LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவருடைய கண்கள் தானம் அளிக்கப்பட்டன.

 

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் டேனியல் பாலாஜி. சீரியலில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

குறிப்பாகக் காக்கக் காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பை இன்றளவும் பலரும் புகழ்ந்து பேசுவார்கள். இது தவிரப் பைரவா, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

 

 

டேனியல் பாலாஜிக்கு மாரடைப்பு:

இப்படித் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜிக்கு 29/03/2024 அன்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 

திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றத் தீவிர முயற்சிகளை எடுத்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சைப் பலனில்லாமல் காலமானர். அவருக்கு வயது வெறும் 48..

 

டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மறைவு திரையுலகினரின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மறைவு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல்களைப் பதிவிட்டனர்.

 

அஞ்சலி: டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன் ஆகியோர் டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

கண்கள் தானம்

 

டேனியல் பாலாஜி தனது கண்களை தானம் செய்திருந்தார். புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கே சென்ற மருத்துவர்கள் கண்களை தானம் பெற்றனர். சினிமாவில் என்ன தான் வில்லன் நடிகராக இருந்தாலும் உயிரிழந்த பிறகும் அவர் மற்றவர்களுக்குப் பார்வையைத் தருகிறார் என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

by Kumar   on 02 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழகத்தில் 19,000 பேருக்கு வேலை வாய்ப்பு தரும் ரூ.7,375 கோடிக்கான புதிய முதலீடுகளுக்கு அனுமதி தமிழகத்தில் 19,000 பேருக்கு வேலை வாய்ப்பு தரும் ரூ.7,375 கோடிக்கான புதிய முதலீடுகளுக்கு அனுமதி
உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்குத் திருக்குறள் புத்தகம் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்குத் திருக்குறள் புத்தகம்
சென்னை பயணிகளின் சேவைக்காக ‘சாட்பாட்’ வசதி சென்னை பயணிகளின் சேவைக்காக ‘சாட்பாட்’ வசதி
திருச்சி-சென்னை  புதிய விமானச் சேவை அறிமுகம் திருச்சி-சென்னை புதிய விமானச் சேவை அறிமுகம்
விருதுநகரில் வெகு சிறப்பாக நடந்த 2--ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகரில் வெகு சிறப்பாக நடந்த 2--ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு
அயலகத் தமிழர் நலத்துறையின் இணை இயக்குநர்  இரமேஷ் காலமானார் அயலகத் தமிழர் நலத்துறையின் இணை இயக்குநர் இரமேஷ் காலமானார்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல் தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.