|
||||||||
ஏழாம் திருமுறை-4 |
||||||||
7.004.திருஅஞ்சைக்களம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் மலைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அஞ்சைக்களத்தீசுவரர்.
தேவியார் - உமையம்மை.
32 தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே
அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே
அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே
மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
7.004.1
மலைக்கு நிகராகிய தன்மையால் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரத்தின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ தலைக்கு அணிகலமாகத் தலைமாலையை அணிந்தது என்? சடையின்மேல், 'கங்கை' என்னும் ஆற்றைத் தாங்கியது என்? கொல்லும் தன்மை யுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என்? அவ்வுடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என்?
33 பிடித்தாட்டிஓர் நாகத்தைப் பூண்டதென்னே
பிறங்குஞ்சடை மேற்பிறை சூடிற்றென்னே
பொடித்தான்கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே
புகர்ஏறுகந் தேறல் புரிந்ததென்னே
மடித்தோட்டந்து வன்றிரை யெற்றியிட
வளர்சங்கம்அங் காந்துமுத் தஞ்சொரிய
அடித்தார்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
7.004.2
வலிய அலைகள் தம் வடிவத்தைச் சுருளாகச் செய்து ஓடிவந்து மோதுதலினால், கரு வளர்கின்ற சங்குகள் வாய் திறந்து முத்துக்களை ஈன, இங்ஙனம் அலைத்து முழங்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, விரும்பத் தகாத பாம்பை, பிடித்து ஆட்டுதலையும், பூணாகப் பூணுதலையும் மேற்கொண்டது என்? விளங்குகின்ற சடையின்கண் பிறையைச் சூடியது என்? சாம்பலை எடுத்து உடம்பு முழுதும் பூசிக் கொண்டது என்? இழிந்த எருதினையே ஊர்தியாகக் கொள்ள விரும்பியது என்?
34 சிந்தித்தெழு வார்க்குநெல் லிக்கனியே
சிறியார்பெரி யார்மனத் தேறலுற்றால்
முந்தித்தொழு வார்இற வார்பிறவார்
முனிகள்முனி யேஅம ரர்க்கமரா
சந்தித்தட மால்வரை போற்றிரைகள்
தணியாதிட றுங்கட லங்கரைமேல்
அந்தித்தலைச் செக்கர்வா னேஒத்தியால்
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
7.004.3
மூங்கில்களையுடைய பெரிய மலைகள் போலும் அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக் களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, உன்னை நினைந்து துயிலுணர்வார்க்கு நெல்லிக்கனி போன்றவனே, முனிவர்கட்கெல்லாம் முனிவனே, தேவர்கட்கெல்லாம் தேவனே, உன்னை உள்ளந்தௌயப்பெற்றால், சிறியாரும் பெரியாராவர். விரைந்து வந்து உன்னை வணங்குபவர், இறத்தலும் பிறத்தலும் இலராவர். அவரது உள்ளத்தைப் பிணித்தற்கு, நீ, மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானம் போலும் அழகிய திருமேனியை உடையையாய் இருக்கின்றனை.
35 இழைக்கும்மெழுத் துக்குயி ரேஒத்தியால்
இலையேஒத்தி யால்உளை யேஒத்தியால்
குழைக்கும்பயிர்க் கோர்புய லேஒத்தியால்
அடியார்தமக் கோர்குடி யேஒத்தியால்
மழைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டழைக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
7.004.4
துளிகளைத் தூற்றுதலால் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள், பல பொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி, வலம்புரிச் சங்கின் இனிய ஓசையால் யாவரையும் தன்பால் வருவிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, 'மகோதை' என்னும் தலத்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, உலகத்தை இயக்குதலில், எழுதப்படும் எழுத்துக்களுக்கு உயிரெழுத்துப் போல்கின்றாய்; இல்லாதாய் போல்கின்றாய்; ஆயினும் உள்ளாய் போல்கின்றாய்; உயிர்கட்கு உதவுதலில் தளிர்க்கும் பயிர்க்கு மேகம் போல்கின்றாய்; அடியார்களுக்கு அணியையாதலில், அவரோடு ஒருகுடிப் பிறப்பினை போல்கின்றாய்.
