மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது. ஆவுடையார் பிற்பாகம் 2 பிரிவாகவும் விஷ்யு பாகம்
சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப்பெற்றுள்ளது.இது மற்ற சிவ தலங்களில் காணமுடியாத ஒன்று.இத்தலத்தில் உள்ள விகடச்சக்கர விநாயகருக்கு (சகட்
விநாயகர்)மாலை,தேங்காய் பழம் கடலை சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்ட்டம் உபாதைகள் நீங்கும்.
கல்யாணபாக்கியம், குழந்தைபாக்கியம், உத்தியோக பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்திற்கு வந்து வழிபடலாம். பல்லி விழும் உபாதைகள் விலக இத்தலத்தில்
வழிபடுதல் நல்லது.சாபம் பெற்ற சுகமுனிவர் கிளியுருவங்கொண்டு இறைவனை வழிபட்ட தலம்.அழகிய கிளி முகங் கொண்ட சுக முனிவரின் மூலவர் உற்சவ
மூர்த்தியும் உள்ளது.இதனாலேயே சுகவனம் என்றும் சுகவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தலத்து முருகனை
பாடியுள்ளார். தேவர்கள் பெருமானை அரசமர வடிவில் வழிபட்டது,சேரமானுக்கும், ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் தந்தது, ஒளவையார் ஓர்
வளர்ப்புப்பெண்ணுக்குத் திருமணம் செய்வித்தது போன்ற பெருமைகளையுடைய தலம்.
மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது. ஆவுடையார் பிற்பாகம் 2 பிரிவாகவும் விஷ்யு பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப்பெற்றுள்ளது. இது மற்ற சிவ தலங்களில் காணமுடியாத ஒன்று. இத்தலத்தில் உள்ள விகடச்சக்கர விநாயகருக்கு மாலை,தேங்காய் பழம் கடலை சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்ட்டம் உபாதைகள் நீங்கும்.
கல்யாணபாக்கியம், குழந்தைபாக்கியம், உத்தியோக பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்திற்கு வந்து வழிபடலாம். பல்லி விழும் உபாதைகள் விலக இத்தலத்தில் வழிபடுதல் நல்லது. சாபம் பெற்ற சுகமுனிவர் கிளியுருவங்கொண்டு இறைவனை வழிபட்ட தலம். அழகிய கிளி முகங் கொண்ட சுக முனிவரின் மூலவர் உற்சவ மூர்த்தியும் உள்ளது. இதனாலேயே சுகவனம் என்றும் சுகவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தலத்து முருகனை பாடியுள்ளார். தேவர்கள் பெருமானை அரசமர வடிவில் வழிபட்டது,சேரமானுக்கும், ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் தந்தது, ஒளவையார் ஓர் வளர்ப்புப்பெண்ணுக்குத் திருமணம் செய்வித்தது போன்ற பெருமைகளையுடைய தலம். |