LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

-ஏழாம் திருமுறை-80

 

7.080.திருக்கேதீச்சரம் 
பண் - நட்டபாடை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் ஈழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கேதீசுவரர். 
தேவியார் - கௌரியம்மை. 
812 நத்தார்படை ஞானன்பசு
வேறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானையுரி
போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.1
விரும்புதல் பொருந்திய பூதப் படைகளையுடைய ஞான உருவினனும், இடபத்தை ஏறுகின்றவனும், நனைய ஒழுகுகின்ற இடங்களில் மயக்கத்தைத் தரும் மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்த மணவாளக் கோலத்தினனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளிய பெருமான், அன்பர்களாகிய அடியவர்கள் வணங்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், இறந்தவர்களது எலும்பை அணிபவனாகக் காணப்படுகின்றான். 
813 சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.2
சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும், நல்ல பிளவாகிய பிறையையும், கீளினையும், மதம் நிறைந்த மயக்கத்தையுடைய, யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான், பாலாவி யாற்றின் கரைமேல், பாம்பு போலும் இடையினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான். 
814 அங்கம்மொழி யன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேல்
செங்கண்ணர வசைத்தான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.3
பிளவு செய்த பிறையைச் சூடினவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வேதத்தின் அங்கங்களைச் சொல்லுகின்ற அத்தன்மையையுடைய அந்தணர்களும், தேவர்களும் வணங்கித் துதிக்க, மரக்கலம் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல், சினத்தாற் சிவந்த கண்ணையுடைய பாம்பைக் கட்டி யுள்ளவனாய்க் காணப்படுகின்றான். 
815 கரியகறைக் கண்டன்நல
கண்மேல்ஒரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருள்
பரியதிரை யெறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.4
கருமையாகிய, நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும், நல்ல இருகண்கள்மேலும் மற்றொரு கண்ணையுடையவனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், கீற்றுக்களையுடைய சிறகுகளையுடைய வண்டுகள் யாழின் இசையை உண்டாக்குகின்ற, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பருத்த அலைகளை வீசிக்கொண்டு வருகின்ற பாலாவியாற்றின் கரைமேல், ஆராயத்தக்க வேதங்களை வல்லவனாய்க் காணப்படுகின்றான். 
816 அங்கத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
கேதீச்சரத் தானே.
7.080.5
தன் அடியார்கள் மேலனவாய், அவர்களது உடம்பிற் பொருந்துகின்ற நோய்களை முற்றக் களைந்தருள்பவனாகிய சிவபெருமான், மரக்கலங்கள் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், தனது திருமேனியின் ஒரு கூற்றை அழகு செய்கின்ற மங்கை ஒருத்தியுடன், பாலாவி யாற்றின் கரைமேல், தென்னஞ் சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனாய்க் காணப்படுகின்றான். 
817 வெய்யவினை யாயவ்வடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.6
திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியவர்மேல் உள்ள கொடிய வினைகளாய் உள்ளனவற்றை முற்ற ஒழித்துநின்று, நிலவுலகத்தில் உள்ளார் உணர்ந்து மகிழ நிற்கின்ற, கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நகரத்தில், பாம்பு போலும் இடையினை உடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், சிவந்த சடைமுடியை உடையவனாய்க் காணப்படுகின்றான். 
818 ஊனத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரில்
பானத்துறு மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.7
திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியார்கள் மேலனவாய், உடம்பிற் பொருந்தும் நோய்களை முற்ற ஒழித்துநின்று, அலைகளால் வானத்தைப் பொருந்துகின்ற, நீர் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பாலும் விரும்பத்தக்க மொழியை யுடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், பன்றியின் கொம்பை அணிந்தவனாய்க் காணப்படுகின்றான். 
819 அட்டன்னழ காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.8
அட்ட மூர்த்தமாய் நிற்பவனாகிய. திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது அரையில் பாம்பினை அழகாகக் கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரிக்கின்ற சோலைகளையுடைய 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை யணிந்த அழகிய நெற்றியை உடைய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் காணப்படுகின்றான். 
820 மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்எனை ஆள்வான்திருக்
கேதீச்சரத் தானே.
7.080.9
மூன்று கண்களையுடைய மூர்த்தியாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், மாமரங்களின் கனிகள் தாழத் தூங்குகின்ற சோலைகளையுடைய, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில் பாவத்தையும், இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் பலகாலும் வந்து மூழ்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், மூவராகியும், இருவராகியும், முதற்கடவுளாகியும் நின்று, என்னை ஆள்பவனாய்க் காணப்படுகின்றான். 
821 கரையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டன்னுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே.
7.080.10
கறுப்பு நிறம் பொருந்திய கடல் சூழ்ந்த, கழியையுடைய, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தின்கண் உள்ள, சிறகுகள் பொருந்திய வண்டுகள் யாழிசைபோலும் இசையை உண்டாக்குகின்ற சோலைகளையுடைய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது அடிக்குத் தொண்டனாகி, வேதத்தைச் சொல்லுகின்ற, புகழையுடைய நம்பியாரூரன் பாடிய, குறைதல் இல்லாத இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட, கொடியனவாகிய வினைகள் வந்து பொருந்தமாட்டா. 
திருச்சிற்றம்பலம்

