LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-58

 

7.058.திருக்கழுமலம் 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரியீசுவரர். 
தேவியார் - திருநிலைநாயகியம்மை. 
593 சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்தஎம் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.058.1
இவ்வுடம்பின் கால எல்லையில் இதன் கண் நின்று சாதலும், பின்பு வேறோர் உடம்பிற் பிறத்தலும் என்னும் இரண்டனையும் விலக்கி, இவ்வொரு பிறப்பிலே என்னைப் படைத்து, அவ்வாற்றானே இதன்கண் வந்து தனது திருவருளை எனக்கு அளித்தருளியவனும், மலைமங்கையை நன்கு மதித்துத் தன் திருமேனியின் ஒருகூற்றில் வைத்த மாணிக்கம் போல்பவனும், வானினின்றும் வந்த வெள்ளத்தை சடையிடையில் வைத்தருளினவனும், அயலதாகிய என் நெஞ்சிற்கு, அயலாகாது, காய்ந்த இரும்பு கவர்ந்த நீர்போல, உள்ளே கலந்து நிற்பவனும், எட்டுவகைப் பொருளாய் நிற்கும் ஒருவனும், காதில் வெள்ளிய குழையை அணிந்தவனும் ஆகிய எங்கள் தலைவனை, அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, ஊழிக்காலத்தில் உலகத்தைக் கடல் கொள்ளவும் தான் கொள்ளப்படாது மிதந்து நின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வள நகரிடத்திற் கண்டு கொண்டேன்; அதனால் இனி ஒரு குறையும் இலனாயினேன். 
594 மற்றொரு துணைஇனி மறுமைக்குங் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவ ரறியா
முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை யடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.058.2
சூழ்ந்துள்ள சுற்றத்தாரையும் துணையென்று நினையாது, 'இவனே துணை' என்று தௌந்து, நாள்தோறும் என்னால் வணங்கப்படுகின்ற, ஒளியையுடைய விளக்குப் போல்பவனும், வீடாவதும், ஞானமாவதும், அவற்றை அடைவிப்பனவாய் அமைந்த, தேவராலும் அறியப்படாத அளவற்ற நெறிகளாவனவும் இவை என்பதனைப் படிமுறையானே அறிவித்து, மெய்ப்பொருளை எனக்கு உணர்த்தியருளிய கடவுளும் ஆகிய பெருமானை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வளநகரிற் கண்டு கொண்டேன்; அதனால், முன்பு அவனை மறந்து வருந்திய யான், இனி ஒருபோதும் அவனை மறவாதிருக்கும் திருவருளைப் பெற்றேன்; ஆகவே, இம்மைக்கேயன்றி மறுமைக்கும் இனி மற்றொரு துணையை நாடேன். 
595 திருத்தினை நகருறை சேந்தனப் பன்னென்
செய்வினை யறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை யல்லதிங் காரையு முணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.058.3
திருத்தினை நகரின்கண் எழுந்தருளியிருக்கின்ற, முருகக்கடவுட்குத் தந்தையும், என்னுடைய முன்னை வினைகளை யெல்லாம் விலக்குகின்ற, செம்பொன்போலும் சிறப்புடையவனும், அழகிய பொன்போலும் திருமேனியையுடைய ஒப்பற்றவனும் ஆகிய எங்கள் சிவபெருமானையல்லது வேறு யாரையும் யான் இவ்வுலகில் இறைவராக உணரேன்; யான் உய்யுங் காரணங் கூடினமையால் இத்தகைய உணர்வைப் பெற்றேன்; ஆயினும், விருத்தனும், பாலனும் ஆகிய அவனை, யான் கனவில் என் அருகே கண்டு, நனவில் எங்குங் காணமாட்டாது பிரிந்திருந்தேன்; இதுபோழ்து, யாவர்க்கும் தலைவனும், நடனம் புரிகின்ற திருவடிகளையுடையவனும் ஆகிய அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கடலை அடுத்துள்ள, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன்; அதனால், இனி அப்பிரிவு இலனாயினேன். 
596 மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை
வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்e
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.058.4
