எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம் வழங்கும் சாதனைத் தமிழர்களுக்கான விருதுகள்
எஸ்ஆர்எம் என அறியப்படும் ஸ்ரீ இராமசாமி நினைவு அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 2012-ஆம் ஆண்டு முதல் தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பினை உருவாக்கி சிறந்த தமிழறிஞர்களை கௌவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டிற்கான சாதனைத் தமிழர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தமிழறிஞருக்கு மூன்று லட்சம் பணத்தொகையும் விருதும் வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குழுவிற்கு ஐம்பதாயிரம் பணத்தொகை மற்றும் விருது வழங்கப்படுகிறது.மற்ற விருதுகள் ஒரு லட்சம் பணத்தொகையுடன் வழங்கப்படுகின்றன.
விருது பெறுவோர் விவரம்
*புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது- வெண்ணிலா (கங்காபுரம்), முத்து நாகு (சுளுந்தீ) *பாரதியார் கவிதை விருது- கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்) *அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது- வெற்றிசெல்வன் (மழலையர் பாடல்கள்) *ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது- டாக்டர் பழனி (நாலடியார்) *அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது வி.டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்) *முத்துத்தாண்டவர் தமிழிசை விருது- டி.கே.எஸ் கலைவாணன் (நாடகமும்,தமிழிசையும்) *பரிதிமார் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது- சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு) *முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது-சி.மகேஸ்வரன்(இனக்குழு வரைவியல்) *சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது- மா.பூங்குன்றன் (தென்மொழி) *தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது- திருப்புவனம் ஜி.ஆத்மநாதன் (தமிழ் இசைக்குழு) *பாரிவேந்தர் பைந்தமிழ் விருது -பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்)
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராய புறவலர் பாரிவேந்தர் இதனை அறிவித்துள்ளார். இந்த விருதுகள் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழு மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
|