LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-76

 

7.076.திருவாஞ்சியம் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர். 
தேவியார் - வாழவந்தநாயகி. 
771 பொருவ னார்புரி நூலர்
புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்
வருவதும் இல்லைநம் மடிகள்
திருவ னார்பணிந் தேத்துந்
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவனார் அடி யாரை
ஊழ்வினை நலியஒட் டாரே.
7.076.1
நம் இறைவர், தீயவரோடு மாறுபடுபவர்; முப்புரி நூலை அணிபவர்; நெருங்கிய தனங்களையுடைய உமையோடு கூடியிருத்தலை உடையவர்; தம்மை அடையாதவரிடத்தில் வருவதும் இல்லை; திருமகளை உடைய திருமால் வணங்கித் துதிக்கின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவராகிய அவர், தம் அடியவரை ஊழ்வினை வந்து நலிய ஒட்டாது ஒரு தலையாகக் காப்பர். 
772 தொறுவில் ஆன்இள ஏறு
துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்
செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள்
காண்தகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு
பூசுதல் மன்னும்ஒன் றுடைத்தே.
7.076.2
பசுக் கூட்டத்துள், இளைய ஆனேறு, கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி, வயல்களில் உள்ள வாளைமீன்கள் ஓடவும், செவ்வரிகளையுடைய கயல்மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும், பகையில்லாத மனத்தை உடைய சான்றோர் அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், குற்றமற்ற வெள்ளிய நீற்றைப் பூசுதல், சிறந்ததொரு கருத்தை உடையது. 
773 தூர்த்தர் மூவெயில் எய்து
சுடுநுனைப் பகழிய தொன்றால
பார்த்த னார்திரள் தோள்மேற்
பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத்
திகழ்திரு வாஞ்சியத் தடிகள
சாத்து மாமணிக் கச்சங்
கொருதலை பலதலை யுடைத்தே.
7.076.3
தீர்த்தமாகிய, சிறந்த, பூக்களையுடைய பொய்கைகளையுடைய, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், நெறி பிறழ்ந்தவரது மூன்று மதில்களை, சுடுகின்ற முனையையுடைய ஓர் அம்பினால் அழித்து, ஒருவனாகிய அருச்சுனனது திரண்ட தோள்மீது பல கூரிய அம்புகளை அழுத்தி, தாம் கட்டுகின்ற பெரிய மாணிக்கத்தை உடைய கச்சு, ஒரு பக்கத்திலே பல தலைகளையுடையதாய் இருக்கின்றது; இது வியப்பு! 
774 சள்ளை வெள்ளையங் குருகு
தானது வாமெனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி
மறுகிஓர் வாளையின் வாயில்
துள்ளு தௌளுநீர்ப் பொய்கைத்
துறைமல்கு வாஞ்சியத் தடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும்
விகிர்தம்ஒன் றொழிகிலர் தாமே.
7.076.4
'சள்ளை' என்னும் மீன், வள்ளைக் கொடியின் வெண்மையான மலரை, வெண்மையான குருகு என்று கருதி அஞ்சிச் சுழன்று, பின், வாளைமீனின் வாயிலே சென்று துள்ளுகின்ற, தௌவாகிய நீரையுடைய பொய்கைத் துறைகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், வெள்ளிய, நுண்ணிய சாம்பலைப் பூசுகின்ற வேறுபாடொன்றனை எஞ்ஞான்றும் ஒழியாதே உடையர். 
775 மைகொள் கண்டர்எண் தோளர்
மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி
கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு
பாம்புடன் வைப்பது பரிசே.
7.076.5
கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மலைமகளோடு உடன்உறைகின்ற வாழ்க்கையையும், பறிக்கப்பட்ட கூவிளை இலையால் ஆகிய மாலை விளங்குகின்ற சடைமுடியையும் உடைய அழகராகிய, நெய்தற் பூக்களையுடைய அழகிய கழனிகளில், தாழம்பூக்கள் மணம் வீசுகின்ற, புகழையுடைய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர்க்கு, இளைய வெண்பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிவதுதான் இயல்பு. 
