வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் அறிவிப்பு அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் தலைமை செயலகத்தில் தனது துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். வெளிநாடுவாழ் தமிழர்களின் விவரங்களை ஊராட்சி வாரியாக பதிவு செய்வதற்கு பதிவேடு, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி தொலைபேசி எண் மற்றும் அவர்களுக்கான காப்பீட்டு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.
மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்றும் அவர் கூறினார்.
செஞ்சி மஸ்தான் என்று அறியப்படும் கே.எஸ். மஸ்தான் அவர்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வக்ஃபு வாரியம் போன்றவை இவருடைய நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.
|