|
||||||||
சப்பாணிப்பருவம் |
||||||||
868 உரைசெயப் புவனத்தி னுங்கைப் பரச்சுமை யொழித்தவர்கடக்கவேலை -
யொன்றினி தியற்றுதற் கெண்ணா ரதன்றியு முரைக்குமுன் செயவும்வல்லார்
கரைசெயிறு நிற்கமழு மானெடுஞ் சூலங் கபாலம்வெந் தழறமருகள் -
காணுமிவை முற்சுமை கழித்தலி னுடம்படுதல் கடன்மையே கன்றுமென்னில்
விரைசெய்மலர் செற்றுபொழில் கூற்றுமது ரையில்விறகு வெட்டிமண் வெட்டியங்கம் -
வெட்டிப் பயின்றவங் கைத்தலங் கொடுநலில வேண்டுமென் போமென்செய்வாய்
தரைசெய்பய னாய்வ்ந்த மெய்ஞ்ஞான பாற்கரன் சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.
(1)
869 புண்ணிய மலிந்தநின் றிருவார்த்தை யென்னப் பொலிந்தபே ராகமத்திற் -
போற்றுபெரு நடவைபிற் சமயமும் விசேடமும் பொற்பப் புரிந்துபின்ன,
ரண்ணிய சிரத்தின்மேற் றங்கிமனு முதலாய வத்தவடி வங்களாரு -
மமைதர்ச் சோதனை புரிந்தபின் விரும்பிநவில பிடேக மாதிகொண்டு,
கண்ணிய நறுந்தா மரைத்திரு வடித்தலங் கருதுமச் சென்னியேறக் -
கண்டபின் யாவருங் காணநீ றுத்லியெங் கைம்மீது மேறி மிளிருந்.
தண்ணிய மலர்க்கைகொடு ஞானவடி வாயினோன் சப்பாணி கொட்டியருளெ-
தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.
(2)
870 நின்னையொப் பில்லாத சின்மய னெனக்கலை நிரம்புபா டியமுனிவனா -
நெடியசிவ ஞானமுனி யாலுண்ர்ந் தேந்துதி நிகழ்த்தலிவ் வாறதென்றே,
யன்னையொப் பாங்கச்சி யப்பமுனி யானன் றறிந்தன மினித்துதித்தற் -
கஞ்சுறோ மெங்கள்செய லிற்றாக வெங்களி னகப்படா தகல்வையலைநீ,
பின்னைமற் றொன்றெண்ணி யகலநினை வாயெனிற் பெரிதுமகிழ் செய்தல்பாட்டே -
பேணுகென வனறொண்டார் பாற்பேசி னானெவன் பேசெணி னெவன் பேசுவாய்,
தன்னையொப் பாய்கருணை யுருவாய சின்மயன் சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.
(3)
871 தூயதிரு வாதவூ ரடிகளின் னுங்கோவை சொற்றிடுத லின்று நன்று -
சூழுமொரு மூர்த்தியின் னுங்கண்முன் கைமூளை சொரிதர்த் தேய்ப்பதின்று,
மேயவொரு கண்ணப்ப ரின்னுங்க ணப்புவான் விழியிடந் திடுதலின்று -
மெய்க்குறிப் புத்தொண்ட ரினுமுத்த மாங்கங்கன் மீதுமோ துதலுமின்று,
பாயதிரி புரநீறு பட்டமையின் மாமேரு பற்றிவாங் குதலுமாயப் -
பகழிகோறாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே,
தாயனைய சிற்பரன் றாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.
