LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

உலகின் முதல் செயற்கை இதயம்....... வாழ்நாளை 5 வருடம் அதிகரிக்குமாம்.....

பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் பிரெஞ்சு பயோமெடிக்கல் பார்ம் கார்மத் என்ற நிறுவனம் செயற்கை இருதயத்தை வடிவமைத்துள்ளது. 

 

இந்த செயற்கை இதயம் உடலில் வெளியில் பொருத்தக்கூடியதாகவும், லித்தியம் பேட்டரி மூலம் இயங்கக்கூடியதாகவும் உள்ளது. உயிருள்ள உறுப்பை போன்று செயல்படும் இந்த செயற்கை இதயத்தின்  ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகளாகும்.  

பாரிசில் உள்ள ஜார்ஜஸ் பிராம்ட்யு மருத்துவமனை நிபுணர்கள் இந்த செயற்கை இருதயத்தை 75 வயது முதியவருக்கு பொருத்தியுள்ளனர். தற்போது செயற்கை இதயம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பும் செயற்கை இருதயம் தயாரித்து பொருத்தப்பட்டுள்ளது. அது ஒரு தற்காலிக மாற்றாக தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்த செயற்கை இதயத்தை மனித உடல் ஏற்க வேண்டும் என்பதால், இந்த செயற்கை இருதயமும், அதற்கு தேவையான திசுக்கள் உட்பட துணை பொருட்களும் கால்நடை உயிரினங்கள் மூலமாக எடுக்கப்பட்ட திசுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு கிலோவுக்கும் குறைவான எடையில் செயற்கை இருதயம் உள்ளது. இயற்கை இருதயத்தை விட அதிக எடை தான். எனினும் உயிரின திசுக்கள் மூலம் தசைகள் உட்பட எல்லாம் பொருத்தப்படுவதால் இருதயத்துக்கு ரத்தம் பாய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. நோயாளி இப்போது இயல்பு நிலைக்கு  வந்து விட்டார். அவர் சிறிது சிறிதாக நடக்க அனுமதிக்கப்படுகிறார். எந்த கோளாறும் இதுவரை ஏற்படவில்லை என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

by Swathi   on 23 Dec 2013  0 Comments
Tags: செயற்கை இதயம்   75 வயது நபர்   இதய மாற்று அறுவைசிகிச்சை   பிரெஞ்சு பயோமெடிக்கல் பார்ம் கார்மத்   Artificial Heart   Human Artificial Heart   Artificial Heart Transplant  
 தொடர்புடையவை-Related Articles
உலகின் முதல் செயற்கை இதயம்....... வாழ்நாளை 5 வருடம் அதிகரிக்குமாம்..... உலகின் முதல் செயற்கை இதயம்....... வாழ்நாளை 5 வருடம் அதிகரிக்குமாம்.....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.