இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிப்பது தலத்தின் சிறப்பு.இத்தல அன்னை கரும்பால் மொழி அம்மை என்னும்
திருப்பெயரோடு பக்தர்கள் குறைபோக்கி வருகிறாள். பிரதோஷ காலங்களில் மிக விமரிசையாக அபிஷேக ஆராதனைகள் செய்யப் படுகின்றன.
கார்த்திகை, தை மாதங்களில் திருவிழாக்கள் அமர்க்களப்படும். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 280 கட்டளைதாரர்கள் இவ்வாலயத்திற்கு முறைப்படி
பூஜைகளைத் தடையின்றி நடத்தி வருகிறார்கள். இங்கு வந்து மனமுருக வேண்டும் பக்தர்களுக்கு மங்களங்களை அருளுகிறார் கடகாலீஸ்வரர். பித்தம்
தெளிவது, பார்வைக் கோளாறு நீங்குவது, இழந்த பொருள் கிடைப்பது போன்ற பல்வேறு நன்மைகளை இங்கு வரும் பக்தர்கள் பெறுவது அனுபவப்
பூர்வமான உண்மை.கடகாலிலிருந்து வெளிப்பட்டதால் ஈசன் கடகாலீஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அந்த ஊரும் கடகாநல்லூர் எனப்பட்டது. அந்த
தலமே தற்போது கடையநல்லூர் எனப் படுகிறது.
இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிப்பது தலத்தின் சிறப்பு. இத்தல அன்னை கரும்பால் மொழி அம்மை என்னும் திருப்பெயரோடு பக்தர்கள் குறைபோக்கி வருகிறாள். பிரதோஷ காலங்களில் மிக விமரிசையாக அபிஷேக ஆராதனைகள் செய்யப் படுகின்றன. கார்த்திகை, தை மாதங்களில் திருவிழாக்கள் அமர்க்களப்படும். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 280 கட்டளைதாரர்கள் இவ்வாலயத்திற்கு முறைப்படி பூஜைகளைத் நடத்தி வருகிறார்கள்.
இங்கு வந்து மனமுருக வேண்டும் பக்தர்களுக்கு மங்களங்களை அருளுகிறார் கடகாலீஸ்வரர். பித்தம் தெளிவது, பார்வைக் கோளாறு நீங்குவது, இழந்த பொருள் கிடைப்பது போன்ற பல்வேறு நன்மைகளை இங்கு வரும் பக்தர்கள் பெறுவது உண்மை. கடகாலிலிருந்து வெளிப்பட்டதால் ஈசன் கடகாலீஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அந்த ஊரும் கடகாநல்லூர் எனப்பட்டது. அந்த தலமே தற்போது கடையநல்லூர் எனப் படுகிறது. |