|
||||||||
நான்காம் திருமுறை-84 |
||||||||
4.084.ஆருயிர்த் திருவிருத்தம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
801 எட்டாந் திசைக்கு மிருதிசைக் கும்மிறை
வாமுறையென்
றிட்டா ரமரர்வெம் பூச லெனக்கேட்
டெரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுர மூன்றையு
மோரம்பினால்
அட்டா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.1
கிழக்கு தென்கிழக்கு முதலிய எட்டுத்திசைகளொடு மேல் கீழ் ஆக இருதிசைகள் ஆகப் பத்துத்திசைகளுக்கும் தலைவனே! 'எங்களைத் திரிபுரத்து அசுரர்களிடமிருந்து காத்தல் நினக்கே உரிய செயலாகும்' என்று தேவர்கள் வேண்டிய கூக்குரலைக் கேட்டுத் தீப்போல விழித்துத் தங்களோடு நட்புறவினால் பொருந்தாத கீழ்மக்களுடைய வானத்தில் உலவும் மும்மதில்களையும் ஓரம்பினால் அழித்தசிவபெருமானுடைய திருவடி நிழலின் கீழ் அல்லவோ என் அரிய உயிர் தங்கியுள்ளது.
802 பேழ்வா யரவி னரைக்கமர்ந் தேறிப்
பிறங்கிலங்கு
தேய்வா யிளம்பிறை செஞ்சடை மேல்வைத்த
தேவர்பிரான்
மூவா னிளகான் முழுவுல கோடுமண்
விண்ணுமற்றும்
ஆவா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே
4.084.2
பிளந்த வாயை உடைய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி, ஒளிவீசும் உருத்தேய்ந்த இளம் பிறையைச் சிவந்த சடையின்மேல் வைத்த தேவர் பிரானாய், மூப்பும் இளமையும் இலாது என்றும் ஒரே நிலையனாய், இந்நிலவுலகும் தேவருலகும் மற்ற உலகங்களுமாகி உள்ள சிவபெருமானுடைய திருவடி நிழலின்கீழ் அல்லவோ அடியேனது அரிய உயிர் நிலைத்துள்ளது.
803 தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி
தகர்த்துகந்த
எரியா ரிலங்கிய சூலத்தி னானிமை
யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந்
தன்பிறப்பை
அரியா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.3
தாங்குதற்கரிய சினம் கொண்டு தக்கன் செய்த வேள்வியினை அழித்து மகிழ்ந்தவனாய், நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கிய சூலப்படையை உடையவனாய், இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய பெரியவனாய், மேம்பட்ட அடியார்களின் பிறவித்தொடர்பை அறுப்பவனாய், தான் பிறவா யாக்கைப் பெரியோனாய் இருக்கும் சிவபெருமானுடைய அடி நிழல் கீழது எம் ஆருயிரே. (பிறப்பை + அறியான் பிறத்தலை இல்லாதவன். அருமை - இன்மை.)
804 வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையொர்
பான்மகிழ்ந்து
வெடிகொ ளரவொடு வேங்கை யதள்கொண்டு
மேன்மருவிப்
பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந் தன்னபைங்
கொன்றையந்தார்
அடிக ளடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.4
பேரழகுடைய, மாவடு போன்ற மையுண்ட கண்களை உடைய பார்வதியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, பொந்து களை இருப்பிடமாகக் கொண்ட பாம்பினை வேங்கையின் தோலாகிய ஆடைமேல் இறுகச் சுற்றி, மேலே பூசப்பட்ட நீற்றின்மீது பொன்னைச் சிதறவிட்டாற்போன்றபசிய கொன்றைமாலையை அணிந்த சிவ பெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
805 பொறுத்தா னமரர்க் கமுதருளி நஞ்ச
முண்டுகண்டம்
கறுத்தான் கறுப்பழ காவுடை யான்கங்கை
செஞ்சடைமேல்
செறுத்தான் றனஞ்சயன் சேணா ரகலங்
கணையொன்றினால்
அறுத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.5
தேவர்களுக்கு அமுதம் வழங்க விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருந்தி நீலகண்டனாய் அந்தக் கறுப்பினைத் தனக்கு அழகாகக் கொண்டவனாய், கங்கையைச் சிவந்த சடைமீது அடக்கினவனாய், அருச்சுனனுடைய பரந்த மார்பினை அம்புஒன்றினால் புண்படுத்திய சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
806 காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக்
காலொன்றினால்
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் கணையென்னு
மொள்ளழலால்
மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க
விழுமியநூல்
ஆய்ந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.6
மார்க்கண்டேயன் எமனாற் பகைத்துயிர் கவரப்படுதற்குரியனல்லன் என்று அவனைக் கோபித்தவனாகிய கூற்றுவனைத் திருவடி ஒன்றினால் பாய்ந்துதைத்தான். பெரிய மதில்கள்மூன்றனையும் அம்பு என்ற ஒள்ளிய தீயினில் மூழ்கிச் சாம்பலாகச் செய்து, இடமகன்ற ஏழுலங்களும் விளங்கும்படியாக மேம்பட்ட நூல்களை ஆய்ந்துள்ள சிவபெருமான் அடிநீழற் கீழதல்லவோ எனதாருயிர்.
