|
|||||
"இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படவேண்டும்" முதல்வர் மு.க.ஸ்டாலின் |
|||||
"இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படவேண்டும்" முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விதி 110-ன் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் தமிழர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன என்றே கூறவேண்டும். *"முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல் மணிகளின் காலம் கி.மு 1155"." *"3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி நாகரிகத்தைக் காட்சிப்படுத்த பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்" *"இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்பட வேண்டும்" என்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளார் முதல்வர். மேலும் தமிழர்களின் கடல் வழி வாணிபம்,பண்டைய தமிழ் மன்னரின் படையெடுப்புகள் பற்றிய செய்திகள் சேகரிக்கப்பட்டு, அந்தந்த நாட்டுப் பகுதிகளில் உள்ள தொல்லியல் ஆய்வாளர்களோடு இணைந்து தொல்லியல் ஆய்வுகள் நடத்தி அறிவியல் முறை சான்றுகளோடு தமிழர் நாகரீகப் பெருமை நிலை நிறுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் முதல்வர். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் மண்ணிலிருந்து எழுதப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். |
|||||
by R.Gnanajothi on 11 Sep 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|