உலர்கவட்டு ஓமைப் பொரிசினைக் கூகையும் வீசுகோட்டு ஆந்தையும் சேவலொடு அலமர திரைவிழிப் பருந்தினம் வளைஉகிர்ப் படையால் பார்ப்பிரை கவரப் பயனுறும் உலகில் கடனுறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத் (5)
தழல்உணக் கொடுத்த அதன்உண விடையே கைவிளக்கு எடுத்துக் கரைஇனம் கரைய பிணம்விரித் துண்ணும் குணங்கினம் கொட்ப சூற்பேய் ஏற்ப இடாகின கரப்ப கண்டுளம் தளிர்க்கும் கருணைஅம் செல்வி (10)
பிறைநுதல் நாட்டி கடுவளர் கண்டி இறால்நறவு அருவி எழுபரங் குன்றத்து உறைசூர்ப் பகையினற் பெறுதிரு வயிற்றினள் ஒருபால் பொலிந்த உயர்நகர்க் கூடல் கடுக்கைஅம் சடையினன் கழல்உளத்து இலர்போல் (15)
பொய்வரும் ஊரன் புகலரும் இல்புக என்உளம் சிகைவிட்டு எழும்அனல் புக்க மதுப்பொழி முளரியின் மாழ்கின என்றால் தோளில் துவண்டும் தொங்கலுள் மறைந்தும் கைவரல் ஏற்றும் கனவினுள் தடைந்தும் (20)
திரைக்கடல் தெய்வமுன் தெளிசூள் வாங்கியும் பொருட்கான் தடைந்தும் பாசறைப் பொருந்தியும் போக்கருங் கடுஞ்சுரம் போகமுன் இறந்தும் காவலில் கவன்றும் கல்வியில் கருதியும் வேந்துவிடைக்கு அணங்கியும் விளைபொருட்கு உருகியும் (25)
நின்ற இவட்கு இனிஎன்ஆம் கன்றிய உடலுள் படும்நனி உயிரே? (27)
|