LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

சப்பாணிப்பருவம்

 

868 உரைசெயப் புவனத்தி னுங்கைப் பரச்சுமை யொழித்தவர்கடக்கவேலை - 
      யொன்றினி தியற்றுதற் கெண்ணா ரதன்றியு முரைக்குமுன் செயவும்வல்லார் 
கரைசெயிறு நிற்கமழு மானெடுஞ் சூலங் கபாலம்வெந் தழறமருகள் - 
      காணுமிவை முற்சுமை கழித்தலி னுடம்படுதல் கடன்மையே கன்றுமென்னில் 
விரைசெய்மலர் செற்றுபொழில் கூற்றுமது ரையில்விறகு வெட்டிமண் வெட்டியங்கம் - 
      வெட்டிப் பயின்றவங் கைத்தலங் கொடுநலில வேண்டுமென் போமென்செய்வாய் 
தரைசெய்பய னாய்வ்ந்த மெய்ஞ்ஞான பாற்கரன் சப்பாணி கொட்டியருளே - 
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. 
(1)
869 புண்ணிய மலிந்தநின் றிருவார்த்தை யென்னப் பொலிந்தபே ராகமத்திற் - 
      போற்றுபெரு நடவைபிற் சமயமும் விசேடமும் பொற்பப் புரிந்துபின்ன,
ரண்ணிய சிரத்தின்மேற் றங்கிமனு முதலாய வத்தவடி வங்களாரு - 
      மமைதர்ச் சோதனை புரிந்தபின் விரும்பிநவில பிடேக மாதிகொண்டு, 
கண்ணிய நறுந்தா மரைத்திரு வடித்தலங் கருதுமச் சென்னியேறக் - 
      கண்டபின் யாவருங் காணநீ றுத்லியெங் கைம்மீது மேறி மிளிருந். 
தண்ணிய மலர்க்கைகொடு ஞானவடி வாயினோன் சப்பாணி கொட்டியருளெ- 
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. 
(2)
870 நின்னையொப் பில்லாத சின்மய னெனக்கலை நிரம்புபா டியமுனிவனா - 
      நெடியசிவ ஞானமுனி யாலுண்ர்ந் தேந்துதி நிகழ்த்தலிவ் வாறதென்றே,
யன்னையொப் பாங்கச்சி யப்பமுனி யானன் றறிந்தன மினித்துதித்தற் - 
      கஞ்சுறோ மெங்கள்செய லிற்றாக வெங்களி னகப்படா தகல்வையலைநீ, 
பின்னைமற் றொன்றெண்ணி யகலநினை வாயெனிற் பெரிதுமகிழ் செய்தல்பாட்டே - 
      பேணுகென வனறொண்டார் பாற்பேசி னானெவன் பேசெணி னெவன் பேசுவாய், 
தன்னையொப் பாய்கருணை யுருவாய சின்மயன் சப்பாணி கொட்டியருளே - 
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. 
(3)
871 தூயதிரு வாதவூ ரடிகளின் னுங்கோவை சொற்றிடுத லின்று நன்று - 
      சூழுமொரு மூர்த்தியின் னுங்கண்முன் கைமூளை சொரிதர்த் தேய்ப்பதின்று, 
மேயவொரு கண்ணப்ப ரின்னுங்க ணப்புவான் விழியிடந் திடுதலின்று - 
      மெய்க்குறிப் புத்தொண்ட ரினுமுத்த மாங்கங்கன் மீதுமோ துதலுமின்று, 
பாயதிரி புரநீறு பட்டமையின் மாமேரு பற்றிவாங் குதலுமாயப் - 
      பகழிகோறாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே, 
தாயனைய சிற்பரன் றாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே - 
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. 
(4)
872 எள்ளருங் கைலாய வரைவீற் றிருந்தநா ளிங்கனம் பாராட்டுதற் 
      கேற்புடைய வடிவமென் றென்றுனை விடுத்தன மிருந்தவ்ர்க ணாலவரேத்த, 
விள்ளருந் தளிரால நன்னிழலு மொருகுந்த மென்னிழலு மொருவரேத்த - 