மழையினால் அரும்புகின்ற கொன்றையினது மலரைச் சூடினவனாகிய எங்கள் பெருமானை என்றும் மறவாது நினைக்கின்ற மனத்தைப் பெற்றேனாதலின், யான் அவனைப் புறம் போகவொட்டாது என்னிடத்தே பிணித்துக் கொள்ளுதலைப் பொருந்தினேன்; இனி ஒருபோதும் இந்நிலையினின்றும் தவறி உலகிற் போய்ப் பிறவாத பெருமையைப் பெற்றுவிட்டேன்; யான் பெற்ற இப்பேற்றினை வேறு யார் பெற வல்லார்! இவ்வாறாதலின், அவனை இனியொருகால் இவ்விடத்து யான் நேர்படக் காணாதேயும், இவ்வுடம்பு நீங்கியபின் அவனை அடையவும் வல்லேன்; என்றாலும், அவனைக் காணாது என் நெஞ்சம் அமையாமையின், காதிற் குழையையுடைய நீல கண்டனாகிய அவனை மீளக் காணுதல் வேண்டியே பாடி நிற்கின்றேன்; இந்நிலையில் அவனை, இதுபோழ்து, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கழைக் கரும்பும், வாழையும் பல சோலையுடன் நிறைந்துள்ள, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வள நகரிடத்துக் கண்டு கொண்டேன்; இனியொரு குறையும் இலனாயினேன். 
597 குண்டலங் குழைதிகழ் காதனே யென்றுங்
கொடுமழு வாட்படைக் குழகனே யென்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றைய னென்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை யோதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.058.5
யான், உறக்கத்தில், 'குண்டலமும், குழையும் விளங்குகின்ற காதினை உடையவனே' என்றும், 'கொடிய மழுவாகிய ஒளியையுடைய படையை உடையவனே' என்றும், 'வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரைச் சூடியவனே' என்றும் வாய்பிதற்றி, விழித்த பின், பழக்கமாய் நமக்கு உள்ள பலவாறான மனத்தை ஒழித்து ஒரு நெறிப்பட்ட மனத்தையுடையேனாய், அவனது தலங்களை வினாவி அறிந்து, 'அத்தலத்திற் கிடைப்பான்' என்று எண்ணிப் பல நாளும் சென்று முறைப்படியே வணங்கினேன்; அவ்வாற்றால் வருமிடத்து, தாழைகளையுடைய கழிக்கரையிடத்துக் கடல் அலைகள் வந்து உலவுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்தே அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே கண்டுகொண்டேன்; இனி, அக் குறையிலேனாயினேன். 
598 வரும்பெரு வல்வினை யென்றிருந் தெண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
ஐயனை அறவன்என் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.058.6
'அளவற்ற வலிய வினைகள் வந்து வருத்துமே; என் செய்வது' என்று எண்ணியிருந்து வருந்தினேன்; அங்ஙனம் வருந்தாதபடி எம்பெருமானை மறவாத மனம் வாய்க்கப்பெற்றேன்; அதனால், என் மனத்தால் அவனை விரும்பி, மெய்சிலிர்த்து, என்னை இகழா தொழியுமாறு அவனை இரந்து நின்று, முறைப்படியே வணங்கினேன்; அதனால், அரும்பும், பூவும், அமுதும், தேனும், கரும்பும் போல இன்பம் தருபவனும், யாவர்க்கும் தலைவனும், அறவடிவினனும், எனது பிறவியை வேரோடு அறுப்பவனும் ஆகிய அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, மிக்க செந்நெல் நிறைந்த வயல்களையுடைய, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டு கொண்டேன். 
599 அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை
மின்னின துருவினை என்னிடைப் பொருளைக்
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.058.7
