|
||||||||
ஏழாம் திருமுறை-95 |
||||||||
7.095.திருவாரூர்
பண் - செந்துருத்தி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று, இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
964 மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே.
7.095.1
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே, உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே, உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி, அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள், தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது, மூண்டெரி யாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல, மனத்தினுள்ளே வெதும்பி, தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறியநின்று பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது, அதனை, உம்பால் வந்து வாய்திறந்து சொல்வார்களாயின், நீர் அதனை கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர்; இஃதே நும் இயல்பாயின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
965 விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை
கொத்தை யாக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே.
7.095.2
அடிகளே, நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர்; ஏனெனில், யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன்; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையும் பட்டேன்; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர்; எதன்பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர்? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர்; எனக்குப் பழி யொன்றில்லை; பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர்; மற்றொரு கண்ணைத்தர உடன்படாவிடின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
966 அன்றில் முட்டா தடையுஞ் சோலை
ஆரூ ரகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது
குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதீரே.
7.095.3
அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற, சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக் கன்றுகள் போல, நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள், பலநாள் பாடியபின்னும் தங்கள் கண் காணப்பெறாது, குன்றின்மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
967 துருத்தி யுறைவீர் பழனம் பதியாச்
சோற்றுத் துறையாள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
மனமே யெனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமைப் பணித்தால்
வாழ்ந்து போதீரே.
7.095.4
இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே, நீர் இன்னும், 'திருத்துருத்தி, திருப்பழனம்' என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர்; திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர்; ஆதலின், உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா; அதனால் உம்பால் அன்புமிக்க அடியார்கள், தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால், நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து, மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
968 செந்தண் பவளந் திகழுஞ் சோலை
இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே யாமா
றுமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் மடியார்
தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ என்றால்
வாழ்ந்து போதீரே.
7.095.5
எங்கள் தலைவரே, இது, செவ்விய தண்ணிய பவளம்போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையை யுடைய திருவாரூர் தானோ? நன்கு காண இயலாமையால் இதனைத் தௌ?கின்றிலேன்; உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன், இதுதானோ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள், தங்கள் கண் காணப்பெறாது, உம்பால் வந்து, 'எம் பெருமானே, முறையோ' என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
969 தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
சேருந் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்
புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால்
வாழ்ந்து போதீரே.
7.095.6
தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற, முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த, திரிக்கப்பட்ட புல்லிய சடையை யுடையவரே, உம் அடியவர், தாம் பொருளில்லாமையால் இன்றி, தங்கள் கண் காணப்பெறாது வருந்தி, மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதனால், நீரே இனிது வாழ்ந்து போமின்!
970 ஆயம் பேடை அடையுஞ் சோலை
ஆரூ ரகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா
றுமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி
மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதீரே.
7.095.7
ஆண் பறவைக் கூட்டம், பெண் பறவைக் கூட்டத்துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றவரே, எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே, உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து, பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி, அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி, உடம்பைக் கொடுத்து, இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
971 கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
இகழா தேத்துவோம்
பழிதா னாவ தறியீர் அடிகேள்
பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால்
வாழ்ந்து போதீரே.
7.095.8
அடிகளே, யாங்கள் இழிவில்லாத உயர்குலத்திலே பிறந்தோம்; அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி, நீர், கழியும், கடலும், மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும் சொற்களையுடையேமாய்த் துதிப்போம்; அவ்வாறாகலின் எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர்; அதனால், உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள், வழியைக் காணமாட்டாது அலைந்து வாழ்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்!
972 பேயோ டேனும் பிரிவொன் றின்னா
தென்பா? பிறரெல்லாம்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ
கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே.
7.095.9
திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, விரும்பப்பட்டது காயே எனினும், விரும்பிக் கைக் கொண்டால், அது கனியோடொப்பதேயன்றோ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம், பேயோடு நட்புச்செய்யினும், பிரிவு' என்பதொன்று துன்பந்தருவதே என்று சொல்லி, அதனைப்பிரிய ஒருப்படார், ஆனால், நீரோ, உமது திருவோலக்கத்தின் நடுவே நாய்போல முறையிட்டுத் திரிந்தாலும், உமக்கு ஆட்பட்டவர்கட்கு, வாய்திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர்; இதுவே உமது நட்புத் தன்மையாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்!
973 செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லட்டா னம்மே
இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை
இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
வாழ்ந்து போதீரே.
7.095.10
திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே, இது, செருந்தி மரங்கள், தமது மலர்களாகிய செம் பொன்னை மலர்கின்ற திருவாரூர்தானோ? இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும்' உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம், உம்பால் வருத்தமுற்று வந்து, ஒரு குறையை வாய்விட்டுச் சொன்னாலும், நீர் வாய்திறவாதிருப்பிராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்!
974 காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்
கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லட்டா னத்தே
அடிப்பேர் ஆரூரன்.
பாரூர் அறிய என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
வாழ்ந்து போதீரே.
7.095.11
பல நூல்களும் ஆகி, கருமை மிக்க கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய, திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப்பொருந்திய தனங்களையுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்டவரே, இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய, நீர், உமது திருவடிப் பெயரைப் பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர்; அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர்; இனி நீர் இனிது வாழ்ந்து போமின்!
திருச்சிற்றம்பலம்
7.095.திருவாரூர் பண் - செந்துருத்தி திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று, இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது. சுவாமிபெயர் - வன்மீகநாதர். தேவியார் - அல்லியங்கோதையம்மை.
