|
||||||||
ஆறாம் திருமுறை-35 |
||||||||
6.035.திருவெண்காடு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்.
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
2435 தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண்ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6.035.1
தாம் விரும்பியவாறே விரைந்தும் தாவியும் மெல்லென்றும் நடக்கும் காளையை இவர்ந்து திருவெண்காட்டை விரும்பி அடைந்த, உலகியலுக்கு வேறுபட்ட பெருமான், தூண்டப்பட்ட விளக்கினது ஒளி போன்ற பிரகாசம் உடைய திருமேனியில் வெண்ணீறணிந்து, சூலத்தைக் கையில் ஏந்திச் சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு, காதிலும் பாம்பினை அணிந்து, பொன் போன்ற சடைகள் தொங்கப் பூணூல் அணிந்தவராய் நீண்டு கிடந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி நீண்ட தெருவழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
2436 பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர்
பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
யொத்துலக மெல்லா மொடுங்கி யபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6.035.2
வெண்காடு மேவிய விகிர்தனார் தம் திருவடிகளை மனத்துக் கொள்ளும் அடியவர்களுக்குத் திருவடி தீட்சை செய்து, பாதலத்தையும் கடந்து, கீழ் உருவிச் சென்ற திருவடிகளை உடையவராய், யாருக்கும் தீங்கு நேராதவகையில் ஏழுலகமாய் நின்ற ஒரே திருவடியை உடையவராய், ஊழி வெள்ளத்தின் ஒலி, உலகையெல்லாம் வெள்ளம் மூழ்குவித்து அவ்வுலகமெல்லாம் அழிந்த பின்னர் அடங்கியபோது, தாம் ஒடுங்காது வேதம் ஓதி வீணையை இசைத்து அவ்வொலியில் மகிழ்வர்.
2437 நென்னலையோர் ஓடேந்திப் பிச்சைக் கென்று
வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்
அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்
அருகே வருவார்போல் நோக்கு கின்றார்
நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ
என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி யாடும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6.035.3
மெல்லிய தனங்களை உடைய மகளிர் கூடி விரும்பி விளையாடும் வெண்காடு மேவிய விகிர்தனார் நேற்று ஒரு மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை பெறுவதற்காக வந்தாராக 'இதோ வந்துவிட்டேன்' என்று வீட்டிற்குள் புகுந்து உணவுடன் நான் மீண்டுவர நின்ற இடத்திலேயே நின்று கொண்டு யான் இடவந்த பிச்சையை ஏற்காமல் பக்கத்தில் வருபவரைப் போல என்னைக் கூர்ந்து நோக்கினார்.'உம் மன நிலை எவ்வாறு இருக்கிறது? உம்முடைய ஊர்யாது?' என்று வினவிய எனக்கு மறுமாற்றம் தாராமலே நின்றுபின் சென்று விட்டார்?
2438 ஆகத் துமையடக்கி யாறு சூடி
ஐவா யரவசைத்தங் கானே றேறிப்
போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்
புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6.035.4
பார்வதியைப்பாகமாகக் கொண்டு கங்கையைத் தலையில் சூடி ஐந்தலைப்பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் காளையை இவர்ந்து சிவபோகத்தை நுகரும் பூதங்கள் பலவும் தம்மைச்சூழப் புலித்தோலை உடுத்து இல்லத்துப்புகுந்து நின்றஅவருக்கு உணவு வழங்க வந்த என்னை உள்ளத்தால் பற்றிக்கூர்ந்து நோக்கி என் அடக்கம் என்ற பண்பினை அழித்துத்தீ வினையை உடைய என் வளைகளை, மேக மண்டலத்தைஅளாவிய சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனார்கவர்ந்து சென்றுவிட்டார்.