 

7.080.திருக்கேதீச்சரம் 

பண் - நட்டபாடை 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் ஈழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - கேதீசுவரர். 

தேவியார் - கௌரியம்மை. 

 

 

812 நத்தார்படை ஞானன்பசு

வேறிந்நனை கவுள்வாய்

மத்தம்மத யானையுரி

போர்த்தமண வாளன்

பத்தாகிய தொண்டர்தொழு

பாலாவியின் கரைமேல்

செத்தாரெலும் பணிவான்திருக்

கேதீச்சரத் தானே.

7.080.1

 

  விரும்புதல் பொருந்திய பூதப் படைகளையுடைய ஞான உருவினனும், இடபத்தை ஏறுகின்றவனும், நனைய ஒழுகுகின்ற இடங்களில் மயக்கத்தைத் தரும் மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்த மணவாளக் கோலத்தினனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளிய பெருமான், அன்பர்களாகிய அடியவர்கள் வணங்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், இறந்தவர்களது எலும்பை அணிபவனாகக் காணப்படுகின்றான். 

 

 

813 சுடுவார்பொடி நீறுந்நல

துண்டப்பிறை கீளும்

கடமார்களி யானையுரி

யணிந்தகறைக் கண்டன்

படவேரிடை மடவாளொடு

பாலாவியின் கரைமேல்

திடமாஉறை கின்றான்திருக்

கேதீச்சரத் தானே.

7.080.2

 

  சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும், நல்ல பிளவாகிய பிறையையும், கீளினையும், மதம் நிறைந்த மயக்கத்தையுடைய, யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான், பாலாவி யாற்றின் கரைமேல், பாம்பு போலும் இடையினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான். 

 

 

814 அங்கம்மொழி யன்னாரவர்

அமரர்தொழு தேத்த

வங்கம்மலி கின்றகடல்

மாதோட்டநன் னகரில்

பங்கஞ்செய்த பிறைசூடினன்

பாலாவியின் கரைமேல்

செங்கண்ணர வசைத்தான்திருக்

கேதீச்சரத் தானே.

7.080.3

 

  பிளவு செய்த பிறையைச் சூடினவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வேதத்தின் அங்கங்களைச் சொல்லுகின்ற அத்தன்மையையுடைய அந்தணர்களும், தேவர்களும் வணங்கித் துதிக்க, மரக்கலம் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல், சினத்தாற் சிவந்த கண்ணையுடைய பாம்பைக் கட்டி யுள்ளவனாய்க் காணப்படுகின்றான். 

 

 

815 கரியகறைக் கண்டன்நல

கண்மேல்ஒரு கண்ணான்

வரியசிறை வண்டியாழ்செயும்

மாதோட்டநன் னகருள்

பரியதிரை யெறியாவரு

பாலாவியின் கரைமேல்

தெரியும்மறை வல்லான்திருக்

கேதீச்சரத் தானே.

7.080.4

 

  கருமையாகிய, நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும், நல்ல இருகண்கள்மேலும் மற்றொரு கண்ணையுடையவனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், கீற்றுக்களையுடைய சிறகுகளையுடைய வண்டுகள் யாழின் இசையை உண்டாக்குகின்ற, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பருத்த அலைகளை வீசிக்கொண்டு வருகின்ற பாலாவியாற்றின் கரைமேல், ஆராயத்தக்க வேதங்களை வல்லவனாய்க் காணப்படுகின்றான். 

 

 

816 அங்கத்துறு நோய்கள்ளடி

யார்மேலொழித் தருளி

வங்கம்மலி கின்றகடல்

மாதோட்டநன் னகரில்

பங்கஞ்செய்த மடவாளொடு

பாலாவியின் கரைமேல்

தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்

கேதீச்சரத் தானே.

