LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

"இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படவேண்டும்" முதல்வர் மு.க.ஸ்டாலின்

"இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படவேண்டும்" முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விதி 110-ன் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் தமிழர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன என்றே கூறவேண்டும். 

*"முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல் மணிகளின் காலம் கி.மு 1155"."

*"3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி நாகரிகத்தைக் காட்சிப்படுத்த பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்"

*"இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்பட வேண்டும்" என்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளார் முதல்வர்.

சட்டப்பேரவையில் பேசிய போது கீழடி நாகரிகம் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,அப்போதே தமிழ்ச்சமூக மக்களிடம் சிறந்த கல்வியறிவு இருந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டு உள்ளார். கீழடிப் பகுதியின் அரிய பொருள்கள் நாகரீகச் செழுமையை வெளிப்படுத்துவதை தெரிவித்தார். மேலும் சிவகளை அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் பழமை, பொருநை அருங்காட்சியகம், பற்றியும் பெருமிதத்தோடு கூறினார்.

மேலும் தமிழர்களின் கடல் வழி வாணிபம்,பண்டைய தமிழ் மன்னரின் படையெடுப்புகள் பற்றிய செய்திகள் சேகரிக்கப்பட்டு, அந்தந்த நாட்டுப் பகுதிகளில் உள்ள தொல்லியல் ஆய்வாளர்களோடு இணைந்து தொல்லியல் ஆய்வுகள் நடத்தி அறிவியல் முறை சான்றுகளோடு தமிழர் நாகரீகப் பெருமை நிலை நிறுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் முதல்வர். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் மண்ணிலிருந்து எழுதப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

by R.Gnanajothi   on 11 Sep 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.