807 உளைந்தான் செறுதற் கரியான் றலையை
யுகிரொன்றினால்
களைந்தா னதனை நிறைய நெடுமால்
கணார்குருதி
வளைந்தா னொருவிர லின்னொடு வீழ்வித்துச்
சாம்பர்வெண்ணீ
றளைந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.7
பிரமனுடைய தவறான செயலைக் கண்டு வருந்தினனாய், அச்செயலுக்கு உரிய ஒறுப்புக்காக வெல்லுதற்கு அரிய அவன் தலையைநகம் ஒன்றினால் நீக்கியவனாய், அம்மண்டையோடு நிறையுமாறு திருமாலுடைய உடம்பிலுள்ள குருதியை நிரப்பினனாய் ,இராவணனை ஒருவிரலை அழுத்திக் கயிலைமலை யின் கீழ் விழச் செய்தவனாய், சாம்பலாகிய நீற்றினை உடல் முழுதும் பூசியவனுமான சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
808 808முந்திவட் டத்திடைப்பட்டதெல் லாமுடி
வேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற்
கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும்
நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்த்தென்
னாருயிரே
4.084.8
என் இந்த வாழ்க்கையின் முற்பகுதியில் யான் செய்தனவற்றைஎல்லாம் உட்கொண்டு அரசர்களுடைய பரிசனங்களாகிய தொகுதியினரிடம் அகப்பட்டு அவர்களால் பலவகையாகத் துன்புறுத்தப்படுவதற்கு அஞ்சிப் போலும் நந்தியா வட்டப்பூவும் கொன்றைப்பூவும் ஒளிவீசும் சென்னியும் மாலை வானம் போன்ற செம்மேனியுமுள்ள அம்மானுடைய அடிநிழலைச் சேர்ந்தது என் ஆருயிர்.
809 மிகத்தான் பெரியதொர் வேங்கை யதள்கொண்டு
மெய்ம்மருவி
அகத்தான் வெருவநல் லாளை நடுக்குறுப்
பான்வரும்பொன்
முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி னாலுகப்
பானிசைந்த
அகத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.9
மிகப்பெரிய வேங்கையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திப் பார்வதியை உள்ளம் அஞ்சி நடுங்கச் செய்பவனாய்த் தன்னை நோக்கி வந்த பொன் போன்ற பொலிவை உடைய கங்கையைத் தன் சடையில் முகந்து கொண்டதால் சடை குளிர அதனால் மனத்தில் மகிழ்வெய்தியவனாய், என்னை அடிமையாக ஏற்றுக் கொள்ள இசைந்தசிவபெருமானுடைய அடிநிழல் கீழது அல்லவோ எனதாருயிர்.
810 பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி
யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை யட்ட
கடவுண்முக்கண்
எம்மா னிவனென் றிருவரு மேத்த
வெரிநிமிர்ந்த
அம்மா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.10
படம் எடுக்கும் மேம்பட்ட பாம்பினை ஒத்த அல்குலைஉடையவளாய்ச் சிறிய பாதங்களை உடையளான பார்வதி அஞ்சக் கையிலே மேம்பட்ட கட்டமைந்த வில்லை ஏந்திய மன்மதனை அழித்த தெய்வமாகிய முக்கண்ணனாம் எம்பெருமான் என்று பிரமனும் திருமானும் புகழும்படி தீத்தம்பமாக ஓங்கி வளர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடைய அடி நிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
811 பழகவொ ரூர்தியரன் பைங்கட் பாரிடம்
பாணிசெய்யக்
குழலு முழவொடு மாநட மாடி
யுயரிலங்கைக்
கிழவ னிருபது தோளு மொருவிர
லாலிறுத்த
அழக னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.11
ஊர்ந்து செலுத்தக் காளையை வாகனமாக உடையவனாய், தீயவர்களை அழிப்பவனாய், பூதங்கள் தாளம் போடக் குழலும் முழவும் ஒலிக்க மேம்பட்ட கூத்து நிகழ்த்துபவனாய், மேம்பட்ட இலங்கை அரசனாகிய இராவணனுடைய இருபது தோள்களையும் தன் திருவடியின் ஒருவிரலால் நெரித்த அழகனாகிய சிவபெருமானுடைய அடிநிழலின் கீழல்லவோ அடியேனடைய அரிய உயிர் பாதுகாவலாக உள்ளது.
