LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- மற்றவை

பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.

பங்குனி உத்திரம் விரதம் முருகனுக்குரிய விரத நாளாகச் சொல்லப்பட்டாலும், இது அனைத்துத் தெய்வங்களுக்கும் உரிய முக்கியமான விரத நாளாகும்.

 

பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12-வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம்.

 

அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்தப் பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனிச் சிறப்பு உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.

 

வைகாசி பௌர்ணமி நாளை விசாகம் என்றும், தை மாத பௌர்ணமியைத் தைப்பூசம் என்றும், பங்குனி மாத பௌர்ணமி பங்குனி உத்திரம் என்றும், சித்ரா பௌர்ணமி என்றும், கார்த்திகை பௌர்ணமி திருவண்ணாமலை தீபம் என்றும், மார்கழி பௌர்ணமி திருவாதிரை என்றும் வைத்து ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமி நாளையும் விரத நாளாகக் கொண்டாடி வருகிறோம். பங்குனி, தை, வைகாசி உள்ளிட்ட பல மாதங்களில் வரும் பௌர்ணமி முருகனுக்குரிய விரத நாட்களாகக் கருதப்படுகிறது.

 

2024 ஆம் ஆண்டின் பங்குனி உத்திரம் எப்போது?

 

இந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. மார்ச் 24-ம் தேதி காலை 08.47 மணிக்கே உத்திரம் நட்சத்திரம் துவங்கி விட்டாலும், காலை 11.17 மணிக்குத்தான் பௌர்ணமி திதி துவங்குகிறது. ஆனால் மார்ச் 25 ம் தேதி தான் சூரிய உதய சமயத்தில் பௌர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து உள்ளன. இதனால் மார்ச் 25 ம் தேதியையே பங்குனி உத்திர நாளாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும்.

 

பங்குனி உத்திரம் புராணக்கதை

 

சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதலாகச் சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம். இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகு செய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

 

மேலும் இந்தத் திருநாளில் தான் முருகன் -தெய்வானை, ராமன் - சீதை, ரங்கமன்னார் - ஆண்டாள் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பட்டாபிஷேகம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம், பிரசன்ன வெங்கடேஸ்வரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் அற்புதமாக நடைபெறுகிறது.

by Kumar   on 21 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.