ஒரு லட்சத்து பதினாறாயிரத்து ஐநூறு மரங்கள் நடவுள்ள BCCI
கிரிக்கெட் இரசிகர்கள் மிக விரும்பும் IPL போட்டி இறுதி கட்டத்தினை எட்டி உள்ளது. தற்போது இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்றுள்ளன. இந்த தகுதிச் சுற்றுக்களில் ஒவ்வொரு Dot பந்துக்கும் 500 மரங்கள் நட BCCI முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு Dot பந்து வீசப்படும் வேளையிலும் Score board-ல் மரக்கன்று படம் காண்பிக்கப்பட்டது. மூன்று தகுதிச் சுற்றுகள் நடைபெற்றுள்ள நிலையில் மொத்தம் 233 Dot பந்துகள் வீசப்பட்டுள்ளன. எனவே ஒரு லட்சத்து பதினாறாயிரத்து ஐநூறு மரங்கள் BCCI-ல் நடப்பட உள்ளன. இது மிகப்பெரும் பசுமை விழிப்புணர்வாக மக்களுக்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை.
|