LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்துவின் உடலை இந்து முறைப்படி இறுதிசடங்கு செய்த முஸ்லிம்கள் !!

ஐதராபாத்தில் அடிக்கடி மத மோதல்கள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில், அதே ஊரில் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக, இந்து ஒருவரின் உடலை, இந்து முறைப்படி முஸ்லிம்கள் முன்னின்று இறுதிச்சடங்குகளை செய்துள்ளனர்.  

 

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அவ்வப்போது மோதல் நடைபெறுவது வழக்கம். அங்குள்ள, இந்திராம்மா நகர் என்ற இடத்தை சுற்றிலும் முஸ்லிம்கள் வசிக்க, நடுவே, பாலராஜு, என்ற, இந்து எலக்ட்ரீஷியன் வசித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் வேலையிலிருந்து வீடு திரும்பிய பாலராஜு படுக்கையில் சாய்ந்தார்; மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. அவர் மனைவி சுபத்ராவும், 18 வயது மகள் ரேவதியும் அவரை எழுப்பிய போது, இறந்திருந்தது தெரிய வந்தது.இறுதிச்சடங்குகள் மேற்கொள்ள பணம் இல்லாமல் தவித்த சுபத்ராவுக்கு, பக்கத்து வீட்டுக்காரர்களான முஸ்லிம்கள், இறுதி சடங்குகளுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளனர். மேலும் இறந்த பாலராஜுவின் உடலை, இந்து முறைப்படி தகனம் செய்ய, முஸ்லிம் இளைஞர்கள் தூக்கிச் சென்று இறுதி காரியங்களை செய்தனர். இந்த நிகழ்வு, தன் மதம் தான் உயர்ந்தது என பிரிவினையை தூண்டும் மத தலைவர்களின் முகத்தில் கரி பூசும் விதமாக அமைந்துள்ளது. 

by Swathi   on 30 Oct 2013  0 Comments
Tags: முஸ்லிம்கள்   இந்துக்கள்   இறுதி ஊர்வலம்   மத நல்லிணக்கம்   Muslim Neighbors   Hindu Man\'s   Funerals  
 தொடர்புடையவை-Related Articles
இந்துவின் உடலை இந்து முறைப்படி இறுதிசடங்கு செய்த முஸ்லிம்கள் !! இந்துவின் உடலை இந்து முறைப்படி இறுதிசடங்கு செய்த முஸ்லிம்கள் !!
முஸ்லிம்களை தவிர அல்லா என்ற சொல்லை யாரும் பயன்படுத்த கூடாது !!! முஸ்லிம்களை தவிர அல்லா என்ற சொல்லை யாரும் பயன்படுத்த கூடாது !!!
கோமாதாவை வணங்குவது ஏன் தெரியுமா! கோமாதாவை வணங்குவது ஏன் தெரியுமா!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.