(4)
872 எள்ளருங் கைலாய வரைவீற் றிருந்தநா ளிங்கனம் பாராட்டுதற்
கேற்புடைய வடிவமென் றென்றுனை விடுத்தன மிருந்தவ்ர்க ணாலவரேத்த,
விள்ளருந் தளிரால நன்னிழலு மொருகுந்த மென்னிழலு மொருவரேத்த -
வீற்றினி திருந்தநாள் சிலவன்றி யிலையன விடுத்தனம் பல்லோர்தொழு,
வுள்ளரும் பேரருளி னிவ்விடத் துறையுநா ளூழியினு மேலுமேலு -
முள்ளவென வோர்ந்திது துணிந்தன மகிழ்ச்சியெளி யோங்கட்கு மேன்மேலுறத்,
தள்ளருஞ் சுத்தமேற் சித்தாந்த சைவமணி சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ்த் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. (5)
(5)
வேறு.
873 விண்டல ருந்திற மின்றி யெழுந்து விளங்குறு தானவனை
வெய்யவ னாகிய தங்கொழு நன்புடை மேவு தொறும்பற்றித்
தண்ட லிலாதிடி செய்து பொடித்துத் தாமரை மலரள்ளித்
தானெறி தரனே ராமென வெள்ளிய தண்ணிய நீறள்ளி
யண்டல்செய் தொண்டர் தமக்கருள் கையா லருணோ தயமெழுவா
யறுசிறு பொழுது மெருத்துரி போர்த்தி யமைந்தவள் வார்முரசக்
கொண்டன் முழங்குங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (6)
(6)
874 பாலம் பொலிதரு செங்க ணநங்கன் படரா னமர்புரியும்
பான்மை குறித்தென வோவி யெழுந்தருள் பண்ணாவ நின்னாம
ஞாலம் பொலிதரு குரவர்கள் யாவரு நன்கு நவிற்றலலா
னாடி வரைந்து விடுத்திடு மாற்ற னமக்கிலை யென்றயரச்
சீலம் பொலிதரு பக்குவ ரஞ்செவி செப்பி விடுத்தலொடுந்
திசைதிசை செல்ல வரைந்தும் விடுத்திடல் செய்யு மலர்க்கையினாற்
கோலம் பொலிதரு கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (7)
(7)
875 நீடிய வன்பு நிகழ்த்திடு தொண்டர் நெருங்கி வணங்குதொறு
நிறைதரு திருவருள் பொங்குற நோக்குபு நிலவுவெ ணகைசெய்து
நாடிய வன்னர் பசிப்பிணி யும்படர் நல்கு முடற்பிணியு
நாளும் விலங்க லிலாது பவம்புக நாட்டு மலப்பிணியு
மோடி யவிந்திட வுண்கல சேடம துதவு திருக்கையினா
லுறுவிடை யின்மையி னாமுறு வாமென வுன்னுபு வானிடபங்
கூடிய மதில்சூழ் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (8)
(8)
876 பொருவாய் தரினு மிலாதவ னேனும் போற்றி வளர்த்தமுனைப்
பொய்யில் பழக்கம் விடுத்தில னிங்குப் போந்து மெனப்புகல
வுருவாய் மையுந லொழுக்க விழுப்பமு மொள்ளறி வுங்குணனு
முண்மையு மோருபு நந்தி குலத்திற் கொருகதிர் நீயென்று
திருவாய் மலருபு குறுநகை கொண்டொளி திகழ்சுப் பிரமணிய
தேவனை முதுகுதை வருமலர் புரையுஞ் செங்கையி னான்மணிசால்
குருவாய் மாடக் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (9)
(9)
877 சேர்ந்தறி யாநங் கைம்மல ரென்றுன் றிருவாய் மலருதியேற்
றெளியா யாங்க டெளிந்திடு மாறு சிறப்ப நினைப்பூசை
யார்ந்துமு னீயினி தாற்றிய துண்டே யன்று குவித்துளையா
லன்ன தயர்த்தனை கொல்லோ வின்று மப்பரி சேநினையா
வோர்ந்து முணர்ச்சி யிலாப்பர சமய ருரைத்திடு வார்த்தைகளு