36 வீடின்பய னென்பிறப் பின்பயனென்
விடையேறுவ தென்மத யானை நிற்கக்
கூடும்மலை மங்கை யொருத்தியுடன்
சடைமேற்கங்கை யாளைநீ சூடிற்றென்னே
பாடும்புல வர்க்கரு ளும்பொருளென்
நெதியம்பல செய்த கலச்செலவின்
ஆடுங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
7.004.5
பொன், மணி முதலிய செல்வங்களைத் தந்த மரக்கலங்களினது செலவினையுடைய, மூழ்குதற்குரிய கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய, 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, நீ, 'வீடு, பிறப்பு' என்னும் இரண்டனுள் ஒன்றையே அமையாது, மறுதலைப் பொருள்களாகிய அவ்விரண்டனையும் அமைத்ததன் பயன் யாது? மதத்தையுடைய யானை இருக்க, எருதினை ஊர்வது என்? திருமேனியில் நீங்காது பொருந்தியுள்ள மலைமகளாகிய ஒருத்தியோடு கங்கை என்பவளையும் சடையில் வைத்தது என்? உன்னைப் பாடுகின்ற புலவர்க்கு நீ அளிக்கும் பரிசில் யாது?
37 இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே
இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே
பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே
பரமாபர மேட்டி பணித்தருளாய்
உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங்
கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டரவக்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
7.004.6
யாவர்க்கும் மேலானவனே, எல்லார்க்கும் மேலிடத்தில் உள்ளவனே, வலிமையோடு, 'சங்கு, இப்பி, முத்து' என்பவற்றைக் கொணர்ந்து வீசி, வலம்புரிச்சங்கை மேலே கொண்டு முழங்கி, ஆர்ப்பரவத்தையுடையதாகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும்தந்தையே, நீ இராப் பொழுதில் புறங்காட்டில் எரியில் நின்று ஆடியது என்? இறந்தவரது தலையில் பிச்சையேற்றல் என்? உன்னை ஏத்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? சொல்லியருளாய்.
38 ஆக்கும்மழி வும்மைய நீயென்பன்நான்
சொல்லுவார்சொற் பொருளவை நீயென்பன்நான்
நாக்கும்செவி யும்கண்ணும் நீயென்பன்நான்
நலனேஇனி நான்உனை நன்குணர்ந்தேன்
நோக்குந்நெதி யம்பல எத்தனையும்
கலத்திற்புகப் பெய்துகொண் டேறநுந்தி
ஆர்க்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
7.004.7
எப்பொருட்கும் தலைவனே, இன்பம் தருபவனே, விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி, நடுவண் செல்லச் செலுத்தி ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, அடியேன் இதுபோழ்து உன்னை நன்குணர்ந்தேன்' ஆதலின், 'எப்பொருளின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் காரணன் நீயே' என்றும், 'அவற்றிற்குக் காரணங்களாகப் பிற பிற வற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் நீயே' என்றும், 'புலனுணர்வுக்குக் காரணமான, 'நாக்கு, செவி, கண்' என்பனவும் நீயே' என்றும் துணிந்து சொல்லுவேன்.
39 வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்
விளங்குங்குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத்
தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக்
கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங்
கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன்
றறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
7.004.8
ஒளிவிடுகின்ற குழையையணிந்த காதினையுடைய அந்தணனே, கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழுவன போலும்படி நெரித்தாய்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு, கண்டம் கறுப்பாயினாய்; பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை விரைவில் அறுத்தலும் செய்தாய்; அடியேன் எனது மனை வாழ்க்கையை மனத்தாலும் வெறுத்தேன்; உடம்பாலும் துறந்து விட்டேன்.
