LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-44

 

7.044.முடிப்பதுகங்கை 
பண் - கொல்லிக்கௌவாணம் 
திருச்சிற்றம்பலம் 
446 முடிப்பது கங்கையுந் திங்களுஞ்
செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ 
ழக்கணை நூறினார்
கடிப்பதும் ஏறுமென் றஞ்சு 
வன்திருக் கைகளால்
பிடிப்பது பாம்பன்றி இல்லை 
யோஎம் பிரானுக்கே.
7.044.1
எம் பெருமான் தலையிற் சூடுவது கங்கையையும் சந்திரனையும், அழித்தது மூன்று மதில்களை, அவற்றைக் கை நொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார். தனது வலிய திருக்கைகளால் பிடிப்பது பாம்பு. அது கடித்தவுடன், நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்பொழுதும் அஞ்சுவேன்; இவை தவிர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ! 
447 தூறன்றி யாடரங் கில்லை 
யோசுட லைப்பொடி
நீறன்றிச் சாந்தமற் றில்லை 
யோஇம வான்மகள்
கூறன்றிக் கூறாவ தில்லை 
யோகொல்லைச்சில்லைவெள்
ளேறன்றி யேறுவ தில்லை 
யோஎம் பிரானுக்கே.
7.044.2
எம் பெருமானுக்கு, ஆடுகின்ற அரங்கு, காடன்றி வேறு இல்லையோ! சாந்து, சுடலைப்பொடியாகிய சாம்பலன்றி வேறு இல்லையோ! தனது திருமேனியில் ஒரு கூறாய் நிற்பது மலையரையன் மகளது கூறன்றி வேறு இல்லையோ! ஏறுவது, முல்லை நிலத்தில் உள்ள சிறுமையுடைய வெள்ளை எருதன்றி வேறு இல்லையோ! 
448 தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் 
காள்தடு மாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனு மாநி 
லத்துயிர் கோறலைச்
சிட்டன் திரிபுரஞ் சுட்ட 
தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர் 
காள்எம் பிரானையே.
7.044.3
மன அலைவையும், எல்லாப் பொருட்கும் நிலைக் களமாகிய பெரிய நிலத்தின்கண் உள்ள உயிர்களைக் கொல்லுதலையும் நன்னெறிக்குத் தடை என்று உணர்ந்த அடியவர்களே, மேலானவனும், திரிபுரத்தை எரித்த தேவதேவனும் ஆகிய எம்பெருமானை, வெறுத்துப் பேசன்மின். 
449 நரிதலை கவ்வநின் றோரி 
கூப்பிட நள்ளிருள்
எரிதலைப் பேய்புடை சூழ 
வாரிருட் காட்டிடைச்
சிரிதலைமாலை சடைக்க 
ணிந்தஎஞ் செல்வனைப்
பிரிதலைப் பேசன்மின் தொண்டர் 
காள்எம் பிரானையே.
7.044.4
அடியவர்களே, நரிகள், இறந்தோரது தலைகளைக் கௌவி இழுக்க, ஓரிகள் கூக்குரலிட, செறிந்த இருட்காலத்தில், நெருப்பு எரிகின்ற இடத்தில், பேய்கள் புடைசூழ்ந்திருக்க அரிய இருளையுடைய காட்டில், சிரிப்பதுபோலும் தலைமாலையைச் சடையின்கண் அணிந்த எம் செல்வனாகிய எம்பெருமானை, விட்டு நீங்குதற்குரிய சொற்களைப் பேசன்மின்! 
450 வேயன தோளி மலைம 
களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாட 
னாகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள் 
அல்ல லறுக்கினும்
பேயனே பித்தனே என்ப 
ரால்எம் பிரானையே.
7.044.5
மூங்கில்போலும் தோள்களையுடையவளாகிய மலைமகளை விரும்புகின்ற, வஞ்சனை இல்லாத, பெரிய மலையிடத் தவனாகிய மாட்சியையுடைய எம்பெருமானை, தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்றவரது துன்பங்களைக் களைதலைக் கண்டும், அவனைச் சிலர் 'அவன் பேயோடாடுபவன்; பித்துக் கொண்டவன்' என்று இகழ்வர்; எம்பெருமான், அவர் அங்ஙனம் இகழுமாறு இருத்தல் என்! 
