தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலிடம்
தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முதலிடம் வகிப்பது ஐ.நா வின் ஆய்வறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது. சீனா,பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் நாட்டினர் அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றனர்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்திற்காக கஷ்டங்களைப் பாராமல் பணிபுரிபவர்களாக உள்ளனர். இவ்வாறு அனுப்பப்படும் பணமானது நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய இடத்தினைப் பெறுகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் உறுதிநிலை நிலவுவதற்கும் இவ்வாறு வெளிநாடுவாழ் இந்தியர் அனுப்பும் பணமே காரணமாக உள்ளது என்றால் அது மிகையாகாது.
|