40 பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான்
பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்
வடிக்கின்றன போற்சில வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டடிக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
7.004.9
மூன்று அரண்கள், ஒருமுறை கைந்நொடிக்கும் அளவிலே எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனே, முத்துக்கள் முதலியவற்றை வடித்தெடுத்துச் சேர்ப்பனபோல, சில வலிய அலைகள் அவைகளை ஈர்த்து வந்து வீசி, வலம்புரிச்சங்கினால், கரையிலுள்ளாரைத் தாக்குகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள அழகிய சோலைகளையுடைய, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ பெண் யானைக்கு ஆண்யானை போல உயிர்கட்கு யாண்டும் உடன்செல்லும் துணைவனாய் உள்ளாய்; என் போலும் மக்கட்கும், பிரமன் திருமால் முதலிய தேவர்கட்கும் தலைவனாய் உள்ளாய்; இவற்றையெல்லாம் உணர்ந்து, அடியேன் உன்னை மறத்தல் ஒழிந்தேன்.
41 எந்தம்மடி களிமை யோர்பெருமான்
எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன்
அந்தண்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனை
மந்தம்முழ வுங்குழ லும்மியம்பும்
வளர்நாவலர் கோன்நம்பி ஊரன்சொன்ன
சந்தம்மிகு தண்தமிழ் மாலைகள்கொண்
டடிவீழவல் லார்தடு மாற்றிலரே.
7.004.10
என்போலும் அடியவர்கட்கு முதல்வனும், தேவர்கட்குத் தலைவனும், எனக்கு எஞ்ஞான்றும் அருள்பண்ணும் சிவனும் ஆகிய, அழகிய குளிர்ந்த கரையின் கண்ணதாகிய, 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையை, மத்தளமும் வேய்ங்குழலும், 'மந்தம்' என்னும் அளவாக இயம்பப்படுகின்ற, நன்மை வளர்கின்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் போற்றிய இசை நலம் மிக்க, தமிழ்ச்சொற்கள் என்னும் மலர்களால் இயன்ற இம்மாலைகளை வாயிலாகக்கொண்டு அப்பெருமானது திருவடிகளில் பணிய வல்லவர் நிலையாமை நீங்கப் பெற்று, நிலைபேறுடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
7.004.திருஅஞ்சைக்களம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் மலைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அஞ்சைக்களத்தீசுவரர். தேவியார் - உமையம்மை.
32 தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 7.004.1
மலைக்கு நிகராகிய தன்மையால் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரத்தின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ தலைக்கு அணிகலமாகத் தலைமாலையை அணிந்தது என்? சடையின்மேல், 'கங்கை' என்னும் ஆற்றைத் தாங்கியது என்? கொல்லும் தன்மை யுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என்? அவ்வுடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என்?
33 பிடித்தாட்டிஓர் நாகத்தைப் பூண்டதென்னே பிறங்குஞ்சடை மேற்பிறை சூடிற்றென்னே பொடித்தான்கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே புகர்ஏறுகந் தேறல் புரிந்ததென்னே மடித்தோட்டந்து வன்றிரை யெற்றியிட வளர்சங்கம்அங் காந்துமுத் தஞ்சொரிய அடித்தார்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 7.004.2
வலிய அலைகள் தம் வடிவத்தைச் சுருளாகச் செய்து ஓடிவந்து மோதுதலினால், கரு வளர்கின்ற சங்குகள் வாய் திறந்து முத்துக்களை ஈன, இங்ஙனம் அலைத்து முழங்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, விரும்பத் தகாத பாம்பை, பிடித்து ஆட்டுதலையும், பூணாகப் பூணுதலையும் மேற்கொண்டது என்? விளங்குகின்ற சடையின்கண் பிறையைச் சூடியது என்? சாம்பலை எடுத்து உடம்பு முழுதும் பூசிக் கொண்டது என்? இழிந்த எருதினையே ஊர்தியாகக் கொள்ள விரும்பியது என்?