964 மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. 7.095.1
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே, உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே, உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி, அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள், தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது, மூண்டெரி யாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல, மனத்தினுள்ளே வெதும்பி, தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறியநின்று பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது, அதனை, உம்பால் வந்து வாய்திறந்து சொல்வார்களாயின், நீர் அதனை கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர்; இஃதே நும் இயல்பாயின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
965 விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர் எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. 7.095.2
அடிகளே, நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர்; ஏனெனில், யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன்; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையும் பட்டேன்; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர்; எதன்பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர்? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர்; எனக்குப் பழி யொன்றில்லை; பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர்; மற்றொரு கண்ணைத்தர உடன்படாவிடின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
966 அன்றில் முட்டா தடையுஞ் சோலை ஆரூ ரகத்தீரே கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே. 7.095.3
அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற, சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக் கன்றுகள் போல, நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள், பலநாள் பாடியபின்னும் தங்கள் கண் காணப்பெறாது, குன்றின்மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
967 துருத்தி யுறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறையாள்வீர் இருக்கை திருவா ரூரே உடையீர் மனமே யெனவேண்டா அருத்தி யுடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வருத்தி வைத்து மறுமைப் பணித்தால் வாழ்ந்து போதீரே. 7.095.4
இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே, நீர் இன்னும், 'திருத்துருத்தி, திருப்பழனம்' என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர்; திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர்; ஆதலின், உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா; அதனால் உம்பால் அன்புமிக்க அடியார்கள், தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால், நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து, மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
968 செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர் எந்தம் அடிகேள் இதுவே யாமா றுமக்காட் பட்டோர்க்குச் சந்தம் பலவும் பாடும் மடியார் தங்கண் காணாது வந்தெம் பெருமான் முறையோ என்றால் வாழ்ந்து போதீரே. 7.095.5
எங்கள் தலைவரே, இது, செவ்விய தண்ணிய பவளம்போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையை யுடைய திருவாரூர் தானோ? நன்கு காண இயலாமையால் இதனைத் தௌ?கின்றிலேன்; உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன், இதுதானோ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள், தங்கள் கண் காணப்பெறாது, உம்பால் வந்து, 'எம் பெருமானே, முறையோ' என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
969 தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப் புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணாது மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே. 7.095.6
தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற, முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த, திரிக்கப்பட்ட புல்லிய சடையை யுடையவரே, உம் அடியவர், தாம் பொருளில்லாமையால் இன்றி, தங்கள் கண் காணப்பெறாது வருந்தி, மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதனால், நீரே இனிது வாழ்ந்து போமின்!
970 ஆயம் பேடை அடையுஞ் சோலை ஆரூ ரகத்தீரே ஏயெம் பெருமான் இதுவே ஆமா றுமக்காட் பட்டோர்க்கு மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக் காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே. 7.095.7
ஆண் பறவைக் கூட்டம், பெண் பறவைக் கூட்டத்துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றவரே, எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே, உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து, பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி, அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி, உடம்பைக் கொடுத்து, இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
971 கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா தேத்துவோம் பழிதா னாவ தறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் வழிதான் காணா தலமந் திருந்தால் வாழ்ந்து போதீரே. 7.095.8
அடிகளே, யாங்கள் இழிவில்லாத உயர்குலத்திலே பிறந்தோம்; அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி, நீர், கழியும், கடலும், மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும் சொற்களையுடையேமாய்த் துதிப்போம்; அவ்வாறாகலின் எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர்; அதனால், உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள், வழியைக் காணமாட்டாது அலைந்து வாழ்வதாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்!
972 பேயோ டேனும் பிரிவொன் றின்னா தென்பா? பிறரெல்லாம் காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ கருதிக் கொண்டக்கால் நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு வாய்தான் திறவீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. 7.095.9
திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, விரும்பப்பட்டது காயே எனினும், விரும்பிக் கைக் கொண்டால், அது கனியோடொப்பதேயன்றோ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம், பேயோடு நட்புச்செய்யினும், பிரிவு' என்பதொன்று துன்பந்தருவதே என்று சொல்லி, அதனைப்பிரிய ஒருப்படார், ஆனால், நீரோ, உமது திருவோலக்கத்தின் நடுவே நாய்போல முறையிட்டுத் திரிந்தாலும், உமக்கு ஆட்பட்டவர்கட்கு, வாய்திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர்; இதுவே உமது நட்புத் தன்மையாயின், நீரே இனிது வாழ்ந்து போமின்!
973 செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர் பொருந்தித் திருமூ லட்டா னம்மே இடமாக் கொண்டீரே இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம் வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போதீரே. 7.095.10
திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே, இது, செருந்தி மரங்கள், தமது மலர்களாகிய செம் பொன்னை மலர்கின்ற திருவாரூர்தானோ? இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும்' உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம், உம்பால் வருத்தமுற்று வந்து, ஒரு குறையை வாய்விட்டுச் சொன்னாலும், நீர் வாய்திறவாதிருப்பிராயின், நீரே இனிது வாழ்ந்து போமின்!
974 காரூர் கண்டத் தெண்டோள் முக்கண் கலைகள் பலவாகி ஆரூர்த் திருமூ லட்டா னத்தே அடிப்பேர் ஆரூரன். பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதீரே. 7.095.11
பல நூல்களும் ஆகி, கருமை மிக்க கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய, திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப்பொருந்திய தனங்களையுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்டவரே, இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய, நீர், உமது திருவடிப் பெயரைப் பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர்; அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர்; இனி நீர் இனிது வாழ்ந்து போமின்!
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 24 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|