சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு, நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழகத்தில், அரியலூர் மாவட்டத்தில், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இத்திட்டம் அறிமுகமானதும், "மூன்று மாதங்களுக்குள், "ஆதார்' எண் வாங்குபவர்களுக்கு மட்டுமே, சமையல் காஸ் சிலிண்டருக்குரிய, நேரடி மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் இந்த திட்டம் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் நவம்பர் 1–ந் தேதி முதலும், கடலூர், பெரம்பலூர், கரூர், சேலம், தர்மபுரி, விருதுநகர், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் டிசம்பர் 1–ந் தேதி முதலும் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
|