எவரெஸ்ட் சிகரம் தொட இருக்கும் முதல் தமிழ்ப்பெண்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஜோஹில்பட்டி கிராமத்தினை பிறப்பிடமாகக் கொண்டவர் முத்தமிழ்ச் செல்வி. சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக இருக்கிறார்.
'எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியினை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை அடைவேன்' என்ற முழக்கத்தோடு தனது சிகரப்பயணத்தை தொடங்கிய முத்தமிழ்ச்செல்வி, தற்போது சிகரத்தின் குறிப்பிடத்தக்க உயரத்தை அடைந்திருக்கிறார். தடகளத்தில் விருப்பம் உடையவராக முத்தமிழ்ச் செல்வி இருந்த நிலையில், கல்வியில் தான் கவனம் இருக்க வேண்டும் என்ற பெற்றோரின் வலியுறுத்தலால், அதில் தன் சாதனைகளை தொடர முடியாமல் போனதை தெரிவித்திருக்கிறார்.பின்னர் மலைகள் ஏறுவது அவரது தீரா ஆசையாக இருந்திருக்கிறது. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்குரிய, தகுதியான மலையேறும் படிப்பை முடிக்காத முத்தமிழ்ச் செல்வி,அதில் தகுதி பெற லடாக்கில் உள்ள 6496 மீட்டர் உயர மலையில் ஏறி தகுதி பெற்று இருக்கிறார்.
'Asian trekking' -ல் இணைந்து இப்பயணத்தினை தொடர பொருளாதார உதவிகள் தேவைப்படும் வேளையில், நண்பர்களும்,தமிழக அரசும் கைகொடுக்க இச்சாதனைப் பயணம் அவருக்கு சாத்தியமாகியுள்ளது .
|