LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-46

 

7.046.திருநாகைக்காரோணம் 
பண் - கொல்லிக்கௌவாணம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர். 
தேவியார் - நீலாயதாட்சியம்மை. 
467 பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் 
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் 
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் 
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.
7.046.1
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பலவூர்களிற் சென்று, பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர்; அங்ஙனம் இரக்குங்கால், பிச்சைஇட வருகின்ற, பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர்; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு, எருதின்மேல் ஏறித்திரிவீர்; இவைகளைப் போலவே, உள்ள பொருளை மறைத்துவைத்து, என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது, ஏதும் இல்லை என்பீர்; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும், மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து, உடம்பிற் பூசிக் கொள்வதற்கு, இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும், அத்தகையதான சந்தனமும் நீர், தவிராது அளித்தருளல் வேண்டும். 
468 வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி
விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்
பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்
திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்
கடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே.
7.046.2
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், என்னை, கைப்புடைய வேம்பினையும், தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து, நான், இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க, நீர் என்முன் நில்லாது, திருத்துருத்தியில் புகுந்து, அங்கே இருந்துவிட்டீர்; இப்பொழுது உம்மைக் கண்டேன்; நீர் பாம்பும், விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விடநினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ! ஒட்டேன்; ஏனெனில், உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன்; நீர்ச்சேம்பும், செங்கழுநீரும், குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந்திருக்கும் தீவண்ணராகிய நீர், இப்பொழுது எனக்கு 'காம்பு' என்றும் 'நேத்திரம்' என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும். 
469 பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப்
பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.
7.046.3
விரிந்த சடையின்மேல் பாம்பையும், சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே, காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய, கடற்கரைக் கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி, விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண, இசைபாடி, இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர்; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழியாது, வீண் சொற்களைப் பேசி, பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின், மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ? சொல்லீர். 
470 விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.
7.046.4
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே. நீ வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர்; மற்றும், அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ, வீணை அழகுடையதாய் விளங்க, தெருவில் விடையை ஏறிச் செல்வீர்; கொடி யனவாகிய பேய்கள் சூழநடன மாடுதலை மேற்கொண்டு. அழகுடையவராய், மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ? அல்லது பெருமையோ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது? சொல்லீர். 
471 மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
சுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம்
பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
பண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக்
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.
7.046.5
அழகரே. கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது. வன்கண்மை கொண்டு திரிந்தும், வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும், காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் உம் மனம் வேண்டியவாறே திரிவீர்; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும்! ஏனெனில், முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ! 'கண்டோம்' என்பார்க்கும், அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே. நீண்டு நின்றீரல்லிரோ? அதனால், நும் இயல்பையெல்லாம் விடுத்து, உமது கருவூலத்திலிருந்து நறுமணம், ஆடை, ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும். 
472 இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்
இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்
பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
கலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.
7.046.6
தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற, செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு, பூதங்கள் இசையைப் பாட, பலரும் இடுகின்ற பிச்சைக்கு, வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர்; ஆயினும், நீ அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது, அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே; அங்ஙனமாக, இப்பொழுது எனக்குப் பட்டும், சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ! 
473 தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.
7.046.7
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நல்லாடையை உடுத்த அகன்ற அல்குலையும், தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில், நீர் சொல்ல வந்தவன் போல, ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க, அவனை முன்னர் ஒறுத்து, அவன் சிறந்த இசையைப் பாட, அவனுக்குத் தேரும், வாளும் கொடுத்தீர்; அதுவன்றி, வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு, மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர்; அதுபோல, இன்று எனக்கு அருளல்வேண்டும். 
474 மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந்தீர்
வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றவேல் திருவுடையீ நல்கூர்ந்தீ ரல்லீர்
அணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில்
தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.
7.046.8
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, யான் உமக்கு வழிவழியாக அடியேன்; அதுவன்றி, நீர் வலிந்து, என்னை, 'வாழ்விப்பேன்' என்று சொல்லி அடிமை கொண்டீர்; மிக்க செல்வம் உடையீர்; வறுமை யுடையீரும் அல்லீர்;ஆயினும், மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில், எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும்; அதனோடு ஏறிப் போவதற்கு, காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும்; இவைகளை அளியாதொழியின், உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது, உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன். 
475 மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்
திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.
7.046.9
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, எம்பெருமானே, மண்ணுலகிலும், விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது. ஆதலின, நான் உம்மையுந் தௌய மாட்டேன்; உம் தேவியாகிய மலையரையன் மகளையும், சிறுவனாகிய முருகனையும் தௌயமாட்டேன்; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி, தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின், அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன்? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ? சொல்லியருளீர்; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில், உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துகொள்வேன்; பின்பு, 'இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன்; கொடுமையுடையவன்' என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா. 
476 மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீ
மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.
7.046.10
மான் கன்று பொருந்திய கையை உடையவரே. தலைவரே, கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பெருமையோ மிக உடையீர்; 'மிக்க பொருட்குவையைத் தருவேன்' என்று சொல்லி, வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர்; ஆனால், இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி, திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர்; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால், நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ! படேன், இலச்சினை பொருந்திய, நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடை வாளும், தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும், பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும். அன்றியும் மூன்று பொழுதிலும், கறியும், சோறும், அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும். 
477 பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென்
றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.
7.046.11
அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மையால், அவரை, 'கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய 'பரவை சங்கிலி' என்னும் இருவருக்கும், எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே, யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன்? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும்; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும், ஒள்ளிய பட்டாடையும், பூவும், கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற, சந்தனமும் வேண்டும்' என்று வேண்டிப் பாடிய, அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள், அமரர் உலகத்தை ஆள்வார்கள். 
திருச்சிற்றம்பலம்