மேகமும், செல்வமும் போல்பவனும், பொன்னொளியும் மின்னொளியும் போலும் திருமேனியையுடையவனும், என்னிடத்துக் கிடைத்த பொருள் போல்பவனும் ஆகிய எங்கள் பெருமானை யான் அடைய நினைந்து, அதன் பொருட்டுச் சேய்மையில் உள்ளார் அவனைத் துதிக்கவும், அண்மையில் உள்ளார் அவனை வணங்கவும், அவற்றுள் ஒன்றையும் செய்யாது, அவனைத் தங்கள் வன்மையால் அடைய முயல்பவர்கள் பின்னே சென்று, 'முயல் அகப்படும் வலையில் யானை அகப்படும்' என்று சொல்லிய அவர்களது சொல்லைக்கேட்டு, அவ்வழியையே முற்றிலும் கடைப்பிடித்து, அவனிடத்து அன்புடையாரது தோற்றத்தை மேற்கொண்டிருந்தேன்; ஆயினும், எனது முன்னைத் தவத்தால், அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கயல் மீன்களும், சேல்மீன்களும் வயலின்கண் விளையாடுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன்; அதனால் எண்ணம் கைகூடப்பெற்றேன். 
600 நினைதரு பாவங்கள் நாசங்க ளாக 
நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
மனைதரு மலைமகள் கணவனை வானோர்
மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
புனைதரு புகழினை எங்கள தொளியை
இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
கனைதரு கருங்கட லோதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.058.8
நினைத்து உணரப்படும் கருத்துப் பொருள்களாகிய பாவங்கள் அழிதல் உளவாகும்படி, யான், மனத்தால் நினைந்தும், கையால் தொழுதும் எழப்பட்ட, ஒளி பொருந்திய ஞாயிறு போல்பவனும், தனக்கு மனைவியைத் தர விரும்பிய மலைக்கு மகளாகிய உமைக்குக் கணவனும், தேவர்களது தலைமணியாகிய மாணிக்கம் போல்பவனும், வேதத்தின் பொருளாய் உள்ளவனும், அழகியவாகச் சொல்லப்படுகின்ற புகழை உடையவனும், எங்கள் விளக்குப் போல்பவனும், மாலும் அயனும், 'இன்னன்' என்று அறிதற்கு அரியவனும் ஆகிய இறைவனை, அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, ஒலிக்கின்ற கரிய கடலினது அலைகள் வந்து உலவுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன். 
601 மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப
வஞ்சனை செய்தவர் பொய்கையுள் மாயத்
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த
துன்மை யெனுந்தக வின்மையை யோரேன்
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
கறையணி மிடறுடை யடிகளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.058.9
வேள்வி முதலிய கருமங்களையே மெய்யென்று துணிந்தவர்கள் பற்றுவிடமாட்டாது மனைவாழ்க்கையிலே கட்டுண்டு கிடத்தலும், முற்றத் துறந்தவர்போலக் காட்டினோரது பொய்யாகிய தவங்கள் ஏனையோரது முயற்சிகளோடொப்பக் கடிதில் அழிந்து போதலும் கண்கூடாய் இருக்க, அவற்றை மேற்கொண்டவர்கள், தாம் சேற்றில் அழுந்தியிருத்தலை அறியாது, நல்ல நீர்த்துறையிலே நன்கு மூழ்கியிருப்பதாகக் கருதி, பிறரையும் தம் வழியிலே செல்லக் காட்டிய தீநெறியாகிய பொருந்தா நெறியை, யான் பொருட்படுத்தாது வந்து, பிறையை யுடைய சடையை உடையவனும், எங்கள் தலைவனும், கருணையை மிக உடையவனும், ஆகிய சிவபெருமானை அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வளநகரிடத்துக் கண்டுகொண்டேன். 
602 செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் 
விரவிய சடைமுடி யடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
அறிவரி தவன்றிரு வடியிணை யிரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமல ரெடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.
7.058.10
செழுமையான கொன்றையினது மலரும், வில்வ இலையாகிய மலரும் கலந்துள்ள சடைமுடியையுடைய தலைவனை நினைந்து, அன்பினால் அழுகின்ற மலர்போலும் கண்ணிணையுடைய அடியார்க்கல்லது அறிதற்கரிய இணையாகிய அவன் திருவடிகள் இரண்டினையும், 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டு, சடையனார்க்கு மகனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களாலும் தொழுகின்ற, மலரைத் தாங்கிய கைகளையுடைய அடியார்களை, துன்பமும், இடும்பையும் அணுகமாட்டா. 
திருச்சிற்றம்பலம்

