தமிழ் வழிக் கல்வி எழுச்சியை விதைத்த தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவனரான அருணாசலம் அவர்கள் நேற்று சென்னையில் காலமானார்.
தமிழ் சான்றோர் பேரவை மூலமாக தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்ற இவர். தந்தை பெரியார் தமிழ் இசை மன்றம் மூலமாக தமிழர்களின் பாரம்பரிய இசைகளான நாட்டுபுறப்பாட்டு, பறை உள்ளிட்டவற்றை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நிகழ்ச்சிகளை திறம்பட நடத்திக்காட்டியவர்.
அரசு அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய அருணாச்சலம் பின்னர் தொழில் அதிபராகவும் தமிழர் நலன் சார்ந்தும் இயங்கியவர். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
|