 

7.046.திருநாகைக்காரோணம் 

பண் - கொல்லிக்கௌவாணம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர். 

தேவியார் - நீலாயதாட்சியம்மை. 

 

 

467 பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் 

பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்

செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் 

செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர்

முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை

யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்

கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் 

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7.046.1

 

  கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பலவூர்களிற் சென்று, பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர்; அங்ஙனம் இரக்குங்கால், பிச்சைஇட வருகின்ற, பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர்; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு, எருதின்மேல் ஏறித்திரிவீர்; இவைகளைப் போலவே, உள்ள பொருளை மறைத்துவைத்து, என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது, ஏதும் இல்லை என்பீர்; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும், மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து, உடம்பிற் பூசிக் கொள்வதற்கு, இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும், அத்தகையதான சந்தனமும் நீர், தவிராது அளித்தருளல் வேண்டும். 

 

 

468 வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி

விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்

பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்

பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்

சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்

திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே

காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்

கடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7.046.2

 

  கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், என்னை, கைப்புடைய வேம்பினையும், தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து, நான், இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க, நீர் என்முன் நில்லாது, திருத்துருத்தியில் புகுந்து, அங்கே இருந்துவிட்டீர்; இப்பொழுது உம்மைக் கண்டேன்; நீர் பாம்பும், விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விடநினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ! ஒட்டேன்; ஏனெனில், உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன்; நீர்ச்சேம்பும், செங்கழுநீரும், குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந்திருக்கும் தீவண்ணராகிய நீர், இப்பொழுது எனக்கு 'காம்பு' என்றும் 'நேத்திரம்' என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும். 

 

 

469 பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப்

பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்

பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்

பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்

வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்

வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்

காண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7.046.3

 

  விரிந்த சடையின்மேல் பாம்பையும், சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே, காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய, கடற்கரைக் கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி, விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண, இசைபாடி, இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர்; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழியாது, வீண் சொற்களைப் பேசி, பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின், மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ? சொல்லீர். 

 

 

470 விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக

வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்

துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்

சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே

வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்

மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்

கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7.046.4

 

  கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே. நீ வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர்; மற்றும், அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ, வீணை அழகுடையதாய் விளங்க, தெருவில் விடையை ஏறிச் செல்வீர்; கொடி யனவாகிய பேய்கள் சூழநடன மாடுதலை மேற்கொண்டு. அழகுடையவராய், மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ? அல்லது பெருமையோ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது? சொல்லீர். 