 

7.058.திருக்கழுமலம் 

பண் - தக்கேசி 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - பிரமபுரியீசுவரர். 

தேவியார் - திருநிலைநாயகியம்மை. 

 

 

593 சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்

தன்னருள் தந்தஎம் தலைவனை மலையின்

மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை

வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை

ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை

எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்

காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

7.058.1

 

  இவ்வுடம்பின் கால எல்லையில் இதன் கண் நின்று சாதலும், பின்பு வேறோர் உடம்பிற் பிறத்தலும் என்னும் இரண்டனையும் விலக்கி, இவ்வொரு பிறப்பிலே என்னைப் படைத்து, அவ்வாற்றானே இதன்கண் வந்து தனது திருவருளை எனக்கு அளித்தருளியவனும், மலைமங்கையை நன்கு மதித்துத் தன் திருமேனியின் ஒருகூற்றில் வைத்த மாணிக்கம் போல்பவனும், வானினின்றும் வந்த வெள்ளத்தை சடையிடையில் வைத்தருளினவனும், அயலதாகிய என் நெஞ்சிற்கு, அயலாகாது, காய்ந்த இரும்பு கவர்ந்த நீர்போல, உள்ளே கலந்து நிற்பவனும், எட்டுவகைப் பொருளாய் நிற்கும் ஒருவனும், காதில் வெள்ளிய குழையை அணிந்தவனும் ஆகிய எங்கள் தலைவனை, அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, ஊழிக்காலத்தில் உலகத்தைக் கடல் கொள்ளவும் தான் கொள்ளப்படாது மிதந்து நின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வள நகரிடத்திற் கண்டு கொண்டேன்; அதனால் இனி ஒரு குறையும் இலனாயினேன். 

 

 

594 மற்றொரு துணைஇனி மறுமைக்குங் காணேன்

வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்

சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்

துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை

முத்தியும் ஞானமும் வானவ ரறியா

முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்

கற்பனை கற்பித்த கடவுளை யடியேன்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

7.058.2

 

  சூழ்ந்துள்ள சுற்றத்தாரையும் துணையென்று நினையாது, 'இவனே துணை' என்று தௌந்து, நாள்தோறும் என்னால் வணங்கப்படுகின்ற, ஒளியையுடைய விளக்குப் போல்பவனும், வீடாவதும், ஞானமாவதும், அவற்றை அடைவிப்பனவாய் அமைந்த, தேவராலும் அறியப்படாத அளவற்ற நெறிகளாவனவும் இவை என்பதனைப் படிமுறையானே அறிவித்து, மெய்ப்பொருளை எனக்கு உணர்த்தியருளிய கடவுளும் ஆகிய பெருமானை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வளநகரிற் கண்டு கொண்டேன்; அதனால், முன்பு அவனை மறந்து வருந்திய யான், இனி ஒருபோதும் அவனை மறவாதிருக்கும் திருவருளைப் பெற்றேன்; ஆகவே, இம்மைக்கேயன்றி மறுமைக்கும் இனி மற்றொரு துணையை நாடேன். 

 

 

595 திருத்தினை நகருறை சேந்தனப் பன்னென்

செய்வினை யறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்

ஒருத்தனை யல்லதிங் காரையு முணரேன்

உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்

விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி

விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்

கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

7.058.3

 

  திருத்தினை நகரின்கண் எழுந்தருளியிருக்கின்ற, முருகக்கடவுட்குத் தந்தையும், என்னுடைய முன்னை வினைகளை யெல்லாம் விலக்குகின்ற, செம்பொன்போலும் சிறப்புடையவனும், அழகிய பொன்போலும் திருமேனியையுடைய ஒப்பற்றவனும் ஆகிய எங்கள் சிவபெருமானையல்லது வேறு யாரையும் யான் இவ்வுலகில் இறைவராக உணரேன்; யான் உய்யுங் காரணங் கூடினமையால் இத்தகைய உணர்வைப் பெற்றேன்; ஆயினும், விருத்தனும், பாலனும் ஆகிய அவனை, யான் கனவில் என் அருகே கண்டு, நனவில் எங்குங் காணமாட்டாது பிரிந்திருந்தேன்; இதுபோழ்து, யாவர்க்கும் தலைவனும், நடனம் புரிகின்ற திருவடிகளையுடையவனும் ஆகிய அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கடலை அடுத்துள்ள, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன்; அதனால், இனி அப்பிரிவு இலனாயினேன். 