2439 கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங்
கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல
உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
கள்ள விழிவிழிப்பர் காணாக் கண்ணாற்
கண்ணுள்ளார் போலே கரந்து நிற்பர்
வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6.035.5
மிக்கஒளியை உடைய குழைகளை அணிந்த, பருத்துக் குறியவடிவுடைய பூதங்கள் கொடுகொட்டி என்ற பறையை இசைத்துக் கூத்தாடிப்பாட, என உள்ளத்தைக் கவர்ந்து கொண்டுபோவாரைப் போல என்னைச் சுற்றி வருகிறார். நான்அவரை உள்ளவாறு அறிய இயலாதேனாய்த் திரும்பினேன். என்னை நேரில் பாராதவரைப் போல அரைக்கண்ணால்பார்க்கிறார். கண்ணுக்கு அகப்படுபவரைப் போலக்காட்டி மறைந்து நிற்கிறார். அவர் கங்கையைச் சடையில் கொண்டவர். வேதம் ஓதிய நாவினை உடையவராய் வெண்காடு மேவிய விகிர்தனார் ஆவர்.
2440 தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச்
சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்
பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாரால்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக்
கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6.035.6
காலையும்மாலையும் எப்பொழுதும் மின்னுகின்ற சடைமுடியைஉடையவராய், வேதம் ஓதும் நாவினராய், வெண்காடு மேவியவிகிர்தனார், ஏவிப்பணி கொள்ளும் சூலம் மழு என்றபடைகளை ஏந்தியவராய், ஒளி வீசும் கொன்றைப் பூமாலையை அணிந்து இருபொருள்படச் சுவையான சொற்களைப்பேசித் தொழுவத்தில் தங்கக் கூடிய வெண்ணிறக்காளையை இவர்ந்து வந்து பிச்சையையும் ஏற்காதவராய்த்தம்மை நோக்கி நிற்பவர் இயல்பினை அழிக்கின்றவர்போல, முப்பட்டைகளாகத் திருநீற்றை அணிந்து எனக்குக்காமத் தீ ஏற்படும் வகையில் பேசி என் உள்ளத்தில்அடக்கத்தை நீக்கி என் வளைகளையும் கவர்ந்து சென்றுவிட்டார்.
2441 பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக்
கோணாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய்
உண்பதுவும் நஞ்சன்றேல் ஓவியுண்ணார்
பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப்
பாலைப் பரிசழியப் பேசு கின்றார்
விண்பால் மதிசூடி வேதம் ஓதி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6.035.7
நங்காய்! வானத்தில் இயங்கும் பிறையைச் சூடி, வேதம் ஓதி, வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியைப் பாகமாகக் கொண்டு, பெண்கள் விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து கொடிய பாம்புகளைப் பூண்டு நான் வெட்கப் படும்படியாக என்னை நலம் பாராட்டுவார். உலகில் உண்பார் உறங்குவார் செயல்களோடு அவருடைய செயல்கள் ஒவ்வா. அவர் விடம் ஒன்றே உண்பார். அன்றேல் கஞ்சத்தனத்தால் உண்பதனை விடுத்து உண்ணாதே இருப்பார். அழகாக விரிந்த சடையுடையவர். என்னை நெருங்கி வந்து கூர்ந்து பார்த்துப் பாலினும் இனிமையாக என்னிடம் பேசுகின்றார்.
2442 மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு
வானவரும் மாலயனுங் கூடித் தங்கள்
சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித்
தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக்
கருதுங்கொல் எம்பெருமான் செய்குற்றேவல்
என்பார்க்கு வேண்டும் வரங்கொ டுத்து
விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6.035.8
வெண்ணிறக்காளையை இவர்ந்து வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியிடம் அவள் ஊடலைப் போக்கும் சொற்களைப் பேசுபவராய்த் தேவர்களும் திருமாலும் பிரமனும் கூடிவேத வாக்கியங்களால் துதித்து அபிடேகம் செய்து தோத்திரங்கள் பலவற்றைச் சொல்லி நறுமணப் பொருள்களைப்புகைத்து, 'எம்பெருமான் யாங்கள் செய்யும் குற்றேவல்களை மனத்துக் கொள்வாரோ' என்று வேண்டுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்துத் தமக்கு வேறுபட்டசெயல்கள் உளவாகக் கொண்டு அவற்றிற்காக இடம் பெயர்ந்துசெல்வர்.