 

 

471 மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து

வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்

தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்

சுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம்

பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்

பண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக்

கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7.046.5

 

  அழகரே. கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது. வன்கண்மை கொண்டு திரிந்தும், வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும், காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் உம் மனம் வேண்டியவாறே திரிவீர்; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும்! ஏனெனில், முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ! 'கண்டோம்' என்பார்க்கும், அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே. நீண்டு நின்றீரல்லிரோ? அதனால், நும் இயல்பையெல்லாம் விடுத்து, உமது கருவூலத்திலிருந்து நறுமணம், ஆடை, ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும். 

 

 

472 இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்

இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது

பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்

பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ

உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட

உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே

கலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7.046.6

 

  தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற, செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு, பூதங்கள் இசையைப் பாட, பலரும் இடுகின்ற பிச்சைக்கு, வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர்; ஆயினும், நீ அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது, அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே; அங்ஙனமாக, இப்பொழுது எனக்குப் பட்டும், சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ! 

 

 

473 தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்

தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து

தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்

திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்

நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த

நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்

காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7.046.7

 

  கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நல்லாடையை உடுத்த அகன்ற அல்குலையும், தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில், நீர் சொல்ல வந்தவன் போல, ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க, அவனை முன்னர் ஒறுத்து, அவன் சிறந்த இசையைப் பாட, அவனுக்குத் தேரும், வாளும் கொடுத்தீர்; அதுவன்றி, வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு, மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர்; அதுபோல, இன்று எனக்கு அருளல்வேண்டும். 

 

 

474 மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந்தீர்

வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு

ஆற்றவேல் திருவுடையீ நல்கூர்ந்தீ ரல்லீர்

அணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில்

தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந்

தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்

காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7.046.8

 

  கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, யான் உமக்கு வழிவழியாக அடியேன்; அதுவன்றி, நீர் வலிந்து, என்னை, 'வாழ்விப்பேன்' என்று சொல்லி அடிமை கொண்டீர்; மிக்க செல்வம் உடையீர்; வறுமை யுடையீரும் அல்லீர்;ஆயினும், மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில், எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும்; அதனோடு ஏறிப் போவதற்கு, காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும்; இவைகளை அளியாதொழியின், உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது, உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன். 

 

 

475 மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி

மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்

எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான்

எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்

திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில்

திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்

கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7.046.9

 

  கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, எம்பெருமானே, மண்ணுலகிலும், விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது. ஆதலின, நான் உம்மையுந் தௌய மாட்டேன்; உம் தேவியாகிய மலையரையன் மகளையும், சிறுவனாகிய முருகனையும் தௌயமாட்டேன்; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி, தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின், அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன்? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ? சொல்லியருளீர்; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில், உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துகொள்வேன்; பின்பு, 'இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன்; கொடுமையுடையவன்' என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா. 

 

 

476 மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீ

மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்

கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்

கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்

பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்

பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்

கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7.046.10

 

  மான் கன்று பொருந்திய கையை உடையவரே. தலைவரே, கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பெருமையோ மிக உடையீர்; 'மிக்க பொருட்குவையைத் தருவேன்' என்று சொல்லி, வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர்; ஆனால், இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி, திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர்; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால், நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ! படேன், இலச்சினை பொருந்திய, நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடை வாளும், தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும், பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும். அன்றியும் மூன்று பொழுதிலும், கறியும், சோறும், அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும். 

 

 

477 பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்

பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்

உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்

ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்

கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென்

றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன

அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.

7.046.11

 

  அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மையால், அவரை, 'கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய 'பரவை சங்கிலி' என்னும் இருவருக்கும், எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே, யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன்? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும்; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும், ஒள்ளிய பட்டாடையும், பூவும், கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற, சந்தனமும் வேண்டும்' என்று வேண்டிப் பாடிய, அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள், அமரர் உலகத்தை ஆள்வார்கள். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.