34 சிந்தித்தெழு வார்க்குநெல் லிக்கனியே சிறியார்பெரி யார்மனத் தேறலுற்றால் முந்தித்தொழு வார்இற வார்பிறவார் முனிகள்முனி யேஅம ரர்க்கமரா சந்தித்தட மால்வரை போற்றிரைகள் தணியாதிட றுங்கட லங்கரைமேல் அந்தித்தலைச் செக்கர்வா னேஒத்தியால் அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 7.004.3
மூங்கில்களையுடைய பெரிய மலைகள் போலும் அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக் களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, உன்னை நினைந்து துயிலுணர்வார்க்கு நெல்லிக்கனி போன்றவனே, முனிவர்கட்கெல்லாம் முனிவனே, தேவர்கட்கெல்லாம் தேவனே, உன்னை உள்ளந்தௌயப்பெற்றால், சிறியாரும் பெரியாராவர். விரைந்து வந்து உன்னை வணங்குபவர், இறத்தலும் பிறத்தலும் இலராவர். அவரது உள்ளத்தைப் பிணித்தற்கு, நீ, மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானம் போலும் அழகிய திருமேனியை உடையையாய் இருக்கின்றனை.
35 இழைக்கும்மெழுத் துக்குயி ரேஒத்தியால் இலையேஒத்தி யால்உளை யேஒத்தியால் குழைக்கும்பயிர்க் கோர்புய லேஒத்தியால் அடியார்தமக் கோர்குடி யேஒத்தியால் மழைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டழைக்குங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 7.004.4
துளிகளைத் தூற்றுதலால் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள், பல பொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி, வலம்புரிச் சங்கின் இனிய ஓசையால் யாவரையும் தன்பால் வருவிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, 'மகோதை' என்னும் தலத்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, உலகத்தை இயக்குதலில், எழுதப்படும் எழுத்துக்களுக்கு உயிரெழுத்துப் போல்கின்றாய்; இல்லாதாய் போல்கின்றாய்; ஆயினும் உள்ளாய் போல்கின்றாய்; உயிர்கட்கு உதவுதலில் தளிர்க்கும் பயிர்க்கு மேகம் போல்கின்றாய்; அடியார்களுக்கு அணியையாதலில், அவரோடு ஒருகுடிப் பிறப்பினை போல்கின்றாய்.
36 வீடின்பய னென்பிறப் பின்பயனென் விடையேறுவ தென்மத யானை நிற்கக் கூடும்மலை மங்கை யொருத்தியுடன் சடைமேற்கங்கை யாளைநீ சூடிற்றென்னே பாடும்புல வர்க்கரு ளும்பொருளென் நெதியம்பல செய்த கலச்செலவின் ஆடுங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 7.004.5
பொன், மணி முதலிய செல்வங்களைத் தந்த மரக்கலங்களினது செலவினையுடைய, மூழ்குதற்குரிய கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய, 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, நீ, 'வீடு, பிறப்பு' என்னும் இரண்டனுள் ஒன்றையே அமையாது, மறுதலைப் பொருள்களாகிய அவ்விரண்டனையும் அமைத்ததன் பயன் யாது? மதத்தையுடைய யானை இருக்க, எருதினை ஊர்வது என்? திருமேனியில் நீங்காது பொருந்தியுள்ள மலைமகளாகிய ஒருத்தியோடு கங்கை என்பவளையும் சடையில் வைத்தது என்? உன்னைப் பாடுகின்ற புலவர்க்கு நீ அளிக்கும் பரிசில் யாது?
37 இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே பரமாபர மேட்டி பணித்தருளாய் உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங் கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டரவக்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 7.004.6
யாவர்க்கும் மேலானவனே, எல்லார்க்கும் மேலிடத்தில் உள்ளவனே, வலிமையோடு, 'சங்கு, இப்பி, முத்து' என்பவற்றைக் கொணர்ந்து வீசி, வலம்புரிச்சங்கை மேலே கொண்டு முழங்கி, ஆர்ப்பரவத்தையுடையதாகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும்தந்தையே, நீ இராப் பொழுதில் புறங்காட்டில் எரியில் நின்று ஆடியது என்? இறந்தவரது தலையில் பிச்சையேற்றல் என்? உன்னை ஏத்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? சொல்லியருளாய்.