776 கரந்தை கூவிள மாலை
கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
திகழ்தரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
வல்வினை நலியஒட் டாரே.
7.076.6
தம் இயல்பு காரணமாக, கரந்தைப் பூவினாலும், கூவிள இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிக்க பூதகணங்கள் புடைசூழ வருபவரும், நம் இறைவரும் ஆகிய, திருத்தமான மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் அமுதம் போல்பவர், தம் அடியாரை, வலிய வினைகள் வந்து துன்புறுத்த ஒட்டாது காப்பவரேயாவர். 
777 அருவி பாய்தரு கழனி
அலர்தரு குவளையங் கண்ணார்
குருவி யாய்கிளி சேர்ப்பக்
குருகினம் இரிதரு கிடங்கில்
பருவ ரால்குதி கொள்ளும்
பைம்பொழில் வாஞ்சியத் துறையும்
இருவ ரால்அறி யொண்ணா
இறைவன தறைகழல் சரணே.
7.076.7
மலர்ந்த குவளைப் பூப்போலும் கண்களையுடைய மகளிர், நீர்த் திரள் பாய்கின்ற கழனிகளில் கதிர்களை ஆராய்கின்ற குருவிகளையும், கிளிகளையும் அங்கு நின்றும் நீங்கிச் சென்று சேரப் பண்ணுகையால், குருகுகளின் கூட்டம் அஞ்சி நீங்குகின்ற கால்வாய்களில் பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற, பசிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், 'மால், அயன்' என்பார்க்கு அறிய ஒண்ணாத இறைவரது, ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளே நமக்குப் புகலிடம். 
778 களங்க ளார்தரு கழனி
அளிதரக் களிதரு வண்டு
உளங்க ளார்கலிப் பாடல்
உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளால்நிழற் கீழ்நற்
குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
விளங்கு தாமரைப் பாதம்
நினைப்பவர் வினைநலி விலரே.
7.076.8
ஏர்க்களம் நிறைதற்கு ஏதுவாகிய வயல்கள் அன்பைத் தர, அதனால் மகிழ்வுற்ற வண்டுகள், கேட்போர் உள்ளம் இன்பம் நிறைதற்குரிய ஆரவாரமான இசை, மேற்சென்று ஒலிக்கின்ற கேள்வியை, குளக்கரைகளில் உள்ள ஆலமரத்தின் கீழ்க்கிளையில் இருந்து நல்ல குயில்கள் பழகுகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவரது, ஒளி வீசுகின்ற, தாமரை மலர்போலும் திருவடிகளை நினைப்பவர் வினையால் துன்புறுத்தப்படுதல் இலராவர். 
779 வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரந் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை யல்லால்
இறையெனக் கருதுதல் இலமே.
7.076.9
வாழைப் பழங்களையும், சாறு மிக்கொழுகுகின்ற பலாப் பழத்தின் சுளைகளையும், 'எனக்கு வைத்த இப் பங்கு சிறிது' என்று இகழ்ந்து, அறிவு குறைந்த குரங்குகள் தமக்குள் கலாய்த்து, தாழை மட்டையும், வாழை மட்டையுமாகிய கோல்களால் போர் செய்து செருக்குக் கொள்கின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் மங்கை பங்காளனை யல்லது வேறொருவரை, யாம், 'கடவுள்' என்று நினைத்தல் இலம். 
780 செந்நெ லங்கலங் கழனித்
திகழ்திரு வாஞ்சியத் துறையு
மின்ன லங்கலஞ் சடையெம்
மிறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கல்நன் மாடப்
பொழிலணி நாவல்ஆ ரூரன்
பன்ன லங்கனன் மாலை
பாடுமின் பத்தரு ளீரே.
7.076.10
செந்நெற்களையுடைய அழகிய மரக்கலம் போலும் கழனிகளையுடைய புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், இனிய மாலைகளை யணிந்த சடையையுடைய எம் இறைவனது, ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைத் துதித்த, பொன்னரி மாலைகள் தூக்கப்பட்ட நல்ல மாடங்களையுடைய, சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரனது, பல அழகுகளையுடைய, கற்கத்தகுந்த நல்ல பாமாலையை, அடியராய் உள்ளவர்களே, பாடுமின்கள். 
திருச்சிற்றம்பலம்

