LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி

தோற்றம் - 18 டிசம்பர் 1932

மறைவு- 13 டிசம்பர் 1987

பிறந்த ஊர் - ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த நதிக்குடி கிராம

மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த நதிக்குடி கிராமத்தில் (1932) பிறந்தார் நா.பார்த்தசாரதி. பள்ளிப் படிப்புக்குப் பிறகு மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம் பெற்றார். மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

 

எழுத்தாற்றல்மிக்க இவர், பல இதழ்களில் எழுதிவந்தார். ‘கல்கி’ இதழின் ஆசிரியர் சதாசிவம் அழைப்பின்பேரில், அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தீரன், அரவிந்தன், பொன்முடி, வளவன், மணிவண்ணன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவந்தார்.

அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தார்.

 

சாகித்ய அகாடமியின் உறுப்பினராகச் செயல்பட்டு, தமிழ்ப் படைப்புகளை தேசிய அளவில் பிரபலப்படுத்த முழு முயற்சி மேற்கொண்டார். சிறுகதை, நெடுங்கதை, நாவல், கட்டுரை, கவிதை, விமர்சனங்கள் என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தார்.

 

 ‘தீபம்’ என்ற இலக்கிய மாத இதழை 1965-ல் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். இதனால், ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றே குறிப்பிடப்பட்டார். தினமணிக் கதிர், வார இதழ், கதைக்கதிர் உள்ளிட்ட இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘மணிவண்ணன் பதில்கள்’ என்ற இவரது கேள்வி-பதில் பகுதி, 2 தொகுப்புகளாக வெளிவந்தன.

 

பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். கல்கியில் இவர் எழுதி தொடர்களாக வெளிவந்த பல பயணக் கட்டுரைகள், ‘புது உலகம் கண்டேன்’, ‘ஏழு நாடுகளில் எட்டு வாரங்கள்’ என்ற பெயரில் நூல்களாக வந்தன.

வாசகர்களுக்கு தன் கைப்பட கடிதம் எழுதும் வழக்கம் 

சிறுகதைகள், குறுநாவல்கள் அடங்கிய தொகுதிகள் உட்பட மொத்தம் 93 நூல்களை எழுதியுள்ளார். ‘பொய் முகங்கள்’, ‘முள்வேலிகள்’, ‘சுதந்திரக் கனவுகள்’, ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’, ‘துளசி மாடம்’, ‘மணிபல்லவம்’, ‘நித்திலவல்லி’, ‘பாண்டிமாதேவி’, ‘ராணி மங்கம்மாள்’ உள்ளிட்ட இவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.

 

 ‘குறிஞ்சிமலர்’ நாவலில் வரும் அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்களின் பெயர்களை வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் அளவுக்கு இப்பாத்திரங்கள் புகழ்பெற்றன. தனக்கு கடிதம் எழுதும் வாசகர்களுக்கு தன் கைப்பட உடனடியாக கடிதம் எழுதும் வழக்கம் கொண்டவர்.

 

 இவரது படைப்புகளில் சுயமுன்னேற்றச் சிந்தனைகள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் மிகுந்திருக்கும். இவரது பல நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இவரது குறிஞ்சி மலர், பொன் விலங்கு ஆகிய கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்தன.

பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும்

 காமராஜர் தலைமையிலான ‘ஸ்தாபன காங்கிரஸ்’ கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் சிறந்த பேச்சாளரும்கூட. இலக்கியம், அரசியல் என்ற இரு துறைகளிலும் தன் பேச்சாற்றலால் முத்திரை பதித்தார். சாகித்ய அகாடமி விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் 1983-ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு, கம்பராமாயணத் தத்துவக் கடல் விருது உட்பட பல பரிசுகள், விருதுகளைப் பெற்றவர்.

 

 45 வயதுக்குப் பிறகு, பச்சையப்பன் கல்லூரியில் மாலை வகுப்பில் சேர்ந்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். முனைவர் பட்ட நேர்காணலில் கலந்துகொள்வதற்கு முன்பாக, 55-வது வயதில் (1987) மறைந்தார்.

by   on 19 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
தமிழ் என்பதை இனி Thamizh என்று எழுதலாமா? தமிழ் என்பதை இனி Thamizh என்று எழுதலாமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.