திருச்சிற்றம்பலம்
4.084.ஆருயிர்த் திருவிருத்தம் திருவிருத்தம் திருச்சிற்றம்பலம்
801 எட்டாந் திசைக்கு மிருதிசைக் கும்மிறை வாமுறையென் றிட்டா ரமரர்வெம் பூச லெனக்கேட் டெரிவிழியா ஒட்டாக் கயவர் திரிபுர மூன்றையு மோரம்பினால் அட்டா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. 4.084.1
கிழக்கு தென்கிழக்கு முதலிய எட்டுத்திசைகளொடு மேல் கீழ் ஆக இருதிசைகள் ஆகப் பத்துத்திசைகளுக்கும் தலைவனே! 'எங்களைத் திரிபுரத்து அசுரர்களிடமிருந்து காத்தல் நினக்கே உரிய செயலாகும்' என்று தேவர்கள் வேண்டிய கூக்குரலைக் கேட்டுத் தீப்போல விழித்துத் தங்களோடு நட்புறவினால் பொருந்தாத கீழ்மக்களுடைய வானத்தில் உலவும் மும்மதில்களையும் ஓரம்பினால் அழித்தசிவபெருமானுடைய திருவடி நிழலின் கீழ் அல்லவோ என் அரிய உயிர் தங்கியுள்ளது.
802 பேழ்வா யரவி னரைக்கமர்ந் தேறிப் பிறங்கிலங்கு தேய்வா யிளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான் மூவா னிளகான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும் ஆவா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே 4.084.2
பிளந்த வாயை உடைய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி, ஒளிவீசும் உருத்தேய்ந்த இளம் பிறையைச் சிவந்த சடையின்மேல் வைத்த தேவர் பிரானாய், மூப்பும் இளமையும் இலாது என்றும் ஒரே நிலையனாய், இந்நிலவுலகும் தேவருலகும் மற்ற உலகங்களுமாகி உள்ள சிவபெருமானுடைய திருவடி நிழலின்கீழ் அல்லவோ அடியேனது அரிய உயிர் நிலைத்துள்ளது.
803 தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த எரியா ரிலங்கிய சூலத்தி னானிமை யாதமுக்கட் பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந் தன்பிறப்பை அரியா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. 4.084.3
தாங்குதற்கரிய சினம் கொண்டு தக்கன் செய்த வேள்வியினை அழித்து மகிழ்ந்தவனாய், நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கிய சூலப்படையை உடையவனாய், இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய பெரியவனாய், மேம்பட்ட அடியார்களின் பிறவித்தொடர்பை அறுப்பவனாய், தான் பிறவா யாக்கைப் பெரியோனாய் இருக்கும் சிவபெருமானுடைய அடி நிழல் கீழது எம் ஆருயிரே. (பிறப்பை + அறியான் பிறத்தலை இல்லாதவன். அருமை - இன்மை.)
804 வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையொர் பான்மகிழ்ந்து வெடிகொ ளரவொடு வேங்கை யதள்கொண்டு மேன்மருவிப் பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந் தன்னபைங் கொன்றையந்தார் அடிக ளடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. 4.084.4
பேரழகுடைய, மாவடு போன்ற மையுண்ட கண்களை உடைய பார்வதியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, பொந்து களை இருப்பிடமாகக் கொண்ட பாம்பினை வேங்கையின் தோலாகிய ஆடைமேல் இறுகச் சுற்றி, மேலே பூசப்பட்ட நீற்றின்மீது பொன்னைச் சிதறவிட்டாற்போன்றபசிய கொன்றைமாலையை அணிந்த சிவ பெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
805 பொறுத்தா னமரர்க் கமுதருளி நஞ்ச முண்டுகண்டம் கறுத்தான் கறுப்பழ காவுடை யான்கங்கை செஞ்சடைமேல் செறுத்தான் றனஞ்சயன் சேணா ரகலங் கணையொன்றினால் அறுத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. 4.084.5
தேவர்களுக்கு அமுதம் வழங்க விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருந்தி நீலகண்டனாய் அந்தக் கறுப்பினைத் தனக்கு அழகாகக் கொண்டவனாய், கங்கையைச் சிவந்த சடைமீது அடக்கினவனாய், அருச்சுனனுடைய பரந்த மார்பினை அம்புஒன்றினால் புண்படுத்திய சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
806 காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக் காலொன்றினால் பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் கணையென்னு மொள்ளழலால் மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல் ஆய்ந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. 4.084.6
மார்க்கண்டேயன் எமனாற் பகைத்துயிர் கவரப்படுதற்குரியனல்லன் என்று அவனைக் கோபித்தவனாகிய கூற்றுவனைத் திருவடி ஒன்றினால் பாய்ந்துதைத்தான். பெரிய மதில்கள்மூன்றனையும் அம்பு என்ற ஒள்ளிய தீயினில் மூழ்கிச் சாம்பலாகச் செய்து, இடமகன்ற ஏழுலங்களும் விளங்கும்படியாக மேம்பட்ட நூல்களை ஆய்ந்துள்ள சிவபெருமான் அடிநீழற் கீழதல்லவோ எனதாருயிர்.