 

7.076.திருவாஞ்சியம் 

பண் - பியந்தைக்காந்தாரம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர். 

தேவியார் - வாழவந்தநாயகி. 

 

 

771 பொருவ னார்புரி நூலர்

புணர்முலை உமையவ ளோடு

மருவ னார்மரு வார்பால்

வருவதும் இல்லைநம் மடிகள்

திருவ னார்பணிந் தேத்துந்

திகழ்திரு வாஞ்சியத் துறையும்

ஒருவனார் அடி யாரை

ஊழ்வினை நலியஒட் டாரே.

7.076.1

 

  நம் இறைவர், தீயவரோடு மாறுபடுபவர்; முப்புரி நூலை அணிபவர்; நெருங்கிய தனங்களையுடைய உமையோடு கூடியிருத்தலை உடையவர்; தம்மை அடையாதவரிடத்தில் வருவதும் இல்லை; திருமகளை உடைய திருமால் வணங்கித் துதிக்கின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவராகிய அவர், தம் அடியவரை ஊழ்வினை வந்து நலிய ஒட்டாது ஒரு தலையாகக் காப்பர். 

 

 

772 தொறுவில் ஆன்இள ஏறு

துண்ணென இடிகுரல் வெருவிச்

செறுவில் வாளைகள் ஓடச்

செங்கயல் பங்கயத் தொதுங்கக்

கறுவி லாமனத் தார்கள்

காண்தகு வாஞ்சியத் தடிகள்

மறுவி லாதவெண் ணீறு

பூசுதல் மன்னும்ஒன் றுடைத்தே.

7.076.2

 

  பசுக் கூட்டத்துள், இளைய ஆனேறு, கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி, வயல்களில் உள்ள வாளைமீன்கள் ஓடவும், செவ்வரிகளையுடைய கயல்மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும், பகையில்லாத மனத்தை உடைய சான்றோர் அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், குற்றமற்ற வெள்ளிய நீற்றைப் பூசுதல், சிறந்ததொரு கருத்தை உடையது. 

 

 

773 தூர்த்தர் மூவெயில் எய்து

சுடுநுனைப் பகழிய தொன்றால

பார்த்த னார்திரள் தோள்மேற்

பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்

தீர்த்த மாமலர்ப் பொய்கைத்

திகழ்திரு வாஞ்சியத் தடிகள

சாத்து மாமணிக் கச்சங்

கொருதலை பலதலை யுடைத்தே.

7.076.3

 

  தீர்த்தமாகிய, சிறந்த, பூக்களையுடைய பொய்கைகளையுடைய, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், நெறி பிறழ்ந்தவரது மூன்று மதில்களை, சுடுகின்ற முனையையுடைய ஓர் அம்பினால் அழித்து, ஒருவனாகிய அருச்சுனனது திரண்ட தோள்மீது பல கூரிய அம்புகளை அழுத்தி, தாம் கட்டுகின்ற பெரிய மாணிக்கத்தை உடைய கச்சு, ஒரு பக்கத்திலே பல தலைகளையுடையதாய் இருக்கின்றது; இது வியப்பு! 

 

 

774 சள்ளை வெள்ளையங் குருகு

தானது வாமெனக் கருதி

வள்ளை வெண்மலர் அஞ்சி

மறுகிஓர் வாளையின் வாயில்

துள்ளு தௌளுநீர்ப் பொய்கைத்

துறைமல்கு வாஞ்சியத் தடிகள்

வெள்ளை நுண்பொடிப் பூசும்

விகிர்தம்ஒன் றொழிகிலர் தாமே.

7.076.4

 

  'சள்ளை' என்னும் மீன், வள்ளைக் கொடியின் வெண்மையான மலரை, வெண்மையான குருகு என்று கருதி அஞ்சிச் சுழன்று, பின், வாளைமீனின் வாயிலே சென்று துள்ளுகின்ற, தௌவாகிய நீரையுடைய பொய்கைத் துறைகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், வெள்ளிய, நுண்ணிய சாம்பலைப் பூசுகின்ற வேறுபாடொன்றனை எஞ்ஞான்றும் ஒழியாதே உடையர். 

 

 

775 மைகொள் கண்டர்எண் தோளர்

மலைமக ளுடனுறை வாழ்க்கைக்

கொய்த கூவிள மாலை

குலவிய சடைமுடிக் குழகர்

கைதை நெய்தலங் கழனி

கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்

பைதல் வெண்பிறை யோடு

பாம்புடன் வைப்பது பரிசே.

7.076.5

 

  கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மலைமகளோடு உடன்உறைகின்ற வாழ்க்கையையும், பறிக்கப்பட்ட கூவிளை இலையால் ஆகிய மாலை விளங்குகின்ற சடைமுடியையும் உடைய அழகராகிய, நெய்தற் பூக்களையுடைய அழகிய கழனிகளில், தாழம்பூக்கள் மணம் வீசுகின்ற, புகழையுடைய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர்க்கு, இளைய வெண்பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிவதுதான் இயல்பு. 

 

 

776 கரந்தை கூவிள மாலை

கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்

பரந்த பாரிடஞ் சூழ

வருவர்நம் பரமர்தம் பரிசால்

திருந்து மாடங்கள் நீடு

திகழ்தரு வாஞ்சியத் துறையும்

மருந்த னார்அடி யாரை

வல்வினை நலியஒட் டாரே.