2443 புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
காணார் பொறியழலாய் நின்றான் தன்னை
உள்ளானை யொன்றலா உருவி னானை
உலகுக் கொருவிளக்காய் நின்றான் தன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும்
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங்கொ டுப்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6.035.9
வெண்காடுமேவிய விகிர்தனார், கருடனை உடைய திருமாலும் நான்குமுகங்களை உடைய பிரமனும் கீழும் மேலும் தேடிச்சென்றும் காண இயலாதவராய்ப் பொறிகளை வெளிப்படுத்தும்அழற்பிழம்பாய் நின்றவராய் எல்லாப்பொருள்களின் உள்ளிடத்தும் இருப்பவராய், அடியார்கள்விரும்பும் பல உருவங்களையும் உடைய வராய்த் தேன் நிறைந்தகொன்றைப்பூவை அருச்சித்து நீங்காமல் நன்னெறியில்நின்று தவம் செய்த ஐராவதம் என்ற வெள்ளானைக்குஅது வேண்டிய வரங்களைக் கொடுப்பவர் ஆவர்.
2444 மாக்குன் றெடுத்தோன்தன் மைந்த னாகி
மாவேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் தன்னைக்
காக்குங் கடலிலங்கைக் கோமான் தன்னைக்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி
வீக்கந் தவிர்த்த விரலார் போலும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
6.035.10
வெண்காடுமேவிய விகிர்தனார் கோவர்த் தனத்தைக் குடையாகஉயர்த்திய கண்ணனாகிய திருமாலின் மகனாய்க்கரும்பையேவில்லாகக் கொண்ட மன்மதனுக்குத் துணையாக வந்த தேவர்களெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற போதே ஒரே நொடி நேரத்தில் அவன் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் நோக்கியவர். கடலே அரணாகப் பாதுகாக்கப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய ஒளிவீசும் மகுடம் தாங்கிய தலைகளும் கண்களும் நசுங்கி வெளிப்புறம் தோன்றுமாறு தம் திருவடி விரலை ஊன்றி அவனுடைய செருக்கினை அடக்கியவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
6.035.திருவெண்காடு திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர். தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
2435 தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச் சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம் பூண்டு பொறியரவங் காதிற் பெய்து பொற்சடைக ளவைதாழப் புரிவெண்ணூலர் நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார் வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.035.1
தாம் விரும்பியவாறே விரைந்தும் தாவியும் மெல்லென்றும் நடக்கும் காளையை இவர்ந்து திருவெண்காட்டை விரும்பி அடைந்த, உலகியலுக்கு வேறுபட்ட பெருமான், தூண்டப்பட்ட விளக்கினது ஒளி போன்ற பிரகாசம் உடைய திருமேனியில் வெண்ணீறணிந்து, சூலத்தைக் கையில் ஏந்திச் சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு, காதிலும் பாம்பினை அணிந்து, பொன் போன்ற சடைகள் தொங்கப் பூணூல் அணிந்தவராய் நீண்டு கிடந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி நீண்ட தெருவழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
2436 பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர் பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர் ஏதம் படாவண்ணம் நின்ற பாதர் ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர் ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி யொத்துலக மெல்லா மொடுங்கி யபின் வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.035.2
வெண்காடு மேவிய விகிர்தனார் தம் திருவடிகளை மனத்துக் கொள்ளும் அடியவர்களுக்குத் திருவடி தீட்சை செய்து, பாதலத்தையும் கடந்து, கீழ் உருவிச் சென்ற திருவடிகளை உடையவராய், யாருக்கும் தீங்கு நேராதவகையில் ஏழுலகமாய் நின்ற ஒரே திருவடியை உடையவராய், ஊழி வெள்ளத்தின் ஒலி, உலகையெல்லாம் வெள்ளம் மூழ்குவித்து அவ்வுலகமெல்லாம் அழிந்த பின்னர் அடங்கியபோது, தாம் ஒடுங்காது வேதம் ஓதி வீணையை இசைத்து அவ்வொலியில் மகிழ்வர்.