451 இறைவ னென்றெம் பெருமானை 
வானவர் ஏத்தப்போய்த்
துறையொன் றித்தூ மலரிட் 
டடியிணை போற்றுவார்
மறையன்றிப் பாடுவ தில்லை 
யோமல்கு வானிளம்
பிறையன்றிச் சூடுவ தில்லை 
யோஎம் பிரானுக்கே.
7.044.6
தேவர் எம்பெருமானை இறைவன் என்று அறிந்து துதிக்கச்சென்று, நன்னெறியிற் பொருந்தி, தூய மலர்களைச் சொரிந்து அவன் அடியிணையைப் போற்றுவர்; அங்ஙனமாக, அவனுக்கு, பாடும்பாட்டு, மறைகளன்றி வேறு ஒன்றும் இல்லையோ! சூடும் கண்ணி, வானத்திற்செல்லும் இளம்பிறையன்றி, வேறு ஒன்றும் இல்லையோ! 
452 தாருந்தண் கொன்றையுங் கூவி 
ளந்தனி மத்தமும்
ஆரும் அளவறி யாத 
ஆதியும் அந்தமும்
ஊரும்ஒன் றில்லை உலகெ 
லாம்உகப் பார்தொழப்
பேரும்ஓ ராயிர மென்ப 
ரால்எம் பிரானுக்கே.
7.044.7
எம் பெருமானுக்கு, மாலையும், 'தண்ணிய கொன்றைப் பூ, கூவிளையிலை, மிகத் தாழ்ந்த ஊமத்தம்பூ' என்பன. அளவும் யாராலும் அறியப்படாத முதலும், முடிவும்; உலகம் முழுதுமாம். சொல்வதற்குப் பேரும் ஒன்றல்ல; ஓர் ஆயிரம் என்று சொல்லி யாவரும் நகைப்பர்; அவன் இவ்வாறிருத்தல் என்னோ! 
453 அரியொடு பூமிசை யானும் 
ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி 
திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த 
எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை 
யோஎம் பிரானுக்கே.
7.044.8
கீற்றுக்களையுடைய பாம்போடு, 'வன்னி, ஊமத்தை, பிறை' என்பவைகளை, புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை, திருமாலும், பூமேல் இருப்பவனாகிய பிரமனும் அடியும் முடியும் அறியமாட்டார்; பிறர் ஆர் அறிவார்! அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ! 
454 கரிய மனச்சமண் காடி 
யாடு கழுக்களால்
எரிய வசவுணுந் தன்மை 
யோஇம வான்மகள்
பெரிய மனந்தடு மாற 
வேண்டிப்பெம் மான்மதக்
கரியின் உரியல்ல தில்லை 
யோஎம் பிரானுக்கே.
7.044.9
எம் பெருமானுக்கு கரிய மனத்தையுடைய, கஞ்சியைக் குடிக்கின்ற, கழுமரங்கள் போலத் தோன்றுகின்ற சமணர்களால், மனம் எரிந்து இகழப்படுதல்தான் இயல்போ! மலையரையன் மகளாகிய தன் தேவியின் பெருமை பொருந்திய மனம் கலங்க வேண்டி, அவன் மதத்தையுடைய யானையினின்றும் உரித்த தோலல்லது போர்வை வேறு இல்லையோ! 
455 காய்சின மால்விடை மாணிக் 
கத்தெங் கறைக்கண்டத்
தீசனை ஊரன் எட்டோ 
டிரண்டு விரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானியப் 
பனடித் தொண்டன்றான்
ஏசின பேசுமின் தொண்டர் 
காள்எம் பிரானையே.
7.044.10
அடியவர்களே, காய்கின்ற சினத்தையுடைய, பெரிய விடையை ஏறுகின்ற எங்கள் மாணிக்கம் போல்பவனும், கறுப்புநிறத்தையுடைய கண்டத்தையுடைய இறைவனும் ஆகிய பெருமானை, அவன் அடித்தொண்டனும், மிக்க புகழையுடைய வனப்பகைக்கு ஞானத்தந்தையும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடியனவும், ஏசிப் பாடியனவும் ஆகிய இப்பத்துப் பாடல்களால், எம் பெருமானைப் பாடுமின். 
திருச்சிற்றம்பலம்