 

 

596 மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை

வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்

பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்

பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்

குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே

பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்

கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்e

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

7.058.4

 

  மழையினால் அரும்புகின்ற கொன்றையினது மலரைச் சூடினவனாகிய எங்கள் பெருமானை என்றும் மறவாது நினைக்கின்ற மனத்தைப் பெற்றேனாதலின், யான் அவனைப் புறம் போகவொட்டாது என்னிடத்தே பிணித்துக் கொள்ளுதலைப் பொருந்தினேன்; இனி ஒருபோதும் இந்நிலையினின்றும் தவறி உலகிற் போய்ப் பிறவாத பெருமையைப் பெற்றுவிட்டேன்; யான் பெற்ற இப்பேற்றினை வேறு யார் பெற வல்லார்! இவ்வாறாதலின், அவனை இனியொருகால் இவ்விடத்து யான் நேர்படக் காணாதேயும், இவ்வுடம்பு நீங்கியபின் அவனை அடையவும் வல்லேன்; என்றாலும், அவனைக் காணாது என் நெஞ்சம் அமையாமையின், காதிற் குழையையுடைய நீல கண்டனாகிய அவனை மீளக் காணுதல் வேண்டியே பாடி நிற்கின்றேன்; இந்நிலையில் அவனை, இதுபோழ்து, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கழைக் கரும்பும், வாழையும் பல சோலையுடன் நிறைந்துள்ள, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வள நகரிடத்துக் கண்டு கொண்டேன்; இனியொரு குறையும் இலனாயினேன். 

 

 

597 குண்டலங் குழைதிகழ் காதனே யென்றுங்

கொடுமழு வாட்படைக் குழகனே யென்றும்

வண்டலம் பும்மலர்க் கொன்றைய னென்றும்

வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே

பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்

பசுபதி பதிவின விப்பல நாளுங்

கண்டலங் கழிக்கரை யோதம்வந் துலவுங்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

7.058.5

 

  யான், உறக்கத்தில், 'குண்டலமும், குழையும் விளங்குகின்ற காதினை உடையவனே' என்றும், 'கொடிய மழுவாகிய ஒளியையுடைய படையை உடையவனே' என்றும், 'வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரைச் சூடியவனே' என்றும் வாய்பிதற்றி, விழித்த பின், பழக்கமாய் நமக்கு உள்ள பலவாறான மனத்தை ஒழித்து ஒரு நெறிப்பட்ட மனத்தையுடையேனாய், அவனது தலங்களை வினாவி அறிந்து, 'அத்தலத்திற் கிடைப்பான்' என்று எண்ணிப் பல நாளும் சென்று முறைப்படியே வணங்கினேன்; அவ்வாற்றால் வருமிடத்து, தாழைகளையுடைய கழிக்கரையிடத்துக் கடல் அலைகள் வந்து உலவுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்தே அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே கண்டுகொண்டேன்; இனி, அக் குறையிலேனாயினேன். 

 

 

598 வரும்பெரு வல்வினை யென்றிருந் தெண்ணி

வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்

விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி

வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே

அரும்பினை அலரினை அமுதினைத் தேனை

ஐயனை அறவன்என் பிறவிவேர் அறுக்குங்

கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

7.058.6

 

  'அளவற்ற வலிய வினைகள் வந்து வருத்துமே; என் செய்வது' என்று எண்ணியிருந்து வருந்தினேன்; அங்ஙனம் வருந்தாதபடி எம்பெருமானை மறவாத மனம் வாய்க்கப்பெற்றேன்; அதனால், என் மனத்தால் அவனை விரும்பி, மெய்சிலிர்த்து, என்னை இகழா தொழியுமாறு அவனை இரந்து நின்று, முறைப்படியே வணங்கினேன்; அதனால், அரும்பும், பூவும், அமுதும், தேனும், கரும்பும் போல இன்பம் தருபவனும், யாவர்க்கும் தலைவனும், அறவடிவினனும், எனது பிறவியை வேரோடு அறுப்பவனும் ஆகிய அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, மிக்க செந்நெல் நிறைந்த வயல்களையுடைய, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டு கொண்டேன். 

 

 

599 அயலவர் பரவவும் அடியவர் தொழவும்

அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்

முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை

படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்

புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை

மின்னின துருவினை என்னிடைப் பொருளைக்

கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

7.058.7

 

  மேகமும், செல்வமும் போல்பவனும், பொன்னொளியும் மின்னொளியும் போலும் திருமேனியையுடையவனும், என்னிடத்துக் கிடைத்த பொருள் போல்பவனும் ஆகிய எங்கள் பெருமானை யான் அடைய நினைந்து, அதன் பொருட்டுச் சேய்மையில் உள்ளார் அவனைத் துதிக்கவும், அண்மையில் உள்ளார் அவனை வணங்கவும், அவற்றுள் ஒன்றையும் செய்யாது, அவனைத் தங்கள் வன்மையால் அடைய முயல்பவர்கள் பின்னே சென்று, 'முயல் அகப்படும் வலையில் யானை அகப்படும்' என்று சொல்லிய அவர்களது சொல்லைக்கேட்டு, அவ்வழியையே முற்றிலும் கடைப்பிடித்து, அவனிடத்து அன்புடையாரது தோற்றத்தை மேற்கொண்டிருந்தேன்; ஆயினும், எனது முன்னைத் தவத்தால், அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கயல் மீன்களும், சேல்மீன்களும் வயலின்கண் விளையாடுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன்; அதனால் எண்ணம் கைகூடப்பெற்றேன். 