ளொன்றும் பொருளல வென்றுகை தட்டுத லொப்ப வுவந்தறிவு
கூர்ந்தவர் வாழுங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (10)
(10)
868 உரைசெயப் புவனத்தி னுங்கைப் பரச்சுமை யொழித்தவர்கடக்கவேலை - யொன்றினி தியற்றுதற் கெண்ணா ரதன்றியு முரைக்குமுன் செயவும்வல்லார் கரைசெயிறு நிற்கமழு மானெடுஞ் சூலங் கபாலம்வெந் தழறமருகள் - காணுமிவை முற்சுமை கழித்தலி னுடம்படுதல் கடன்மையே கன்றுமென்னில் விரைசெய்மலர் செற்றுபொழில் கூற்றுமது ரையில்விறகு வெட்டிமண் வெட்டியங்கம் - வெட்டிப் பயின்றவங் கைத்தலங் கொடுநலில வேண்டுமென் போமென்செய்வாய் தரைசெய்பய னாய்வ்ந்த மெய்ஞ்ஞான பாற்கரன் சப்பாணி கொட்டியருளே - தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. (1)
869 புண்ணிய மலிந்தநின் றிருவார்த்தை யென்னப் பொலிந்தபே ராகமத்திற் - போற்றுபெரு நடவைபிற் சமயமும் விசேடமும் பொற்பப் புரிந்துபின்ன, ரண்ணிய சிரத்தின்மேற் றங்கிமனு முதலாய வத்தவடி வங்களாரு - மமைதர்ச் சோதனை புரிந்தபின் விரும்பிநவில பிடேக மாதிகொண்டு, கண்ணிய நறுந்தா மரைத்திரு வடித்தலங் கருதுமச் சென்னியேறக் - கண்டபின் யாவருங் காணநீ றுத்லியெங் கைம்மீது மேறி மிளிருந். தண்ணிய மலர்க்கைகொடு ஞானவடி வாயினோன் சப்பாணி கொட்டியருளெ- தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. (2)
870 நின்னையொப் பில்லாத சின்மய னெனக்கலை நிரம்புபா டியமுனிவனா - நெடியசிவ ஞானமுனி யாலுண்ர்ந் தேந்துதி நிகழ்த்தலிவ் வாறதென்றே, யன்னையொப் பாங்கச்சி யப்பமுனி யானன் றறிந்தன மினித்துதித்தற் - கஞ்சுறோ மெங்கள்செய லிற்றாக வெங்களி னகப்படா தகல்வையலைநீ, பின்னைமற் றொன்றெண்ணி யகலநினை வாயெனிற் பெரிதுமகிழ் செய்தல்பாட்டே - பேணுகென வனறொண்டார் பாற்பேசி னானெவன் பேசெணி னெவன் பேசுவாய், தன்னையொப் பாய்கருணை யுருவாய சின்மயன் சப்பாணி கொட்டியருளே - தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. (3)
871 தூயதிரு வாதவூ ரடிகளின் னுங்கோவை சொற்றிடுத லின்று நன்று - சூழுமொரு மூர்த்தியின் னுங்கண்முன் கைமூளை சொரிதர்த் தேய்ப்பதின்று, மேயவொரு கண்ணப்ப ரின்னுங்க ணப்புவான் விழியிடந் திடுதலின்று - மெய்க்குறிப் புத்தொண்ட ரினுமுத்த மாங்கங்கன் மீதுமோ துதலுமின்று, பாயதிரி புரநீறு பட்டமையின் மாமேரு பற்றிவாங் குதலுமாயப் - பகழிகோறாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே, தாயனைய சிற்பரன் றாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே - தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. (4)