2437 நென்னலையோர் ஓடேந்திப் பிச்சைக் கென்று வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன் அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார் அருகே வருவார்போல் நோக்கு கின்றார் நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார் மென்முலையார் கூடி விரும்பி யாடும் வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.035.3
மெல்லிய தனங்களை உடைய மகளிர் கூடி விரும்பி விளையாடும் வெண்காடு மேவிய விகிர்தனார் நேற்று ஒரு மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை பெறுவதற்காக வந்தாராக 'இதோ வந்துவிட்டேன்' என்று வீட்டிற்குள் புகுந்து உணவுடன் நான் மீண்டுவர நின்ற இடத்திலேயே நின்று கொண்டு யான் இடவந்த பிச்சையை ஏற்காமல் பக்கத்தில் வருபவரைப் போல என்னைக் கூர்ந்து நோக்கினார்.'உம் மன நிலை எவ்வாறு இருக்கிறது? உம்முடைய ஊர்யாது?' என்று வினவிய எனக்கு மறுமாற்றம் தாராமலே நின்றுபின் சென்று விட்டார்?
2438 ஆகத் துமையடக்கி யாறு சூடி ஐவா யரவசைத்தங் கானே றேறிப் போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப் புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார் பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப் பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.035.4
பார்வதியைப்பாகமாகக் கொண்டு கங்கையைத் தலையில் சூடி ஐந்தலைப்பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் காளையை இவர்ந்து சிவபோகத்தை நுகரும் பூதங்கள் பலவும் தம்மைச்சூழப் புலித்தோலை உடுத்து இல்லத்துப்புகுந்து நின்றஅவருக்கு உணவு வழங்க வந்த என்னை உள்ளத்தால் பற்றிக்கூர்ந்து நோக்கி என் அடக்கம் என்ற பண்பினை அழித்துத்தீ வினையை உடைய என் வளைகளை, மேக மண்டலத்தைஅளாவிய சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனார்கவர்ந்து சென்றுவிட்டார்.
2439 கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன் கள்ள விழிவிழிப்பர் காணாக் கண்ணாற் கண்ணுள்ளார் போலே கரந்து நிற்பர் வெள்ளச் சடைமுடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.035.5
மிக்கஒளியை உடைய குழைகளை அணிந்த, பருத்துக் குறியவடிவுடைய பூதங்கள் கொடுகொட்டி என்ற பறையை இசைத்துக் கூத்தாடிப்பாட, என உள்ளத்தைக் கவர்ந்து கொண்டுபோவாரைப் போல என்னைச் சுற்றி வருகிறார். நான்அவரை உள்ளவாறு அறிய இயலாதேனாய்த் திரும்பினேன். என்னை நேரில் பாராதவரைப் போல அரைக்கண்ணால்பார்க்கிறார். கண்ணுக்கு அகப்படுபவரைப் போலக்காட்டி மறைந்து நிற்கிறார். அவர் கங்கையைச் சடையில் கொண்டவர். வேதம் ஓதிய நாவினை உடையவராய் வெண்காடு மேவிய விகிர்தனார் ஆவர்.
2440 தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச் சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப் பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார் பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாரால் கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக் கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.035.6
காலையும்மாலையும் எப்பொழுதும் மின்னுகின்ற சடைமுடியைஉடையவராய், வேதம் ஓதும் நாவினராய், வெண்காடு மேவியவிகிர்தனார், ஏவிப்பணி கொள்ளும் சூலம் மழு என்றபடைகளை ஏந்தியவராய், ஒளி வீசும் கொன்றைப் பூமாலையை அணிந்து இருபொருள்படச் சுவையான சொற்களைப்பேசித் தொழுவத்தில் தங்கக் கூடிய வெண்ணிறக்காளையை இவர்ந்து வந்து பிச்சையையும் ஏற்காதவராய்த்தம்மை நோக்கி நிற்பவர் இயல்பினை அழிக்கின்றவர்போல, முப்பட்டைகளாகத் திருநீற்றை அணிந்து எனக்குக்காமத் தீ ஏற்படும் வகையில் பேசி என் உள்ளத்தில்அடக்கத்தை நீக்கி என் வளைகளையும் கவர்ந்து சென்றுவிட்டார்.
