LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

பாகற்காய் குழம்பு (ஆந்திரா ஸ்டைல்)

தேவையானவை :

1. பாகற்காய் - 5  

2. வெங்காயம் - 2

3. தக்காளி சாறு - 1/4 கப்

4. வரமிளகாய் - 4

5. மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

6. சீரகம் - 1 டீஸ்பூன்

7. எள் - 1 டீஸ்பூன்

8. எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

9. இஞ்சி, பேஸ்ட் பேஸ்ட் - 4 டீஸ்பூன்  

10. நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

11. புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

12. உப்பு - தேவையான அளவு

செய்முறை :


1. பாகற்காயை நீரில் நன்றாக கழுவி, அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டாக நறுக்கிக் கொண்டு, உப்பு சேர்த்து கிளறி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் அதனை சிறிது நீர் சேர்த்து கழுவிக் கொண்டு, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், வரமிளகாய், மல்லி, சீரகம் மற்றும் எள் சேர்த்து மிதமான தீயில், பொன்னிறமாக வறுத்து குளிர வைக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகற்காயை போட்டு ஐந்து நிமிடம் சற்று பொன்னிறமாக வறுத்த பின், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நான்கு நிமிடம் வதக்க வேண்டும்.

3. பிறகு இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி, தக்காளி சாற்றை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். கடைசியாக அரைத்து வைத்திருக்கும் பொடி, நாட்டுச்சர்க்கரை, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான, மணமான பாகற்காய் குழம்பு ரெடி!!!

by Swathi   on 05 Jan 2016  1 Comments
Tags: பாகற்காய் குழம்பு   Bitter Gourd Curry   Pavakkai Kulambu              
 தொடர்புடையவை-Related Articles
பாகற்காய் குழம்பு (ஆந்திரா ஸ்டைல்) பாகற்காய் குழம்பு (ஆந்திரா ஸ்டைல்)
கருத்துகள்
15-Jan-2016 10:06:38 sathiya said : Report Abuse
சூப்பர்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.