 

 

600 நினைதரு பாவங்கள் நாசங்க ளாக 

நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை

மனைதரு மலைமகள் கணவனை வானோர்

மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்

புனைதரு புகழினை எங்கள தொளியை

இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்

கனைதரு கருங்கட லோதம்வந் துலவுங்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

7.058.8

 

  நினைத்து உணரப்படும் கருத்துப் பொருள்களாகிய பாவங்கள் அழிதல் உளவாகும்படி, யான், மனத்தால் நினைந்தும், கையால் தொழுதும் எழப்பட்ட, ஒளி பொருந்திய ஞாயிறு போல்பவனும், தனக்கு மனைவியைத் தர விரும்பிய மலைக்கு மகளாகிய உமைக்குக் கணவனும், தேவர்களது தலைமணியாகிய மாணிக்கம் போல்பவனும், வேதத்தின் பொருளாய் உள்ளவனும், அழகியவாகச் சொல்லப்படுகின்ற புகழை உடையவனும், எங்கள் விளக்குப் போல்பவனும், மாலும் அயனும், 'இன்னன்' என்று அறிதற்கு அரியவனும் ஆகிய இறைவனை, அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, ஒலிக்கின்ற கரிய கடலினது அலைகள் வந்து உலவுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன். 

 

 

601 மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப

வஞ்சனை செய்தவர் பொய்கையுள் மாயத்

துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த

துன்மை யெனுந்தக வின்மையை யோரேன்

பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்

பேரரு ளாளனைக் காரிருள் போன்ற

கறையணி மிடறுடை யடிகளை அடியேன்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

7.058.9

 

  வேள்வி முதலிய கருமங்களையே மெய்யென்று துணிந்தவர்கள் பற்றுவிடமாட்டாது மனைவாழ்க்கையிலே கட்டுண்டு கிடத்தலும், முற்றத் துறந்தவர்போலக் காட்டினோரது பொய்யாகிய தவங்கள் ஏனையோரது முயற்சிகளோடொப்பக் கடிதில் அழிந்து போதலும் கண்கூடாய் இருக்க, அவற்றை மேற்கொண்டவர்கள், தாம் சேற்றில் அழுந்தியிருத்தலை அறியாது, நல்ல நீர்த்துறையிலே நன்கு மூழ்கியிருப்பதாகக் கருதி, பிறரையும் தம் வழியிலே செல்லக் காட்டிய தீநெறியாகிய பொருந்தா நெறியை, யான் பொருட்படுத்தாது வந்து, பிறையை யுடைய சடையை உடையவனும், எங்கள் தலைவனும், கருணையை மிக உடையவனும், ஆகிய சிவபெருமானை அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வளநகரிடத்துக் கண்டுகொண்டேன். 

 

 

602 செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் 

விரவிய சடைமுடி யடிகளை நினைந்திட்

டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்

அறிவரி தவன்றிரு வடியிணை யிரண்டுங்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்

சடையன்றன் காதலன் பாடிய பத்துந்

தொழுமல ரெடுத்தகை அடியவர் தம்மைத்

துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.

7.058.10

 

  செழுமையான கொன்றையினது மலரும், வில்வ இலையாகிய மலரும் கலந்துள்ள சடைமுடியையுடைய தலைவனை நினைந்து, அன்பினால் அழுகின்ற மலர்போலும் கண்ணிணையுடைய அடியார்க்கல்லது அறிதற்கரிய இணையாகிய அவன் திருவடிகள் இரண்டினையும், 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டு, சடையனார்க்கு மகனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களாலும் தொழுகின்ற, மலரைத் தாங்கிய கைகளையுடைய அடியார்களை, துன்பமும், இடும்பையும் அணுகமாட்டா. 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.