872 எள்ளருங் கைலாய வரைவீற் றிருந்தநா ளிங்கனம் பாராட்டுதற் கேற்புடைய வடிவமென் றென்றுனை விடுத்தன மிருந்தவ்ர்க ணாலவரேத்த, விள்ளருந் தளிரால நன்னிழலு மொருகுந்த மென்னிழலு மொருவரேத்த - வீற்றினி திருந்தநாள் சிலவன்றி யிலையன விடுத்தனம் பல்லோர்தொழு, வுள்ளரும் பேரருளி னிவ்விடத் துறையுநா ளூழியினு மேலுமேலு - முள்ளவென வோர்ந்திது துணிந்தன மகிழ்ச்சியெளி யோங்கட்கு மேன்மேலுறத், தள்ளருஞ் சுத்தமேற் சித்தாந்த சைவமணி சப்பாணி கொட்டியருளே - தண்டமிழ்த் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. (5) (5)
வேறு. 873 விண்டல ருந்திற மின்றி யெழுந்து விளங்குறு தானவனை வெய்யவ னாகிய தங்கொழு நன்புடை மேவு தொறும்பற்றித் தண்ட லிலாதிடி செய்து பொடித்துத் தாமரை மலரள்ளித் தானெறி தரனே ராமென வெள்ளிய தண்ணிய நீறள்ளி யண்டல்செய் தொண்டர் தமக்கருள் கையா லருணோ தயமெழுவா யறுசிறு பொழுது மெருத்துரி போர்த்தி யமைந்தவள் வார்முரசக் கொண்டன் முழங்குங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (6) (6) 874 பாலம் பொலிதரு செங்க ணநங்கன் படரா னமர்புரியும் பான்மை குறித்தென வோவி யெழுந்தருள் பண்ணாவ நின்னாம ஞாலம் பொலிதரு குரவர்கள் யாவரு நன்கு நவிற்றலலா னாடி வரைந்து விடுத்திடு மாற்ற னமக்கிலை யென்றயரச் சீலம் பொலிதரு பக்குவ ரஞ்செவி செப்பி விடுத்தலொடுந் திசைதிசை செல்ல வரைந்தும் விடுத்திடல் செய்யு மலர்க்கையினாற் கோலம் பொலிதரு கோகழி யூரன் கொட்டுக சப்பாணி குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (7) (7) 875 நீடிய வன்பு நிகழ்த்திடு தொண்டர் நெருங்கி வணங்குதொறு நிறைதரு திருவருள் பொங்குற நோக்குபு நிலவுவெ ணகைசெய்து நாடிய வன்னர் பசிப்பிணி யும்படர் நல்கு முடற்பிணியு நாளும் விலங்க லிலாது பவம்புக நாட்டு மலப்பிணியு மோடி யவிந்திட வுண்கல சேடம துதவு திருக்கையினா லுறுவிடை யின்மையி னாமுறு வாமென வுன்னுபு வானிடபங் கூடிய மதில்சூழ் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (8) (8) 876 பொருவாய் தரினு மிலாதவ னேனும் போற்றி வளர்த்தமுனைப் பொய்யில் பழக்கம் விடுத்தில னிங்குப் போந்து மெனப்புகல வுருவாய் மையுந லொழுக்க விழுப்பமு மொள்ளறி வுங்குணனு முண்மையு மோருபு நந்தி குலத்திற் கொருகதிர் நீயென்று திருவாய் மலருபு குறுநகை கொண்டொளி திகழ்சுப் பிரமணிய தேவனை முதுகுதை வருமலர் புரையுஞ் செங்கையி னான்மணிசால் குருவாய் மாடக் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (9) (9) 877 சேர்ந்தறி யாநங் கைம்மல ரென்றுன் றிருவாய் மலருதியேற் றெளியா யாங்க டெளிந்திடு மாறு சிறப்ப நினைப்பூசை யார்ந்துமு னீயினி தாற்றிய துண்டே யன்று குவித்துளையா லன்ன தயர்த்தனை கொல்லோ வின்று மப்பரி சேநினையா வோர்ந்து முணர்ச்சி யிலாப்பர சமய ருரைத்திடு வார்த்தைகளு ளொன்றும் பொருளல வென்றுகை தட்டுத லொப்ப வுவந்தறிவு கூர்ந்தவர் வாழுங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (10) (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|