      வீற்றினி திருந்தநாள் சிலவன்றி யிலையன விடுத்தனம் பல்லோர்தொழு, 
வுள்ளரும் பேரருளி னிவ்விடத் துறையுநா ளூழியினு மேலுமேலு -
      முள்ளவென வோர்ந்திது துணிந்தன மகிழ்ச்சியெளி யோங்கட்கு மேன்மேலுறத்,
தள்ளருஞ் சுத்தமேற் சித்தாந்த சைவமணி சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ்த் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. (5)
(5)
வேறு.
873 விண்டல ருந்திற மின்றி யெழுந்து விளங்குறு தானவனை
      வெய்யவ னாகிய தங்கொழு நன்புடை மேவு தொறும்பற்றித்
தண்ட லிலாதிடி செய்து பொடித்துத் தாமரை மலரள்ளித்
      தானெறி தரனே ராமென வெள்ளிய தண்ணிய நீறள்ளி
யண்டல்செய் தொண்டர் தமக்கருள் கையா லருணோ தயமெழுவா
      யறுசிறு பொழுது மெருத்துரி போர்த்தி யமைந்தவள் வார்முரசக்
கொண்டன் முழங்குங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (6)
(6)
874 பாலம் பொலிதரு செங்க ணநங்கன் படரா னமர்புரியும்
      பான்மை குறித்தென வோவி யெழுந்தருள் பண்ணாவ நின்னாம
ஞாலம் பொலிதரு குரவர்கள் யாவரு நன்கு நவிற்றலலா
      னாடி வரைந்து விடுத்திடு மாற்ற னமக்கிலை யென்றயரச்
சீலம் பொலிதரு பக்குவ ரஞ்செவி செப்பி விடுத்தலொடுந்
      திசைதிசை செல்ல வரைந்தும் விடுத்திடல் செய்யு மலர்க்கையினாற்
கோலம் பொலிதரு கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (7)
(7)
875 நீடிய வன்பு நிகழ்த்திடு தொண்டர் நெருங்கி வணங்குதொறு
      நிறைதரு திருவருள் பொங்குற நோக்குபு நிலவுவெ ணகைசெய்து
நாடிய வன்னர் பசிப்பிணி யும்படர் நல்கு முடற்பிணியு
      நாளும் விலங்க லிலாது பவம்புக நாட்டு மலப்பிணியு
மோடி யவிந்திட வுண்கல சேடம துதவு திருக்கையினா
      லுறுவிடை யின்மையி னாமுறு வாமென வுன்னுபு வானிடபங்
கூடிய மதில்சூழ் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (8)
(8)
876 பொருவாய் தரினு மிலாதவ னேனும் போற்றி வளர்த்தமுனைப்
      பொய்யில் பழக்கம் விடுத்தில னிங்குப் போந்து மெனப்புகல
வுருவாய் மையுந லொழுக்க விழுப்பமு மொள்ளறி வுங்குணனு
      முண்மையு மோருபு நந்தி குலத்திற் கொருகதிர் நீயென்று
திருவாய் மலருபு குறுநகை கொண்டொளி திகழ்சுப் பிரமணிய
      தேவனை முதுகுதை வருமலர் புரையுஞ் செங்கையி னான்மணிசால்
குருவாய் மாடக் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (9)
(9)
877 சேர்ந்தறி யாநங் கைம்மல ரென்றுன் றிருவாய் மலருதியேற்
      றெளியா யாங்க டெளிந்திடு மாறு சிறப்ப நினைப்பூசை
யார்ந்துமு னீயினி தாற்றிய துண்டே யன்று குவித்துளையா
      லன்ன தயர்த்தனை கொல்லோ வின்று மப்பரி சேநினையா
வோர்ந்து முணர்ச்சி யிலாப்பர சமய ருரைத்திடு வார்த்தைகளு
      ளொன்றும் பொருளல வென்றுகை தட்டுத லொப்ப வுவந்தறிவு
கூர்ந்தவர் வாழுங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (10)
(10)

