தமிழில் யாவரும் நலம் என்ற திரைப்படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார், தெலுங்கில் மனம் என்ற திரை படத்ததை இயக்க இருக்கிறார். இந்த திரை படத்தில் உள்ள புதுமை என்னவென்றால், கதாநாயகர்களாக, நாகார்ஜுனா, அவரது அப்பா நாகேஸ்வர ராவ், மகன் நாக சைதன்யா என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நாயகர்கள் நடிக்க இருக்கிறார்கள். மனம் திரைப்படத்தை பிரமாண்டமாக இயக்கவிருக்கும் விக்ரம் கே.குமார் அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். மூன்று ஹீரோக்கள் இருப்பதால் ஸ்ரேயா, சமந்தா போன்ற முன்னிலை நடிகைகளும் இந்த பாடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
|