7.080.5

 

  தன் அடியார்கள் மேலனவாய், அவர்களது உடம்பிற் பொருந்துகின்ற நோய்களை முற்றக் களைந்தருள்பவனாகிய சிவபெருமான், மரக்கலங்கள் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், தனது திருமேனியின் ஒரு கூற்றை அழகு செய்கின்ற மங்கை ஒருத்தியுடன், பாலாவி யாற்றின் கரைமேல், தென்னஞ் சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனாய்க் காணப்படுகின்றான். 

 

 

817 வெய்யவினை யாயவ்வடி

யார்மேலொழித் தருளி

வையம்மலி கின்றகடல்

மாதோட்டநன் னகரில்

பையேரிடை மடவாளொடு

பாலாவியின் கரைமேல்

செய்யசடை முடியான்திருக்

கேதீச்சரத் தானே.

7.080.6

 

  திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியவர்மேல் உள்ள கொடிய வினைகளாய் உள்ளனவற்றை முற்ற ஒழித்துநின்று, நிலவுலகத்தில் உள்ளார் உணர்ந்து மகிழ நிற்கின்ற, கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நகரத்தில், பாம்பு போலும் இடையினை உடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், சிவந்த சடைமுடியை உடையவனாய்க் காணப்படுகின்றான். 

 

 

818 ஊனத்துறு நோய்கள்ளடி

யார்மேலொழித் தருளி

வானத்துறு மலியுங்கடல்

மாதோட்டநன் னகரில்

பானத்துறு மொழியாளொடு

பாலாவியின் கரைமேல்

ஏனத்தெயி றணிந்தான்திருக்

கேதீச்சரத் தானே.

7.080.7

 

  திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியார்கள் மேலனவாய், உடம்பிற் பொருந்தும் நோய்களை முற்ற ஒழித்துநின்று, அலைகளால் வானத்தைப் பொருந்துகின்ற, நீர் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பாலும் விரும்பத்தக்க மொழியை யுடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், பன்றியின் கொம்பை அணிந்தவனாய்க் காணப்படுகின்றான். 

 

 

819 அட்டன்னழ காகவ்வரை

தன்மேலர வார்த்து

மட்டுண்டுவண் டாலும்பொழில்

மாதோட்டநன் னகரில்

பட்டவ்வரி நுதலாளொடு

பாலாவியின் கரைமேல்

சிட்டன்நமை யாள்வான்திருக்

கேதீச்சரத் தானே.

7.080.8

 

  அட்ட மூர்த்தமாய் நிற்பவனாகிய. திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது அரையில் பாம்பினை அழகாகக் கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரிக்கின்ற சோலைகளையுடைய 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை யணிந்த அழகிய நெற்றியை உடைய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் காணப்படுகின்றான். 

 

 

820 மூவரென இருவரென

முக்கண்ணுடை மூர்த்தி

மாவின்கனி தூங்கும்பொழில்

மாதோட்டநன் னகரில்

பாவம்வினை யறுப்பார்பயில்

பாலாவியின் கரைமேல்

தேவன்எனை ஆள்வான்திருக்

கேதீச்சரத் தானே.

7.080.9

 

  மூன்று கண்களையுடைய மூர்த்தியாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், மாமரங்களின் கனிகள் தாழத் தூங்குகின்ற சோலைகளையுடைய, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில் பாவத்தையும், இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் பலகாலும் வந்து மூழ்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், மூவராகியும், இருவராகியும், முதற்கடவுளாகியும் நின்று, என்னை ஆள்பவனாய்க் காணப்படுகின்றான். 

 

 

821 கரையார்கடல் சூழ்ந்தகழி

மாதோட்டநன் னகருள்

சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்

கேதீச்சரத் தானை

மறையார்புகழ் ஊரன்னடித்

தொண்டன்னுரை செய்த

குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்

கூடாகொடு வினையே.

7.080.10

 

  கறுப்பு நிறம் பொருந்திய கடல் சூழ்ந்த, கழியையுடைய, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தின்கண் உள்ள, சிறகுகள் பொருந்திய வண்டுகள் யாழிசைபோலும் இசையை உண்டாக்குகின்ற சோலைகளையுடைய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது அடிக்குத் தொண்டனாகி, வேதத்தைச் சொல்லுகின்ற, புகழையுடைய நம்பியாரூரன் பாடிய, குறைதல் இல்லாத இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட, கொடியனவாகிய வினைகள் வந்து பொருந்தமாட்டா. 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.