 

7.044.முடிப்பதுகங்கை 

பண் - கொல்லிக்கௌவாணம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

446 முடிப்பது கங்கையுந் திங்களுஞ்

செற்றது மூவெயில்

நொடிப்பது மாத்திரை நீறெ 

ழக்கணை நூறினார்

கடிப்பதும் ஏறுமென் றஞ்சு 

வன்திருக் கைகளால்

பிடிப்பது பாம்பன்றி இல்லை 

யோஎம் பிரானுக்கே.

7.044.1

 

  எம் பெருமான் தலையிற் சூடுவது கங்கையையும் சந்திரனையும், அழித்தது மூன்று மதில்களை, அவற்றைக் கை நொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார். தனது வலிய திருக்கைகளால் பிடிப்பது பாம்பு. அது கடித்தவுடன், நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்பொழுதும் அஞ்சுவேன்; இவை தவிர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ! 

 

 

447 தூறன்றி யாடரங் கில்லை 

யோசுட லைப்பொடி

நீறன்றிச் சாந்தமற் றில்லை 

யோஇம வான்மகள்

கூறன்றிக் கூறாவ தில்லை 

யோகொல்லைச்சில்லைவெள்

ளேறன்றி யேறுவ தில்லை 

யோஎம் பிரானுக்கே.

7.044.2

 

  எம் பெருமானுக்கு, ஆடுகின்ற அரங்கு, காடன்றி வேறு இல்லையோ! சாந்து, சுடலைப்பொடியாகிய சாம்பலன்றி வேறு இல்லையோ! தனது திருமேனியில் ஒரு கூறாய் நிற்பது மலையரையன் மகளது கூறன்றி வேறு இல்லையோ! ஏறுவது, முல்லை நிலத்தில் உள்ள சிறுமையுடைய வெள்ளை எருதன்றி வேறு இல்லையோ! 

 

 

448 தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் 

காள்தடு மாற்றத்தை

ஒட்டெனும் ஒட்டெனு மாநி 

லத்துயிர் கோறலைச்

சிட்டன் திரிபுரஞ் சுட்ட 

தேவர்கள் தேவனை

வெட்டெனப் பேசன்மின் தொண்டர் 

காள்எம் பிரானையே.

7.044.3

 

  மன அலைவையும், எல்லாப் பொருட்கும் நிலைக் களமாகிய பெரிய நிலத்தின்கண் உள்ள உயிர்களைக் கொல்லுதலையும் நன்னெறிக்குத் தடை என்று உணர்ந்த அடியவர்களே, மேலானவனும், திரிபுரத்தை எரித்த தேவதேவனும் ஆகிய எம்பெருமானை, வெறுத்துப் பேசன்மின். 

 

 

449 நரிதலை கவ்வநின் றோரி 

கூப்பிட நள்ளிருள்

எரிதலைப் பேய்புடை சூழ 

வாரிருட் காட்டிடைச்

சிரிதலைமாலை சடைக்க 

ணிந்தஎஞ் செல்வனைப்

பிரிதலைப் பேசன்மின் தொண்டர் 

காள்எம் பிரானையே.

7.044.4

 

  அடியவர்களே, நரிகள், இறந்தோரது தலைகளைக் கௌவி இழுக்க, ஓரிகள் கூக்குரலிட, செறிந்த இருட்காலத்தில், நெருப்பு எரிகின்ற இடத்தில், பேய்கள் புடைசூழ்ந்திருக்க அரிய இருளையுடைய காட்டில், சிரிப்பதுபோலும் தலைமாலையைச் சடையின்கண் அணிந்த எம் செல்வனாகிய எம்பெருமானை, விட்டு நீங்குதற்குரிய சொற்களைப் பேசன்மின்! 

 

 

450 வேயன தோளி மலைம 

களைவி ரும்பிய

மாயமில் மாமலை நாட 

னாகிய மாண்பனை

ஆயன சொல்லிநின் றார்கள் 

அல்ல லறுக்கினும்

பேயனே பித்தனே என்ப 

ரால்எம் பிரானையே.

7.044.5

 

  மூங்கில்போலும் தோள்களையுடையவளாகிய மலைமகளை விரும்புகின்ற, வஞ்சனை இல்லாத, பெரிய மலையிடத் தவனாகிய மாட்சியையுடைய எம்பெருமானை, தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்றவரது துன்பங்களைக் களைதலைக் கண்டும், அவனைச் சிலர் 'அவன் பேயோடாடுபவன்; பித்துக் கொண்டவன்' என்று இகழ்வர்; எம்பெருமான், அவர் அங்ஙனம் இகழுமாறு இருத்தல் என்! 

