LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ்நாடு பிறந்த தினம்

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்க முடிவானது. அதன்படி 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிந்து தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. சேர, சோழ, பாண்டிய மண்டலங்களை ஒன்றாக்கி, ஒருமைப்பட்ட தமிழ்நாடு என்னும் தனி மாநிலமாக உருவான இந்த நாளை தமிழ்நாட்டு பிறந்த நாள் என்று அரசு கொண்டாடி வருகிறது.

நமது நாட்டை நம்மிடம் விட்டுவிட்டு ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்து 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றைய சென்னை மாகாணச் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 420. இவர்கள் பிரிந்துப் போன பிறகு தற்போதையச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234.

தமிழகம் உருவான தினத்தைக் கொண்டாட தமிழறிஞர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று நடப்பு ஆண்டு முதல் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாட்டு நாளாக் கொண்டாட தமிழக அரசு முடிவுச் செய்துள்ளது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் தமிழ் தொன்மை குறித்துச் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சியின் புகைப்படங்களை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இதேபோல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் தமிழகம் உருவான வரலாறு தொடர்பானக் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மற்ற மாநில அரசுகள் இந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இந்த நாளைத் தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்கள் உத்சவ திருவிழா போன்று கொண்டாடி மகிழ்கின்றார்கள். கர்நாடகாவில் ஒரு மாதம் வரைக் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் கன்னட கொடி ஏற்றி, கன்னட தாய்க்கு மரியாதை செலுத்தி, கன்னட தேசிய எழுச்சித் திருநாளாகக் கொண்டாடுகின்றனர் கன்னடர்கள். அதேபோல் தெலுங்கிலும் கொண்டாடுகின்றனர். சுமார் 1,35,000 சதுர கிலோமீட்டர் பகுதியை ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவும் பிடித்துக்கொண்டன. நம்முடைய தமிழ் நாட்டை பேணி பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தின் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை மற்றும் மொழி உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது. அதை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் விதமாகத் தமிழர்கள் அனைவரும் தமிழர் கொடி ஏற்றிய தமிழ்நாட்டின் பிறந்த நாளை கொண்டாடுவோம்.

தென் இந்தியாவின் முக்கியப் பகுதியே சென்னை மாகாணம் தான். தமிழர்கள் அனைவரும் ஒரே ஆட்சியின் கீழ், தமிழ்நாடு என்ற அரசின் கீழ், தமிழ்நாடு என்ற நிலப்பரப்பின் கீழ், தமிழ்நாடு என்ற அடையாளத்தின் கீழ் வந்த தினம் நவம்பர் 1ம் நாள். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகும் அதனால் தமிழரின் அடையாளத்தை நவம்பர் 1-ஆம் தேதியில் தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம்.

by Madurai karthika   on 02 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.