7.076.6

 

  தம் இயல்பு காரணமாக, கரந்தைப் பூவினாலும், கூவிள இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிக்க பூதகணங்கள் புடைசூழ வருபவரும், நம் இறைவரும் ஆகிய, திருத்தமான மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் அமுதம் போல்பவர், தம் அடியாரை, வலிய வினைகள் வந்து துன்புறுத்த ஒட்டாது காப்பவரேயாவர். 

 

 

777 அருவி பாய்தரு கழனி

அலர்தரு குவளையங் கண்ணார்

குருவி யாய்கிளி சேர்ப்பக்

குருகினம் இரிதரு கிடங்கில்

பருவ ரால்குதி கொள்ளும்

பைம்பொழில் வாஞ்சியத் துறையும்

இருவ ரால்அறி யொண்ணா

இறைவன தறைகழல் சரணே.

7.076.7

 

  மலர்ந்த குவளைப் பூப்போலும் கண்களையுடைய மகளிர், நீர்த் திரள் பாய்கின்ற கழனிகளில் கதிர்களை ஆராய்கின்ற குருவிகளையும், கிளிகளையும் அங்கு நின்றும் நீங்கிச் சென்று சேரப் பண்ணுகையால், குருகுகளின் கூட்டம் அஞ்சி நீங்குகின்ற கால்வாய்களில் பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற, பசிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், 'மால், அயன்' என்பார்க்கு அறிய ஒண்ணாத இறைவரது, ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளே நமக்குப் புகலிடம். 

 

 

778 களங்க ளார்தரு கழனி

அளிதரக் களிதரு வண்டு

உளங்க ளார்கலிப் பாடல்

உம்பரில் ஒலித்திடுங் காட்சி

குளங்க ளால்நிழற் கீழ்நற்

குயில்பயில் வாஞ்சியத் தடிகள்

விளங்கு தாமரைப் பாதம்

நினைப்பவர் வினைநலி விலரே.

7.076.8

 

  ஏர்க்களம் நிறைதற்கு ஏதுவாகிய வயல்கள் அன்பைத் தர, அதனால் மகிழ்வுற்ற வண்டுகள், கேட்போர் உள்ளம் இன்பம் நிறைதற்குரிய ஆரவாரமான இசை, மேற்சென்று ஒலிக்கின்ற கேள்வியை, குளக்கரைகளில் உள்ள ஆலமரத்தின் கீழ்க்கிளையில் இருந்து நல்ல குயில்கள் பழகுகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவரது, ஒளி வீசுகின்ற, தாமரை மலர்போலும் திருவடிகளை நினைப்பவர் வினையால் துன்புறுத்தப்படுதல் இலராவர். 

 

 

779 வாழை யின்கனி தானும்

மதுவிம்மு வருக்கையின் சுளையும்

கூழை வானரந் தம்மிற்

கூறிது சிறிதெனக் குழறித்

தாழை வாழையந் தண்டாற்

செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்

ஏழை பாகனை யல்லால்

இறையெனக் கருதுதல் இலமே.

7.076.9

 

  வாழைப் பழங்களையும், சாறு மிக்கொழுகுகின்ற பலாப் பழத்தின் சுளைகளையும், 'எனக்கு வைத்த இப் பங்கு சிறிது' என்று இகழ்ந்து, அறிவு குறைந்த குரங்குகள் தமக்குள் கலாய்த்து, தாழை மட்டையும், வாழை மட்டையுமாகிய கோல்களால் போர் செய்து செருக்குக் கொள்கின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் மங்கை பங்காளனை யல்லது வேறொருவரை, யாம், 'கடவுள்' என்று நினைத்தல் இலம். 

 

 

780 செந்நெ லங்கலங் கழனித்

திகழ்திரு வாஞ்சியத் துறையு

மின்ன லங்கலஞ் சடையெம்

மிறைவன தறைகழல் பரவும்

பொன்ன லங்கல்நன் மாடப்

பொழிலணி நாவல்ஆ ரூரன்

பன்ன லங்கனன் மாலை

பாடுமின் பத்தரு ளீரே.

7.076.10

 

  செந்நெற்களையுடைய அழகிய மரக்கலம் போலும் கழனிகளையுடைய புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், இனிய மாலைகளை யணிந்த சடையையுடைய எம் இறைவனது, ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைத் துதித்த, பொன்னரி மாலைகள் தூக்கப்பட்ட நல்ல மாடங்களையுடைய, சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரனது, பல அழகுகளையுடைய, கற்கத்தகுந்த நல்ல பாமாலையை, அடியராய் உள்ளவர்களே, பாடுமின்கள். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.