2441 பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக் கோணாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார் உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சன்றேல் ஓவியுண்ணார் பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப் பாலைப் பரிசழியப் பேசு கின்றார் விண்பால் மதிசூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.035.7
நங்காய்! வானத்தில் இயங்கும் பிறையைச் சூடி, வேதம் ஓதி, வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியைப் பாகமாகக் கொண்டு, பெண்கள் விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து கொடிய பாம்புகளைப் பூண்டு நான் வெட்கப் படும்படியாக என்னை நலம் பாராட்டுவார். உலகில் உண்பார் உறங்குவார் செயல்களோடு அவருடைய செயல்கள் ஒவ்வா. அவர் விடம் ஒன்றே உண்பார். அன்றேல் கஞ்சத்தனத்தால் உண்பதனை விடுத்து உண்ணாதே இருப்பார். அழகாக விரிந்த சடையுடையவர். என்னை நெருங்கி வந்து கூர்ந்து பார்த்துப் பாலினும் இனிமையாக என்னிடம் பேசுகின்றார்.
2442 மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு வானவரும் மாலயனுங் கூடித் தங்கள் சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித் தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக் கருதுங்கொல் எம்பெருமான் செய்குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரங்கொ டுத்து விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.035.8
வெண்ணிறக்காளையை இவர்ந்து வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியிடம் அவள் ஊடலைப் போக்கும் சொற்களைப் பேசுபவராய்த் தேவர்களும் திருமாலும் பிரமனும் கூடிவேத வாக்கியங்களால் துதித்து அபிடேகம் செய்து தோத்திரங்கள் பலவற்றைச் சொல்லி நறுமணப் பொருள்களைப்புகைத்து, 'எம்பெருமான் யாங்கள் செய்யும் குற்றேவல்களை மனத்துக் கொள்வாரோ' என்று வேண்டுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்துத் தமக்கு வேறுபட்டசெயல்கள் உளவாகக் கொண்டு அவற்றிற்காக இடம் பெயர்ந்துசெல்வர்.
2443 புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங் காணார் பொறியழலாய் நின்றான் தன்னை உள்ளானை யொன்றலா உருவி னானை உலகுக் கொருவிளக்காய் நின்றான் தன்னைக் கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த வெள்ளானை வேண்டும் வரங்கொ டுப்பார் வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.035.9
வெண்காடுமேவிய விகிர்தனார், கருடனை உடைய திருமாலும் நான்குமுகங்களை உடைய பிரமனும் கீழும் மேலும் தேடிச்சென்றும் காண இயலாதவராய்ப் பொறிகளை வெளிப்படுத்தும்அழற்பிழம்பாய் நின்றவராய் எல்லாப்பொருள்களின் உள்ளிடத்தும் இருப்பவராய், அடியார்கள்விரும்பும் பல உருவங்களையும் உடைய வராய்த் தேன் நிறைந்தகொன்றைப்பூவை அருச்சித்து நீங்காமல் நன்னெறியில்நின்று தவம் செய்த ஐராவதம் என்ற வெள்ளானைக்குஅது வேண்டிய வரங்களைக் கொடுப்பவர் ஆவர்.
2444 மாக்குன் றெடுத்தோன்தன் மைந்த னாகி மாவேழம் வில்லா மதித்தான் தன்னை நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க நொடிவரையில் நோவ விழித்தான் தன்னைக் காக்குங் கடலிலங்கைக் கோமான் தன்னைக் கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி வீக்கந் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.035.10
வெண்காடுமேவிய விகிர்தனார் கோவர்த் தனத்தைக் குடையாகஉயர்த்திய கண்ணனாகிய திருமாலின் மகனாய்க்கரும்பையேவில்லாகக் கொண்ட மன்மதனுக்குத் துணையாக வந்த தேவர்களெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற போதே ஒரே நொடி நேரத்தில் அவன் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் நோக்கியவர். கடலே அரணாகப் பாதுகாக்கப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய ஒளிவீசும் மகுடம் தாங்கிய தலைகளும் கண்களும் நசுங்கி வெளிப்புறம் தோன்றுமாறு தம் திருவடி விரலை ஊன்றி அவனுடைய செருக்கினை அடக்கியவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|