|
|||||
பான் எண்ணுடன்ஆதார் இணைப்பு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! |
|||||
பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு உத்தரவு சரியானதே என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக கடந்த மே 3- ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வழங்கினர். அதில் அவர்கள் கூறியதாவது: வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதே’’ இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர். |
|||||
by Mani Bharathi on 27 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|