ஒயிலாட்டம் என்பது ஆண்கள் குழுவாக இணைந்து ஆடும் ஆட்டமாகும். ஒயில் என்ற சொல்லுக்கு அழகு , ஒய்யாரம், அலங்காரம் எனப் பொருள்படுகிறது. எனவே ஒயிலாட்டம் என்பதற்கு அழகுள்ள ஆட்டம் எனவும் பொருள்படும். ஒயிலாட்டத்தில் பெண்கள் பங்கேற்பது இல்லை. இவை தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உடையார்பட்டி, ஆலங்குளம் வட்டத்தில் இரதமுடையார் குளம்,புளியம்பட்டி, நெல்லை சந்திப்பு போன்ற பகுதிகளிலும் , மதுரைக்கு வட கிழக்கே அழகர் கோயிலின் அருகே வலையப்பட்டி கிராமத்திலும் , திருச்சி, கோயமுத்தூர் ஆகிய இடங்களிலும், இலங்கையிலும் நடத்தப்பெறுகிறது.கத்தோலிக்க கிறித்தவத் தலங்களில் பைபிள் கதைகளைப் பாடல்களாகக் கொண்டு பாடப்பட்டு ஆடப்படுகிறது .தமிழக நாட்டார் கலைகளுள் குறிப்பிடத்தகுந்த ஒயிலாட்டம் இன்று பல மாற்றங்களைக் கொண்டுள்ளது
|