|
||||||||
போனதெங்கே மனிதநேயம் |
||||||||
ஈரமண்ணாய் மனம்கசிந்து வீட்டுப் பக்கம் இருப்போரின் துயரினிலும் பங்கு கொண்டு வேரடியாய் அன்புதனில் கிளைய ணைத்து வெறுப்பின்றிக் கூட்டமாக ஒன்றி ணைந்து தூரத்தே அடிபட்டு வீழ்ந்த வர்க்கும் துடிதுடித்தே ஓடிப்போய் உதவி செய்தும் பாரத்தைப் பிறருக்காய்ச் சுமந்து நின்ற பரிவென்னும் மனிதநேயம் போன தெங்கே ! சேற்றினிலே களையெடுக்கும் கரங்க ளாலே சேர்ந்தணைத்துக் கபடுகளைக் களைந்தெ ரிந்து நாற்றுகளை நட்டுவயல் வளர்த்தல் போல நகையாலே வஞ்சமின்றி வளர்ந்த நட்பால் வேற்றுமைகள் இல்லாத குடும்ப மாக வேறுவேறு சாதியரும் நெஞ்ச மொன்றி போற்றுகின்ற சோதரராய்ப் பிணைந்தி ருந்த போலியற்ற மனிதநேயம் போன தெங்கே !
காடுகளாய் நம்முன்னோர் வளர்த்து வைத்த கவின்மிகுந்த மரங்களினை வெட்டி வெட்டி கோடுகளாய் மண்ணுடலைப் பிளக்க வைத்துக் கொட்டிவந்த மழைவளத்தை அழித்த தைப்போல் வாடுகின்ற பயிர்கண்டு வாட்டம் கொண்ட வள்ளலாரின் மனிதநேயம் அழித்து விட்டோம் பாடுபட்டு யாதுமஊர் என்ற பண்பைப் பாதுகாத்துத் தந்ததனைத் தொலைத்து விட்டோம் !
பக்கத்தில் குடியிருப்போர் முகத்தைக் கூட பார்க்காமல் வாழுகின்ற வகையைக் கற்றோம் துக்கத்தில் துடிப்போரின் குரலைக் கேட்டும் துடிக்காமல் இயல்பாக நடக்கக் கற்றோம் நக்கலாகப் பிறர்துயரில் வாடக் கண்டும் நகைத்தவரை ஏளனமாய்ப் பழிக்கக் கற்றோம் வக்கிரமே எண்ணமாகி அடுத்தி ருப்போர் வயிறதனில் அடிப்பதையே தொழிலாய்க் கற்றோம் !
பிறர்வாழப் பொறுக்காத மனத்தைப் பெற்றோம் பிறர்நெஞ்சைப் புண்ணாக்கும் கலையில் தேர்ந்தோம் பிறர்போற்றப் பொதுநலத்தை மேடை மீது பிசிரின்றிப் பேசிநிதம் கள்ள ராகப் பிறர்பொருளை அபகரிக்கும் தன்ன லத்தால் பிறர்காலை வெட்டுவதில் வல்ல ரானோம் சிரம்தாழ்த்தும் பழிதனக்கே நாணி டாமல்
- பாவலர் கருமலைத்தமிழாழன் |
||||||||
by Swathi on 24 Oct 2014 0 Comments | ||||||||
Tags: Humanity Humanity Poems Tamil Humanity Kavithai Manithaneyam Manithaneyam Kavithai Tamil Manithaneyam Kavithaikal மனித நேயம் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|