 

 

451 இறைவ னென்றெம் பெருமானை 

வானவர் ஏத்தப்போய்த்

துறையொன் றித்தூ மலரிட் 

டடியிணை போற்றுவார்

மறையன்றிப் பாடுவ தில்லை 

யோமல்கு வானிளம்

பிறையன்றிச் சூடுவ தில்லை 

யோஎம் பிரானுக்கே.

7.044.6

 

  தேவர் எம்பெருமானை இறைவன் என்று அறிந்து துதிக்கச்சென்று, நன்னெறியிற் பொருந்தி, தூய மலர்களைச் சொரிந்து அவன் அடியிணையைப் போற்றுவர்; அங்ஙனமாக, அவனுக்கு, பாடும்பாட்டு, மறைகளன்றி வேறு ஒன்றும் இல்லையோ! சூடும் கண்ணி, வானத்திற்செல்லும் இளம்பிறையன்றி, வேறு ஒன்றும் இல்லையோ! 

 

 

452 தாருந்தண் கொன்றையுங் கூவி 

ளந்தனி மத்தமும்

ஆரும் அளவறி யாத 

ஆதியும் அந்தமும்

ஊரும்ஒன் றில்லை உலகெ 

லாம்உகப் பார்தொழப்

பேரும்ஓ ராயிர மென்ப 

ரால்எம் பிரானுக்கே.

7.044.7

 

  எம் பெருமானுக்கு, மாலையும், 'தண்ணிய கொன்றைப் பூ, கூவிளையிலை, மிகத் தாழ்ந்த ஊமத்தம்பூ' என்பன. அளவும் யாராலும் அறியப்படாத முதலும், முடிவும்; உலகம் முழுதுமாம். சொல்வதற்குப் பேரும் ஒன்றல்ல; ஓர் ஆயிரம் என்று சொல்லி யாவரும் நகைப்பர்; அவன் இவ்வாறிருத்தல் என்னோ! 

 

 

453 அரியொடு பூமிசை யானும் 

ஆதியும் அறிகிலார்

வரிதரு பாம்பொடு வன்னி 

திங்களும் மத்தமும்

புரிதரு புன்சடை வைத்த 

எம்புனி தற்கினி

எரியன்றி அங்கைக்கொன் றில்லை 

யோஎம் பிரானுக்கே.

7.044.8

 

  கீற்றுக்களையுடைய பாம்போடு, 'வன்னி, ஊமத்தை, பிறை' என்பவைகளை, புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை, திருமாலும், பூமேல் இருப்பவனாகிய பிரமனும் அடியும் முடியும் அறியமாட்டார்; பிறர் ஆர் அறிவார்! அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ! 

 

 

454 கரிய மனச்சமண் காடி 

யாடு கழுக்களால்

எரிய வசவுணுந் தன்மை 

யோஇம வான்மகள்

பெரிய மனந்தடு மாற 

வேண்டிப்பெம் மான்மதக்

கரியின் உரியல்ல தில்லை 

யோஎம் பிரானுக்கே.

7.044.9

 

  எம் பெருமானுக்கு கரிய மனத்தையுடைய, கஞ்சியைக் குடிக்கின்ற, கழுமரங்கள் போலத் தோன்றுகின்ற சமணர்களால், மனம் எரிந்து இகழப்படுதல்தான் இயல்போ! மலையரையன் மகளாகிய தன் தேவியின் பெருமை பொருந்திய மனம் கலங்க வேண்டி, அவன் மதத்தையுடைய யானையினின்றும் உரித்த தோலல்லது போர்வை வேறு இல்லையோ! 

 

 

455 காய்சின மால்விடை மாணிக் 

கத்தெங் கறைக்கண்டத்

தீசனை ஊரன் எட்டோ 

டிரண்டு விரும்பிய

ஆயின சீர்ப்பகை ஞானியப் 

பனடித் தொண்டன்றான்

ஏசின பேசுமின் தொண்டர் 

காள்எம் பிரானையே.

7.044.10

 

  அடியவர்களே, காய்கின்ற சினத்தையுடைய, பெரிய விடையை ஏறுகின்ற எங்கள் மாணிக்கம் போல்பவனும், கறுப்புநிறத்தையுடைய கண்டத்தையுடைய இறைவனும் ஆகிய பெருமானை, அவன் அடித்தொண்டனும், மிக்க புகழையுடைய வனப்பகைக்கு ஞானத்தந்தையும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடியனவும், ஏசிப் பாடியனவும் ஆகிய இப்பத்துப் பாடல்களால், எம் பெருமானைப் பாடுமின். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.