38 ஆக்கும்மழி வும்மைய நீயென்பன்நான் சொல்லுவார்சொற் பொருளவை நீயென்பன்நான் நாக்கும்செவி யும்கண்ணும் நீயென்பன்நான் நலனேஇனி நான்உனை நன்குணர்ந்தேன் நோக்குந்நெதி யம்பல எத்தனையும் கலத்திற்புகப் பெய்துகொண் டேறநுந்தி ஆர்க்குங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 7.004.7
எப்பொருட்கும் தலைவனே, இன்பம் தருபவனே, விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி, நடுவண் செல்லச் செலுத்தி ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, அடியேன் இதுபோழ்து உன்னை நன்குணர்ந்தேன்' ஆதலின், 'எப்பொருளின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் காரணன் நீயே' என்றும், 'அவற்றிற்குக் காரணங்களாகப் பிற பிற வற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் நீயே' என்றும், 'புலனுணர்வுக்குக் காரணமான, 'நாக்கு, செவி, கண்' என்பனவும் நீயே' என்றும் துணிந்து சொல்லுவேன்.
39 வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் விளங்குங்குழைக் காதுடை வேதியனே இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத் தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக் கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங் கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன் றறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 7.004.8
ஒளிவிடுகின்ற குழையையணிந்த காதினையுடைய அந்தணனே, கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழுவன போலும்படி நெரித்தாய்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு, கண்டம் கறுப்பாயினாய்; பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை விரைவில் அறுத்தலும் செய்தாய்; அடியேன் எனது மனை வாழ்க்கையை மனத்தாலும் வெறுத்தேன்; உடம்பாலும் துறந்து விட்டேன்.
40 பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான் பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான் நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச் சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன் வடிக்கின்றன போற்சில வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டடிக்குங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 7.004.9
மூன்று அரண்கள், ஒருமுறை கைந்நொடிக்கும் அளவிலே எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனே, முத்துக்கள் முதலியவற்றை வடித்தெடுத்துச் சேர்ப்பனபோல, சில வலிய அலைகள் அவைகளை ஈர்த்து வந்து வீசி, வலம்புரிச்சங்கினால், கரையிலுள்ளாரைத் தாக்குகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள அழகிய சோலைகளையுடைய, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ பெண் யானைக்கு ஆண்யானை போல உயிர்கட்கு யாண்டும் உடன்செல்லும் துணைவனாய் உள்ளாய்; என் போலும் மக்கட்கும், பிரமன் திருமால் முதலிய தேவர்கட்கும் தலைவனாய் உள்ளாய்; இவற்றையெல்லாம் உணர்ந்து, அடியேன் உன்னை மறத்தல் ஒழிந்தேன்.
41 எந்தம்மடி களிமை யோர்பெருமான் எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன் அந்தண்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனை மந்தம்முழ வுங்குழ லும்மியம்பும் வளர்நாவலர் கோன்நம்பி ஊரன்சொன்ன சந்தம்மிகு தண்தமிழ் மாலைகள்கொண் டடிவீழவல் லார்தடு மாற்றிலரே. 7.004.10
என்போலும் அடியவர்கட்கு முதல்வனும், தேவர்கட்குத் தலைவனும், எனக்கு எஞ்ஞான்றும் அருள்பண்ணும் சிவனும் ஆகிய, அழகிய குளிர்ந்த கரையின் கண்ணதாகிய, 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையை, மத்தளமும் வேய்ங்குழலும், 'மந்தம்' என்னும் அளவாக இயம்பப்படுகின்ற, நன்மை வளர்கின்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் போற்றிய இசை நலம் மிக்க, தமிழ்ச்சொற்கள் என்னும் மலர்களால் இயன்ற இம்மாலைகளை வாயிலாகக்கொண்டு அப்பெருமானது திருவடிகளில் பணிய வல்லவர் நிலையாமை நீங்கப் பெற்று, நிலைபேறுடையவராவர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 23 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|