807 உளைந்தான் செறுதற் கரியான் றலையை யுகிரொன்றினால் களைந்தா னதனை நிறைய நெடுமால் கணார்குருதி வளைந்தா னொருவிர லின்னொடு வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ றளைந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. 4.084.7
பிரமனுடைய தவறான செயலைக் கண்டு வருந்தினனாய், அச்செயலுக்கு உரிய ஒறுப்புக்காக வெல்லுதற்கு அரிய அவன் தலையைநகம் ஒன்றினால் நீக்கியவனாய், அம்மண்டையோடு நிறையுமாறு திருமாலுடைய உடம்பிலுள்ள குருதியை நிரப்பினனாய் ,இராவணனை ஒருவிரலை அழுத்திக் கயிலைமலை யின் கீழ் விழச் செய்தவனாய், சாம்பலாகிய நீற்றினை உடல் முழுதும் பூசியவனுமான சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
808 808முந்திவட் டத்திடைப்பட்டதெல் லாமுடி வேந்தர் தங்கள் பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும் நக்கசென்னி அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்த்தென் னாருயிரே 4.084.8
என் இந்த வாழ்க்கையின் முற்பகுதியில் யான் செய்தனவற்றைஎல்லாம் உட்கொண்டு அரசர்களுடைய பரிசனங்களாகிய தொகுதியினரிடம் அகப்பட்டு அவர்களால் பலவகையாகத் துன்புறுத்தப்படுவதற்கு அஞ்சிப் போலும் நந்தியா வட்டப்பூவும் கொன்றைப்பூவும் ஒளிவீசும் சென்னியும் மாலை வானம் போன்ற செம்மேனியுமுள்ள அம்மானுடைய அடிநிழலைச் சேர்ந்தது என் ஆருயிர்.
809 மிகத்தான் பெரியதொர் வேங்கை யதள்கொண்டு மெய்ம்மருவி அகத்தான் வெருவநல் லாளை நடுக்குறுப் பான்வரும்பொன் முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி னாலுகப் பானிசைந்த அகத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. 4.084.9
மிகப்பெரிய வேங்கையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திப் பார்வதியை உள்ளம் அஞ்சி நடுங்கச் செய்பவனாய்த் தன்னை நோக்கி வந்த பொன் போன்ற பொலிவை உடைய கங்கையைத் தன் சடையில் முகந்து கொண்டதால் சடை குளிர அதனால் மனத்தில் மகிழ்வெய்தியவனாய், என்னை அடிமையாக ஏற்றுக் கொள்ள இசைந்தசிவபெருமானுடைய அடிநிழல் கீழது அல்லவோ எனதாருயிர்.
810 பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக் கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுண்முக்கண் எம்மா னிவனென் றிருவரு மேத்த வெரிநிமிர்ந்த அம்மா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. 4.084.10
படம் எடுக்கும் மேம்பட்ட பாம்பினை ஒத்த அல்குலைஉடையவளாய்ச் சிறிய பாதங்களை உடையளான பார்வதி அஞ்சக் கையிலே மேம்பட்ட கட்டமைந்த வில்லை ஏந்திய மன்மதனை அழித்த தெய்வமாகிய முக்கண்ணனாம் எம்பெருமான் என்று பிரமனும் திருமானும் புகழும்படி தீத்தம்பமாக ஓங்கி வளர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடைய அடி நிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
811 பழகவொ ரூர்தியரன் பைங்கட் பாரிடம் பாணிசெய்யக் குழலு முழவொடு மாநட மாடி யுயரிலங்கைக் கிழவ னிருபது தோளு மொருவிர லாலிறுத்த அழக னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. 4.084.11
ஊர்ந்து செலுத்தக் காளையை வாகனமாக உடையவனாய், தீயவர்களை அழிப்பவனாய், பூதங்கள் தாளம் போடக் குழலும் முழவும் ஒலிக்க மேம்பட்ட கூத்து நிகழ்த்துபவனாய், மேம்பட்ட இலங்கை அரசனாகிய இராவணனுடைய இருபது தோள்களையும் தன் திருவடியின் ஒருவிரலால் நெரித்த அழகனாகிய சிவபெருமானுடைய அடிநிழலின் கீழல்லவோ அடியேனடைய அரிய உயிர் பாதுகாவலாக உள்ளது.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|