்களிற் கூடிமந்திகண்டவார் கழைபிடித் தேறிமாமுகிறனைக் கதுவுகொச்சைஅண்டவா னவர்களு மமரருமுனிவரும் பணியவாலம்உண்டமா கண்டனார் தம்மையேயுள்குநீ யஞ்சனெஞ்சே3.089.7
நெஞ்சமே! மேகங்கள் வந்தவுடன், அழகிய நீண்ட சோலைகளிலுள்ள குரங்குகள் கூடி, தங்கட்கு முன்னே காணப்படுகின்ற மூங்கில்களைப் பற்றி ஏறி, அந்தக் கரிய மேகங்களைக் கையால் பிடிக்கின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, அண்ட வானவர்களும், தேவர்களும், முனிவர்களும் வந்து பணிய, ஆலகால விடத்தினை உண்டு அவர்களைக் காத்த பெருமையையுடைய கழுத்தினையுடைய சிவபெருமானையே எப்பொழுதும் நீ நினைத்துத் தியானிப்பாயாக! நீ அஞ்சல் வேண்டா. 

3763 அடலெயிற் றரக்கனார் நெருக்கிமாமலையெடுத் தார்த்தவாய்கள்உடல்கெடத் திருவிர லூன்றினாருறைவிட மொளிகொள்வெள்ளிமடலிடைப் பவளமு முத்தமுந்தொத்துவண் புன்னைமாடேபெடையொடுங் குருகினம் பெருகுதண்கொச்சையே பேணுநெஞ்சே3.089.8
நெஞ்சமே! வலிமை வாய்ந்த பற்களையுடைய அரக்கனான இராவணன் பெரிய திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க, ஆரவாரித்த அவனது வாய்களுடன் உடலும் நெரியும்படி தன் காற்பெருவிரலை ஊன்றினவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற, ஒளிபொருந்திய வெள்ளியைப் போன்ற இதழ்களையுடைய பூக்களின் இடையிடையே பவளம் போன்ற செந்நிறப் பூக்களும், முத்துக்களைப் போன்ற அரும்புகளும், அமைந்த பூங்கொத்துக்களையுடைய செழித்த புன்னைமரங்களின் பக்கத்தில் பறவை இனங்கள் தங்கள் பெடைகளோடு வளர்தலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை நீ போற்றி வழிபடுவாயாக! 

3764 அரவினிற் றுயிறரு மரியுநற்பிரமனு மன்றயர்ந்துகுரைகழ றிருமுடி யளவிடவரியவர் கொங்குசெம்பொன்விரிபொழி லிடைமிகு மலைமகண்மகிழ்தர வீற்றிருந்தகரியநன் மிடறுடைக் கடவுளார்கொச்சையே கருதுநெஞ்சே3.089.9
நெஞ்சமே! பாம்புப் படுக்கையில் துயிலும் திருமாலும், நல்ல பிரமதேவனும் சோர்வடையும்படி, ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும், திருமுடியையும் அளவிடுதற்கு அரியவராய், பூக்களிலுள்ள மகரந்தமானது செம்பொன்துகளைப்போல உதிர்கின்ற சோலைகளுக்கு இடையில், மலைமகளான உமாதேவியார் மகிழும்படி, கரிய, அழகிய கழுத்தினை யுடையவராய்ச் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக் கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை நீ எப்பொழுதும் தியானிப்பாயாக! 

3765 கடுமலி யுடலுடை யமணருங்கஞ்சியுண் சாக்கியரும்இடுமற வுரைதனை யிகழ்பவர்கருதுநம் மீசர்வானோர்நடுவுறை நம்பனை நான்மறையவர்பணிந் தேத்தஞாலம்உடையவன் கொச்சையே யுள்கிவாழ்நெஞ்சமே யஞ்சனீயே3.089.10
நெஞ்சமே! கடுக்காய்களைத் தின்னும் சமணர்களும், கஞ்சி உணவை உண்கின்ற புத்தர்களும், சொல்லுகின்ற சமயபோதனைகளை இகழ்பவர்களாகிய அடியவர்கள் நினைந்து போற்றும் நம் இறைவனும், தேவர்கள் தன்னைச் சுற்றி நின்று தொழ அவர்கள் நடுவுள் வீற்றிருந்தருளும் நண்பனும், நான்கு வேதங்களையும் நன்கு கற்ற அந்தணர்கள் பணிந்து போற்ற இந்த உலகம் முழுவதையும் தனக்கு உடைமைப் பொருளாக உடையவனுமாகிய சிவபெருமானது திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தைத் தியானித்து நல்வாழ்வு வாழ்வாயாக! நீ அஞ்ச வேண்டா. 

3766 காய்ந்துதங் காலினாற் காலனைச்செற்றவர் கடிகொள்கொச்சைஆய்ந்துகொண் டிடமென விருந்தநல்லடிகளை யாதரித்தேஏய்ந்ததொல் புகழ்மிகு மெழின்மறைஞானசம் பந்தன்சொன்னவாய்ந்தவிம் மாலைகள் வல்லவர்நல்லர்வா னுலகின்மேலே3.089.11
தம் அடியவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் கோபித்துக் காலால் உதைத்து மாய்த்தவரும், காவலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தினைத் தாம் வீற்றிருந்தருளுதற்கு ஏற்ற இடமென ஆராய்ந்து எழுந்தருளியுள்ள நம் தலைவருமான சிவபெருமானிடம் பக்தி கொண்டு, பொருந்திய தொன்மையான புகழ்மிகுந்த, அழகிய, மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய சிறப்புடைய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள் நன்மைதரும் வானுலகில் மேன்மையுடன் வீற்றிருப்பர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.