 

868 உரைசெயப் புவனத்தி னுங்கைப் பரச்சுமை யொழித்தவர்கடக்கவேலை - 

      யொன்றினி தியற்றுதற் கெண்ணா ரதன்றியு முரைக்குமுன் செயவும்வல்லார் 

கரைசெயிறு நிற்கமழு மானெடுஞ் சூலங் கபாலம்வெந் தழறமருகள் - 

      காணுமிவை முற்சுமை கழித்தலி னுடம்படுதல் கடன்மையே கன்றுமென்னில் 

விரைசெய்மலர் செற்றுபொழில் கூற்றுமது ரையில்விறகு வெட்டிமண் வெட்டியங்கம் - 

      வெட்டிப் பயின்றவங் கைத்தலங் கொடுநலில வேண்டுமென் போமென்செய்வாய் 

தரைசெய்பய னாய்வ்ந்த மெய்ஞ்ஞான பாற்கரன் சப்பாணி கொட்டியருளே - 

      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. 

(1)

 

869 புண்ணிய மலிந்தநின் றிருவார்த்தை யென்னப் பொலிந்தபே ராகமத்திற் - 

      போற்றுபெரு நடவைபிற் சமயமும் விசேடமும் பொற்பப் புரிந்துபின்ன,

ரண்ணிய சிரத்தின்மேற் றங்கிமனு முதலாய வத்தவடி வங்களாரு - 

      மமைதர்ச் சோதனை புரிந்தபின் விரும்பிநவில பிடேக மாதிகொண்டு, 

கண்ணிய நறுந்தா மரைத்திரு வடித்தலங் கருதுமச் சென்னியேறக் - 

      கண்டபின் யாவருங் காணநீ றுத்லியெங் கைம்மீது மேறி மிளிருந். 

தண்ணிய மலர்க்கைகொடு ஞானவடி வாயினோன் சப்பாணி கொட்டியருளெ- 

      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. 

(2)

 

870 நின்னையொப் பில்லாத சின்மய னெனக்கலை நிரம்புபா டியமுனிவனா - 

      நெடியசிவ ஞானமுனி யாலுண்ர்ந் தேந்துதி நிகழ்த்தலிவ் வாறதென்றே,

யன்னையொப் பாங்கச்சி யப்பமுனி யானன் றறிந்தன மினித்துதித்தற் - 

      கஞ்சுறோ மெங்கள்செய லிற்றாக வெங்களி னகப்படா தகல்வையலைநீ, 

பின்னைமற் றொன்றெண்ணி யகலநினை வாயெனிற் பெரிதுமகிழ் செய்தல்பாட்டே - 

      பேணுகென வனறொண்டார் பாற்பேசி னானெவன் பேசெணி னெவன் பேசுவாய், 

தன்னையொப் பாய்கருணை யுருவாய சின்மயன் சப்பாணி கொட்டியருளே - 

      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. 

(3)

 

871 தூயதிரு வாதவூ ரடிகளின் னுங்கோவை சொற்றிடுத லின்று நன்று - 

      சூழுமொரு மூர்த்தியின் னுங்கண்முன் கைமூளை சொரிதர்த் தேய்ப்பதின்று, 

மேயவொரு கண்ணப்ப ரின்னுங்க ணப்புவான் விழியிடந் திடுதலின்று - 

      மெய்க்குறிப் புத்தொண்ட ரினுமுத்த மாங்கங்கன் மீதுமோ துதலுமின்று, 

பாயதிரி புரநீறு பட்டமையின் மாமேரு பற்றிவாங் குதலுமாயப் - 

      பகழிகோறாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே, 

தாயனைய சிற்பரன் றாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே - 

      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. 

(4)

 

872 எள்ளருங் கைலாய வரைவீற் றிருந்தநா ளிங்கனம் பாராட்டுதற் 

      கேற்புடைய வடிவமென் றென்றுனை விடுத்தன மிருந்தவ்ர்க ணாலவரேத்த, 

விள்ளருந் தளிரால நன்னிழலு மொருகுந்த மென்னிழலு மொருவரேத்த - 

      வீற்றினி திருந்தநாள் சிலவன்றி யிலையன விடுத்தனம் பல்லோர்தொழு, 

வுள்ளரும் பேரருளி னிவ்விடத் துறையுநா ளூழியினு மேலுமேலு -

      முள்ளவென வோர்ந்திது துணிந்தன மகிழ்ச்சியெளி யோங்கட்கு மேன்மேலுறத்,

தள்ளருஞ் சுத்தமேற் சித்தாந்த சைவமணி சப்பாணி கொட்டியருளே -

      தண்டமிழ்த் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. (5)

(5)

 

வேறு.

873 விண்டல ருந்திற மின்றி யெழுந்து விளங்குறு தானவனை

      வெய்யவ னாகிய தங்கொழு நன்புடை மேவு தொறும்பற்றித்

தண்ட லிலாதிடி செய்து பொடித்துத் தாமரை மலரள்ளித்

      தானெறி தரனே ராமென வெள்ளிய தண்ணிய நீறள்ளி

யண்டல்செய் தொண்டர் தமக்கருள் கையா லருணோ தயமெழுவா

      யறுசிறு பொழுது மெருத்துரி போர்த்தி யமைந்தவள் வார்முரசக்

கொண்டன் முழங்குங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி

      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (6)

(6)

874 பாலம் பொலிதரு செங்க ணநங்கன் படரா னமர்புரியும்

      பான்மை குறித்தென வோவி யெழுந்தருள் பண்ணாவ நின்னாம

ஞாலம் பொலிதரு குரவர்கள் யாவரு நன்கு நவிற்றலலா

      னாடி வரைந்து விடுத்திடு மாற்ற னமக்கிலை யென்றயரச்

சீலம் பொலிதரு பக்குவ ரஞ்செவி செப்பி விடுத்தலொடுந்

      திசைதிசை செல்ல வரைந்தும் விடுத்திடல் செய்யு மலர்க்கையினாற்

கோலம் பொலிதரு கோகழி யூரன் கொட்டுக சப்பாணி

      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (7)

(7)

875 நீடிய வன்பு நிகழ்த்திடு தொண்டர் நெருங்கி வணங்குதொறு

      நிறைதரு திருவருள் பொங்குற நோக்குபு நிலவுவெ ணகைசெய்து

நாடிய வன்னர் பசிப்பிணி யும்படர் நல்கு முடற்பிணியு

      நாளும் விலங்க லிலாது பவம்புக நாட்டு மலப்பிணியு

மோடி யவிந்திட வுண்கல சேடம துதவு திருக்கையினா

      லுறுவிடை யின்மையி னாமுறு வாமென வுன்னுபு வானிடபங்

கூடிய மதில்சூழ் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி

      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (8)

(8)

876 பொருவாய் தரினு மிலாதவ னேனும் போற்றி வளர்த்தமுனைப்

      பொய்யில் பழக்கம் விடுத்தில னிங்குப் போந்து மெனப்புகல

வுருவாய் மையுந லொழுக்க விழுப்பமு மொள்ளறி வுங்குணனு

      முண்மையு மோருபு நந்தி குலத்திற் கொருகதிர் நீயென்று

திருவாய் மலருபு குறுநகை கொண்டொளி திகழ்சுப் பிரமணிய

      தேவனை முதுகுதை வருமலர் புரையுஞ் செங்கையி னான்மணிசால்

குருவாய் மாடக் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி

      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (9)

(9)

877 சேர்ந்தறி யாநங் கைம்மல ரென்றுன் றிருவாய் மலருதியேற்

      றெளியா யாங்க டெளிந்திடு மாறு சிறப்ப நினைப்பூசை

யார்ந்துமு னீயினி தாற்றிய துண்டே யன்று குவித்துளையா

      லன்ன தயர்த்தனை கொல்லோ வின்று மப்பரி சேநினையா

வோர்ந்து முணர்ச்சி யிலாப்பர சமய ருரைத்திடு வார்த்தைகளு

      ளொன்றும் பொருளல வென்றுகை தட்டுத லொப்ப வுவந்தறிவு

கூர்ந்தவர் வாழுங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி

      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (10)

(10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.